Friday, March 20, 2009

பேரையூர்


பேரையூர்
இந்ஊர் பெயரில் நிறைய ஊர்கள் இருக்கிறது இது மதுரை மாவட்டத்தில் உள்ளது. இதை சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு இந்த ஊர்தான் பெரிய டவுன். ஒரு முக்கிய விசயம் இந்த ஊரின் பெயர் முத்துக்குமாரசாமி தும்பிச்சநாயக்கணூர் பிரிட்டிஸ் காலத்தில் வந்த அதிகாரி ஊர் பேர் என்ன என்று கேட்டதற்க்கு ஊர் மக்கள் ஜமின்தார் பெயர்தான் ஊர் பேர் என்று சொல்ல பேரேஊரா என்று கேக்க அன்றிலிருந்து பேரையூர் ஆனது என்று சொல்லக் கேள்வி எவ்வளவு உண்மை என்று தெரியாது நாங்கள் படிக்கும் போது இங்குதான் உயர் நிலைப் பள்ளிக்கு வரவேண்டும். இங்கு நான் 7ஆம் வகுப்பு வந்து சேர்ந்தேன். முதலில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது நான் அடிக்கடி ஸ்கூல் மாரியதால் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை கூடிய சீக்கிரம் நிறைய நன்பர்கள் வட்டம் அதிகமாகியது 6,7,8 வகுப்புகள் ஊருக்குள் இருக்கும் 9,10,11 ஆகிய வகுப்புகள் முக்கு ரோட்டில் இருக்கும் முக்கு ரோடு என்றல் நான்கு ரோடு சேரும் கல்லுப்பட்டி ரோடு, உசிலம்பட்டி ரோடு, சாப்டூர் ரோடு, ஊருக்குள் வரும் ரோடு. ஆண்கள் மேல் நிலை பள்ளி, பெண்கள் மேல் நிலை பள்ளி இது ஊருக்குள் உள்ளது. எல்லா மதத்தவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் எந்த பாகுபாடும் இல்லாமல். மேற்கு தொடர்ச்சி மலை பக்கததில் இருக்கிறது ஆனால் வறச்சியாக இருக்கும். ஸ்கூல் பக்கத்தில் உள்ள மலை மண்மலை என்று பெயர் அடுத்து மெட்டை மலை உள்ளது இதன் அடிவாரத்தில் சுப்பிரமணி கோவில் உள்ளது. இதற்க்கு எதோ ஒரு கிரி ஞாபகம் இல்லை தெரிந்தவுடன் ஞாபகப்படுத்துகிறேன். இது ஒரு பழைமையான கோவில். இங்கு சரவணபொய்கை உள்ளது பொய்கையில் குகை போன்ற அமைப்பில் நீர்விழும் தூம்புவா கல்லில் செதுக்கப்பட்டுள்ளது அதில் எப்போதும் எந்த காலத்திலும் தண்ணீர் வந்துகொண்டே இருக்கும்தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கும். மாமரம் நிறைய உண்டு நாங்கள் மாங்காயை அடித்து சாப்பிட்டு இருக்கிறேம். ஸ்கூல் அரை நாள் லீவு என்றால் பாதி ஸ்கூல் அங்குதான் இருக்கும் ஸ்கூலுக்கு போகாமல் கட் அடித்து திரிபவர்கள் எல்லாம் இங்குதான் இருப்பார்கள் இதுதான் எங்களுக்கு சரணாலயம். மெட்டைமலை மேல் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அங்கு ஒரு இஸ்மாமிய தர்க்கா உள்ளது. ஸ்கூல் ஆசிரியர்கள் எல்லாம் நன்றாக பாடம் எடுக்கூடியவர்கள் நாம்தான் சரியாக அவர்களை பயன்படுத்தவில்லை. ஆனால் இப்பெழுது ஊர் ரெம்ப மாரிவிட்டது. அப்போது இங்கு உள்ள ஒரே பொழுது போக்கு முருகன் சிணிமா தியேட்டர் 45 பைசா டிக்கட் அப்போது. பள்ளியில் இருந்து பிக்னிக் செல்லும் இடம் சாப்டடூர் கேணி இங்கு மலை மேல் செல்லவேண்டும் ரெம்ப நல்ல இடம். கேணியில் குளித்து கும்மாலம் போட்டு எடுத்துச்சென்ற சாப்பாட்டை சாப்பிட்டு மலைமேல் ஏரி விளையாடி கலைத்து மீண்டும் சாப்டடூர் வந்து பஸ்பிடித்து பேரையூர் வந்து அவரவர் ஊர் போய் சேர்வேம். இன்னும் ஒரு சிறப்பு எல்லா ஊர்களிளும் சந்தனக்கடை இருக்கும் ஆனால் இங்கு கருப்பு கலவை சந்தனம் பெயர் பெற்றது வாப்பா சந்தனக்கடையில் என்னுடைய நன்பரின் வாப்பா இருப்பார் அவரை நாங்கள் மாமா என்றுதான் சொல்வோம் எங்களை மாப்புள்ளை மார்கள் என்று சொல்வார்கள். கடையில் நிறைய வித்தியாசமான பாட்டில்கள் இருக்கும் அதில் கலர் கலரா தைலவகை சென்ட், அத்தர், பண்ணீர்,புணுகு, ஜவ்வாது என்னென்ன வாசனை திதவியங்கள் உண்டே அத்தனையும் இருக்கும் சந்தனம் கலக்கும் போது ஒரு சைக்கிள் போக்ஸ் கம்பியை பாட்டலில் விட்டு சந்தனத்தில் இரண்டு சொட்டு விட்டுட்டு கம்பியை நம் சட்டையில் தடவி விடுவார் சட்டையில் தடவாதீர்கள் மாமா நார்துன்னு சொன்னா சென்ட் போட்டாத்தான் பொண்ணுங்க பின்னால் வரும் என்று கேலிசெய்வார் ரெம்ப நல்ல மனிதர். அடுத்து ஒரு மனிதர் கிட்டு அய்யர் இவர் ஹோட்டலில் படிக்கிர பசங்க சாப்பிட போனால் நன்றாக பேசுவார் பைசா கொஞ்சமாக கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார் என்னுடைய பசங்கள்தான் படிக்கமாட்டான்கள் நீங்களாவது நன்றாக படியுங்கள் என்பார் இவர்கடையில் எனக்கு பிடித்தது பூரி கிழங்கு அதன் சுவை இன்னும் என் நாக்கில் இருக்கிறது. இப்பொழுது எத்தனையே இடத்தில் சாப்பிட்டும் அதற்க்கு ஈடு இல்லை. அடுத்து பஸ்டாண்ட்டில் உள்ள பழய பஸ்டாண்ட்டில் பரோட்டா கடை இங்கு நைட்தான் எங்கள் படைகள் செல்லும் அப்பொழுதான் ஒரு தாத்தா இருப்பார் அவரும் நல்லமனிதர் கொடுகிர காசை வாங்கிக்கொண்டு படிக்கிற பசங்க நல்லா சாப்பிடடுங்கடா என்று உரிமையேடு சொல்வார். இதனால் அவருக்கும் அவர் மகனுக்கும் ஒருநாள் சண்டை வந்து விட்டது சர்வர் போட்டுக் கொடுத்துவிட்டார். ஆனால் தாத்தா இது நான் வைத்தகடை பசி, படிப்புனா என்ன என்று உனக்கு தெரியாது ஆனால் எனக்கு தெரியும் பசிக்காக சின்னவயதில் வேலை செய்திருக்கிறேன் வசதி இருந்தும் நீ படிக்கவில்லை. அதனால் நான் தானம் பன்னவில்லை அவன்களும் சும்மா சாப்பிடவில்லை காசு கொடுத்துதான் சாப்பிடுகிறான்கள் என்று சொல்வார். அதனால் அவர் பையன் இருக்கும்போது நாங்கள் அதிகம் போகமாட்டோம். ரெம்ப நல்லமனிதர். அடுத்து நாங்கள் தங்கியிருந்த ரூம் பரிட்சை நேரத்தில் ஒரு 3 மாதம் தங்கியிருப்போம் ஒரே ரூம் 20 பேர்க்குமேல் தங்கியிருப்போம் சிலபேர் காசு கொடுக்க முடியாது அர்களும் சேர்ந்து தங்கியிருப்போம் இடத்தின் சொந்தக்காரர் நல்லமனிதர் படிக்கிற பையன்களிடம் அதிகம் பைசா வாங்க மாட்டார் ஆனால் மிகவும் கண்டிப்பானவர் எதுவும் தப்பு பண்ணினால் தண்டிக்காமல் விடமாட்டார் அவங்க கணக்குபிள்ளை தான் வந்து அவ்வப்போது மிரட்டுவார் எப்பவும் அந்த ரூம் படிக்கிபசங்களுக்குதான் கொடுப்பார் அது தான் பெரியரூம். இப்பொது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. இன்னும் நிறைய பேசஇருக்கிறது மீண்டும் பேசலாம். ஞானசேகர்.

2 comments:

ponshesha said...

hello guna, which year you were study in peraiyur? i was also my stduy in peraiyur. i see the your blogg jus know. could you contact me? pls see my mail id

ponshesha@gmail.com

S.Gnanasekar said...

எனது பதிவிற்கு வந்தமைக்கு நன்றி நன்பர் Ponshesha அவர்களே. எனது ஊர் மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் உள்ள கூவலப்புரம் எனது ஊர். நான் 1977 ஆம் வருடம் பள்ளி படிப்பை முடித்தேன் தற்போது சென்னையில் இருக்கிறேன் தி இந்தியன் எக்ஸ்பிரசில் பணிபுரிகிறேன்.