Monday, March 9, 2009

மூணார்


மூணார்


இந்த ஊர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். நான் மதுரை தமிழனாக இருந்தாலும் பிறந்தது மூனாரில். நல்ல இயற்க்கை சூழ்ந்த மழை வாசஸ்தம். தேயிலை எஸ்டேட் நிறைந்த இடம். மூன்று ஆறுகள் சந்திக்கும் இடம் அதனால் மூனார் என்று அழைக்கப்படுகிறது. முத்திரப்புழா, சண்டுவரை மற்றும் குண்டலா என்ற மூன்று ஆறுகள் தான் அவை. கண்கவர்மேகங்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சி. தமிழ்நாட்டிலிரிருந்து போடிநாயக்கனூர் வழியாக செல்ல வேண்டும். இந்த நகரை அடையும் முன்னர் போடி மெட்டு என்ற அழகிய மலையுச்சியே கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள எல்லையாகும்.


முருகன் கோவில் ஒன்றும் உண்டு. இங்கு கார்த்திகைப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும்.
தேயிலைத் தோட்டத் தொழிளாலர்களாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரள நகரம். எங்கள் ஊர் மக்கள் இங்கு முன்பு அதிகம் பேர் வேலை செய்தார்கள்.
சின்னவயதில் இருந்த இடம் இண்னும் எண் கண்முன் இருக்கிறது என்னுடைய பையன்களை அழைத்துக் கொண்டு போகவேண்டும் என்று ரெம்ப நாள் ஆசை.

No comments: