Monday, July 16, 2012

பருவ நிலை மாற்றத்தால் கடல் பாசிகள் மாயம்: மீன்கள் அழியும் ஆபத்து

   பருவ நிலை மாற்றத்தால் கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இயற்கை அழிவுகள் உருவாகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் 2600 விஞ்ஞானிகள் ஒன்றுகூடி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 
   பருவ நிலை மாற்றம் கடலில் தரை பகுதியை கடுமையாக பாதித்துள்ளது. கடல் நீர் தொடர்ந்து வெப்பமாக மாறி வருகிறது. இதனால் இயற்கை சூழ்நிலை மாறி கடலில் உள்ள பொருட்கள் அழிய தொடங்கி உள்ளன.
   குறிப்பாக கடல் பாசி, தாவரங்கள், பவள பாறைகள் போன்றவை அழிந்து வருகின்றன. இவை இருந்தால்தான் மீன்கள் வளர முடியும், உணவும் கிடைக்கும். சூழ்நிலை மாறி வருவதால் மீன்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவையும் அழியும் நிலையில் உள்ளன.
    கரீபியன் கடல் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்குள் 75ல் இருந்து 85 சதவீதம் வரை பவள பாறைகள் அழிந்து உள்ளன. அதேபோல ஆஸ்திரேலிய கடல் பகுதியிலும் பவள பாறை மற்றும் கடல் பாசிகள் அழிவது அதிகமாக உள்ளது. அங்கு கடந்த 50 ஆண்டுகளில் 50 சதவீதம் அழிந்து விட்டன.
    ஆசிய கடல் பகுதியில் இந்தோனேஷியா, மலேசியா, பவுபாநியூகினியா, பிலிப்பைன்ஸ் பகுதியில் கடல் பவள பாறைகள் அழிவது அதிகமாக உள்ளது. அங்கு 30 சதவீத கடல் பாசி தாவரங்கள் அழிந்து விட்டன.
   இந்த பகுதியில் 3 ஆயிரம் அரியவகை மீன்கள் அழியும் நிலையில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பெரும்பாலான உயிரினங்கள் அழிந்துவிடும். எனவே இதை காப்பாற்ற உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இயற்கையின் அதிசயம் கடல் வாழ்  உயிரினம்...

No comments: