Thursday, March 5, 2009

பாஸ்டன் படுகொலையின்

இன்று...

மார்ச் 5, 1770 பாஸ்டன் படுகொலை

பாஸ்டன் படுகொலையின் ஒரு செதுக்குதல் பாஸ்டன் படுகொலை (Boston Massacre) மார்ச் 5, 1770இல் பாஸ்டன் நகரில் பிரிட்டீஸ் படையினர்களால் நடத்திய படுகொலையை குறிக்கும்.
1767இல் பிரிட்டீஸ் அரசு புதிதாக மக்கள் விரும்பாத பல வரிகளை அமெரிக்காவில் ஆரம்பித்தது. பெரும்பான்மையாக பாஸ்டன் நகரில் இதற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதனால் பிரிட்டீஸ் அரசு படையினர்களை பாஸ்டனுக்கு அனுப்பியுள்ளது. இப்படையினர்களுக்கும் பாஸ்டன் மக்களுக்கும் இடையில் பல சிறிய வன்முறைகள் பாஸ்டன் படுகொலைக்கும் முன்பு நடந்தன.
மார்ச் 5, 1770 அன்று ஒரு பாஸ்டனியரும் ஒரு பிரிட்டீஸ் படையினரும் வாதாடு செய்துள்ளனர். பிறகு பல்வேறு மக்கள் கூட்டமாக வந்து படையினர்கள் மீது பனி உருண்டைகளை எறிந்தனர். இந்த வன்முறை வளந்து படையினர்கள் கூட்டம் மீது கைதுப்பாக்கிகளை சுட்டு மொத்தத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் காரணமாக பல்வேறு அமெரிக்க குடியேற்ற நாடுகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்து அமெரிக்க புரட்சி தொடங்கியுள்ளது.
விக்கிபீடியாவில் இருந்து.

நன்றி

ஞானசேகர்

No comments: