Thursday, May 19, 2011

நமது நாடு 21. பாலைநில மக்கள்


     மணல்வெளிகள் பாலை நிலம் எனப்பட்டன. அவைகளின் இடை இடையே புல் பூண்டுகளும் மரஞ்செடிகளும் கானப்பட்டன. வெயிலின் வெம்மையால் கரிந்துபோகாத பாலை என்னும் மரங்கள் அவ்விடங்களில் பெரிதும் வளர்ந்தன. ஆகவே மணல் வெளிகளும் அவைகளைச் சார்ந்த இடங்களும் பாலை என்னும் பெயர் பெற்றன பாலை நிலம் மிக வெப்பமுடையது.

    அங்கு வாழ்ந்த மக்கள் புளிஞர், வேடர் எயினர், மறவர் எனப்பட்டனர். அவர்கள் குன்றுகளில் வாழ்ந்த குறவரிலும் பார்க்க நாகரிகத்தில் கீழ் நிலையினர். அவர்கள் கூலங்களைப் பயிரிடவும் ஆடுமாடுகளை வளர்த்து அவை தரும் பயன்களைப் பெறவும் அறிந்திருக்கவில்லை, வேட்டை ஆடுதலாற் கிடைக்கும் விலங்குகள் பறவைகளின் ஊனையே அவர்கள் பெரிதும் உண்டு வாழ்ந்தனர்.

   அவர்கள் வழிப்பறிப்போரும், கொள்லையிடுவோருமாயிருந்தனர். சில சமயங்களில் அவர்கள் அயல் இடங்களிற் சென்று ஆடுமாடுகளைக் கொள்ளையிடுவர். வணிகர் பண்டங்கலைக் கழுதைகள் மீது ஏற்றிக்கொன்டு மணல் வெளிகளைக் கடந்து செல்வார்கள். வேடவர் அவர்களைக் கொன்று பண்டங்களைக் கொள்ளையிடுவர். ஆன்மையின் அவர்கள் முற்காலங்களில் மணல் வெளிகளைக் கடந்து செல்ல நேர்ந்தால் கூட்டங்களாக ஆயுதங்கல் தாங்கிச் செல்வது வழக்கம். அக்கால வணிகர் சிறந்த போர்வீரர்களாகளாயும் இருந்தனர்.

    எயினர் சிறு குடிசைகள் கட்டி வாழ்ந்தனர். அவை ஈந்தின் ஓலையால் வேயப்பட்டிருந்தன. அவைகளின் மேற்புரம் முள்ளம்பன்றியின் முதுகுபோல் தோன்றின. வேடவப்பெண்கள் பாரையினால் எறும்புப்புற்றுகளைக் கிண்டி எறும்புகள் சேர்த்து வைத்திருக்கும் புல் அரிசியைச் சேர்த்தார்கள் அதனை முற்றத்தே கிடக்கும் நில உரலில் தீட்டி ஆக்கி, வேட்டைநாய் பிடித்துக்கொண்டுவந்த உடும்பின் இறைச்சியோடு தேக்கிலையில் இட்டு உண்டனர். அவர்கள் மாந்தோலில் படுத்து உறங்கினார்கள், சங்குமணி, சோகி, என்பு முதலியவைகளை நகைகளாக அணிந்தனர்.

  பாலை நில மக்கள் காளியைத் தமது குல தெய்வமாகக்கொண்டு வவிபட்டனர். காளிக்கு ஊர்தி சிங்கம். வேடவர் காளிக்கு உயிர்ப்பலி இட்டு வழிபட்டனர். மக்கள் வேடன், இடையன், உழவன் என்ற மூவரின் வாழ்க்கை நிலைகளை ஒன்றன்பின் ஒன்றாக முறையே அடைந்தார்கள். அவைகளில் வேடரின் வாழ்க்கைமுறை முதல் நிலையானது. இந் நிலையில் மக்கள் உணவு ஒன்ருக்காக மாத்திரம் முயன்றுகொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள் ஓர் இடத்தில் தங்கி ஆறியிருந்து நாகரிகம் பெற முடியவில்லை.

மழைக்காடுகள் இற்கையின் பொக்கிஷம்...

No comments: