Friday, August 5, 2011

மிளகு

    மிளகு இந்தியாவில் பெரும்பாலும்  மலபார் கடற்கரை தென் இந்தியாவின் வெப்பமான, ஈரப்பதமான பகுதியில் விளையும். தமிழ்நாட்டிலும், கேரளாவிலும்,  மலைப்பகுதி எஸ்டேட்களிலும், தமிழகத்தில் ஊட்டி, குன்னூர், ஏலகிரி, ஏற்காடு மலைப்பகுதி எஸ்டேட்களிலும் குடகு மலையிலும் அதிகமாகமான  இடங்களில் மிளகு பயிரிடப்பட்டுகிறது. இந்த பகுதியில் தரம் உயர்ந்த மிளகு உற்பத்தியாகிறது, தாவரங்கள் 3 ஆண்டுகளுக்கு பிறகு பழம் தரத் துவக்குகின்றன 40 ஆண்டுகள் வரை ஒவ்வொரு மூன்றாவது ஆண்டும்  தொடர்ந்து பழம் கொடுக்கிறது. இது  சிவப்பு மாறும், பச்சை நிறத்தில், கோள  வடிவத்தில் இருக்கும்.
    இந்தியாவிலிருந்து ஐரோப்பா, சைனா, மத்திய கிழக்கு நாடுகள் வட ஆப்பிரிக்காவிற்குப் பரவிற்று. மிளகு ஒரு கொடிவகையைச் சார்ந்தது. இதன் இலைகள் வெற்றிலை போல் பெரிதாக இருக்கும் மரத்தில் பற்றி வளரும்.
    இந்திய சர்வதேச தரமான மிளகு அதிக அளவு ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. கேரளா தென் மாநில மொத்த மிளகு உற்பத்தியில் 90% கொண்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் முக்கிய உற்பத்தி மையங்கள் உள்ளன.
   சுக்கு, மிளகு திப்பிலி இந்த மூன்றையும் 'திரிகடுகம்'னு சொல்வாங்க. சித்த மருந்துகள்ல பெரும்பாலும் இந்த மூன்றுல ஏதாவது ஒன்று கண்டிப்பாக இருக்கும். ஒரு காலத்தில் மிளகு வானிகம் கொடிகட்டிப் பறந்தது. அந்தக் காலத்தில் ஒருவர்கிட்ட இருக்கிற மிளகோட அளவை வைத்தே, அவரோட செல்வத்தைக் கணக்கிடுவாங்கலாம். எல்லா சமையலுக்கும் சுவை சேர்க்க மிளகு பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான் சாப்பட்டு மேஜையில் உப்பையும், மிளகையும் வச்சிருப்பாங்க.
    கருமிளகு, வெள்ளைமிளகு வால்மிளகு என்று மூன்று வகை இருக்கிறது. காரமும், சூடும் நிறைந்த உணவுப் பொருள் என்பதால், நன்கு பசியைத் தூண்டிவிடும் சக்தியும், உணவை செரிக்கச் செய்யும் திறனும் கொண்டது. மேலும், சுவை உணர்வை அதிகரித்து, உமிழ்நீரை நன்கு சுரக்கச் செய்யும். சுவாசக்கோளாறுகளை நீக்கும்; சிறுநீரைப் பெறுக்கும்; உடலை சுறுசுறுப்பாக்கும்.
     இருமலை குணப்படுத்த மிகச் சிறந்த வீட்டு மருந்து, மிளகு. இரண்டு அல்லது மூன்று மிளகை வெறும் வாயில் போட்டு மென்று, அந்த சாற்றை விழுங்கினால் கொஞ்ச நேரத்தில் இருமல் கட்டுப்படும். மிளகின் காரத்தைத் தாங்க முடியாதவங்க, மிளகைப் பொடியாக்கி பாலில் கலந்து குடிக்கலாம்.

இயற்கையின் எழிலினை நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான்?

2 comments:

Karthikeyan Rajendran said...

நல்ல தகவல் சார்!!!!!!!!!! நன்றி!!!!!!!

S.Gnanasekar said...

நன்றி நன்பர் !ஸ்பார்க் கார்த்திக் அவர்களே.