Saturday, December 12, 2009

கிரடிட் கார்டு உபயோகிப்போர் உசார்



  சமிபகாலமாக கிரடிட் கார்டு உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அதை சரியான முறையில் உபயோகித்தால் நல்லது. ஒவ்வெரு பேங்கும் சில விதி முறைகள் வைத்துள்ளது.  கார்டு உபயோகிப்போர் சரியான முறையில் பேங்குக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தை செலுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக செலுத்தினால் மிகவும் சிக்கலைச் சந்திக்க நேரிடும். இது ஒருபுறம் இருக்க நாம் கார்டு நம் கையில் இருக்க வேரு ஒரு நபர் நம் கணக்கில் லட்சக்கணக்கில் பணம், பொருள் வாங்கியிருப்பார்.

   இது எப்படி சாத்தியம் இதோ இப்படியும் நடக்கிறது. ரெஸ்ட்ராரெண்ட், பெட்ரோல்பங், நகைக்கடை இன்னும் சில இடங்களில் நாம் கார்டை உபயோகிக்கிறேம். அப்படி உபயோகிக்கும் போது அங்குள்ள ஊழியர்களால் நம்முடைய கார்டின் அடையாள எண் பதிவு செய்யப்படுகிறது. எப்படியென்றால் ஸ்கிரிம்மர் (படம்) மூலம் நம் கார்டு அவர்கள் கையில் கொடுத்தவுடன் அவர்கள் உள்ளங்கையில் வைத்துள்ள ஸ்கிரிம்மர் மூலம் நம் கார்டில் உள்ள டீட்டைலை பதிவுசெய்து விடுகிறார்கள். பின்பு யூஎஸ்பிகனைக்ட் மூலம் கம்பியூட்டரில் பதிவுசெய்து வெளிநாட்டில் உள்ள அவர்கள் பாஸ்களுக்கு அனிப்பிவிடுவார்கள். அவர்கள் சைனீஸ் மேட் பிளாஷ்டிக்கார்டில் அவர்கள் ஸ்கிரிம்மர் மூலம் பதிவு செய்துவிடுவார்கள். உண்மையான கார்டு பர்சில் நம்மிடம் பத்திரமாக இருக்கும் போலிகார்டுல நம் பணத்தில் பொருள் வாங்கி குவிப்பார்கள். இங்கு உள்ள ஏஜண்டுகளுக்கு கமிஷன் கிடைக்கும். எப்படி எல்லாம் நாட்டில் நடக்குது பாருங்க.

சோ.ஞானசேகர்.

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

//எப்படி எல்லாம் நாட்டில் நடக்குது பாருங்க.//

உண்மைதானுங்க. பகிர்வுக்கு நன்றிங்க

S.Gnanasekar said...

தொடர்புக்கு நன்றி ஆ.ஞானசேகரன் அவர்களே..