Monday, July 23, 2012

தாவரங்களும் பேசுகிறது


  மணிதர்கள்தான் பேசுகிறோம் என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளும், அதன் அது இனத்துடன்  ஒன்றுக்கொன்று பேசுகிறது. தாவரங்களும் பேசிக்கொள்கிறது. செடிகள் காற்றில் ஆடுவதைப் பார்த்திருப்பீர்கள். அவை அவ்வாறு ஆடுவதன்லமூலம் ஒன்றுக்கொண்று பேசுகின்றன என்ற அதிசயத் தகவலைக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள். தாவரங்கள் ஒலிக்கு 'ரெஸ்பான்ஸ்' கட்டுவது மட்டுமல்ல தாங்களே சில ஒலிகளை வெளியிடவும் செய்கினறன என்கிறார்கள்.
  இந்த ஆய்வை மேற்கொண்ட பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அதிசக்தி வாய்ந்த ஸ்பீக்கர்களை பயன்படுத்தினர் அதன்மூலம் சோளப்பயிர்கள் தமது வேர்ப் பகுதியிலிருந்து வேளியிட்ட 'கிளிக்' ஓசையைக் கேட்டனர்.
  காற்றில் செடிகள் தமது விருப்பம் ஏதுமில்லாமல் இயல்பாகவே ஆடுவதுபோலத் தோன்றினாலும், உண்மையில் அவை அப்போது தொடர்ந்து உரையாடிக் கொண்டு இருக்கின்றனவாம்.
  தாவரங்கள் ஏற்படுத்தும் அதே அலைவரிசையிலான ஒலியைத் தொடர்ந்து ஏற்படுத்தியபோது, தாவரங்கள் அதை நோக்கி வளரத் தொடங்கியிருக்கின்றன. தாவரங்கள் பொதுவாக வெளிச்சம் நோக்கி வளரும் என்று நமக்குத் தெரியும். ஒலியும் அற்றை ஈர்க்கிறது என்பது தற்போது உறுதியாகியிருக்கிறது.
  எக்ஸெட்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிடும் தகவல் இன்னும் வியப்பை ஏற்படுத்துகிறது. அதாவது, முட்டைக்கோஸ் தாவரமாளது ஒருவித வாயுவை வெளியிட்டு, வெட்டுக்கிளிகள், செடிகளை வெட்டும் கத்திரிகள் குறித்து பிற தாவரங்களை எச்சரிக்கின்றனவாம்.
  மனிதர்களின் காதுக்குக் கேக்காத ஒலி மொழியில் செடிகள் பேசிக்கொல்கின்றன என்பதற்கு இவ்வாறு உறுதியான ஆதாரம் கிட்டியிருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
  மொழி என்பது மனிதர்களின் கண்டுபிடிப்பு என்று இனியும் நாம் பெருமையடித்திக் கொள்ள முடியாது. இனிமேல் நாம் செடிகளை வெட்டுமுன்பு அதற்கும் உயிர் இருக்கிறது, என்பதை மனதில் வைக்கவும். நமக்கும் உயிர் வாழ உணவும் சுவாசிக்க பிராணவாய்வும் கொடுக்கிறது என்பதை மறந்து விடவேண்டாம்.

மரம் வளர்ப்போம் வரும் சந்ததி காப்போம்.....

No comments: