Thursday, July 5, 2012

பருவநிலை மாற்றமும் விலங்குகளும்!

   அழிந்துவரும் உயிரினங்களில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து அறிய ஓநாய்கள் உதவும் என்று வி்ஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
இதுதொடர்பாக, அமெரிக்காவின் எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் ஓநாய்களின் எண்ணிக்கை குறித்து வி்ஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாறிவரும் பருவநிலை எவ்வாறு ஓநாய்களின் எண்ணிக்கை, உடல் அளவு, மரபணுவியல் மற்றும் பிற உயிரியல் அம்சங்களில் தாக்கத்தை எற்படுத்துகிறது என்று அறிவதற்கான ஒரு வழியைக் கண்டுபிடித்தனர்.
   அதன்படி, எந்த மாதிரியான பருவநிலை மாற்றம், விலங்குகளின் எண்ணிக்கையிலும், அவற்றின் பரிணாமத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தங்களால் கணிக்க முடிகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
   தற்போது கிடைத்திருக்கும் முடிவுகளைக் கொண்டு, எதிர்காலத்தில் பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப ஓநாய்களின் எண்ணிக்கை எவ்வாறு மாறும் என்று அறிந்து, அதுகுறித்து வன உயிரினக் காப்பாளர்களுக்குத் தெரிவிக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.
   லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்கள் தலைமையிலான இந்த ஆய்வில், அமெரிக்க அரசின் உள்துறை, உடா மாநநிலப் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆகியவற்றைச் சேர்ந்த  ஆய்வாளர்களும் பங்கேற்றனர்.
   சுற்றுச்சூழல் மாறுபாட்டால் உயிரினங்களின் உடல் அளவு, எடை போன்றவற்றில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களும் எதிர்காலத்தில் அந்த உயிரினத் தொகுப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுவதால் இந்த ஆய்வு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

வனவிலங்குகள், பறவைகள் காத்து இயற்கையை காப்போம்...

No comments: