Tuesday, July 3, 2012

உலகப் பாரம்பரிய இடமாக "மேற்குத் தொடர்ச்சி மலை"

   ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு சார்பில் உலகப் பாரம்பரிய இடமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி அறிவிக்கப்பட்டுள்ளதை இந்தியாவிற்கு கிடைத்த அங்கிகாரம். ஐந்து மாநிலங்களை இணைக்கும் அழகிய மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர், உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம் பெற்றது. இதற்கு 17 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களை இணைக்கும் மிகப்பெரிய மலைத் தொடர் மேற்குத் தொடர்ச்சி மலை. நாட்டிற்கு அதிகளவு தென்மேற்குப் பருவ மழை கிடைக்க இந்த மலைத் தொடர் பெரிதும் உதவி வருகிறது.
    1,600 கி.மீ. தூரம் நீண்ட மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியல் அமைப்பு, பருவமழையைத் தருவிக்கும் ஆற்றல், மிதமான வெப்பநிலை, பல்லுயிர் பெருக்கத்துக்கு ஏற்ற சூழ்நிலை ஆகியற்றை கருத்தில் கொண்டு உலகப் பாரம்பரிய இடம் என்ற அந்தஸ்தை வழங்குவதாக யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் குழு அறிவித்துள்ளது.
    இமய மலையைவிட பழமையான மேற்குத் தொடர்ச்சி மலையில் உலகின் மிக அரிதான 325 வகை உயிரினங்கள் உள்ளன. இதுவே (இந்தியாவிற்கு) மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாம்.

இயற்கை காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன, பெருமளவில் மனிதகுலத்திற்கு...

No comments: