Monday, February 9, 2009

உறுதிமொழி

உறுதிமொழி

1.யாரையும் ஏமாற்ற மாட்டேன்.

2.யாருக்கும் கஷ்டத்தைக் கொடுக்கமாட்டேன்.

3.யாருக்கும் கெட்டதை சொல்ல மாட்டேன்.

4.நன்றாக இருப்பவத்களைப் பார்த்து பொறாமைப்பட மாட்டேன்.

5.மற்றவர்களைக் கிண்டலாகப் பேசி, மற்றவர்ள் தவருகளை பெரிதாக்கி, வீண் அரட்டை அடிக்க மாட்டேன்.

6.தவறான வழியில் வரும் பணத்துக்கு ஆசைப்பட மாட்டேன்.

7.எந்த தவறான வழிக்கும் போக மாட்டேன்.

8.என் வேலையை ஒழுங்காக செய்வேன்.

9.என் வேலையை உண்மையாகச் செய்வேன்.

10.வேலை செய்யும் போது அநாவசியமாக அடிக்கடி பேசமாட்டேன்.

11.ரெம்ப அவசியம் இருந்தால் மட்டுமே பொய் பேசுவேன்.சாதரண விஷயத்துக்கெல்லாம் பொய் பேசமாட்டேன்.

12.அம்மா அப்பாவிற்க்கு மரியாதை கொடுப்பேன்.

13.வயதில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பேன்.

14.இன்றைக்கு என்னால் முடிந்த ஒரு சின்ன உதவி மற்றவர்களுக்கு செய்வேன்.

15.கடவுளை வணங்கிக் கொம்டு இதையெல்லாம் சொலலி விட்டு அதன் படி நடக்கவில்லை என்றால் அதற்கும் பெரிய தண்டணை பின்னால் கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். அதனால் கடவுளிடம் தண்டனை வாங்க மாட்டேன், சென்னபடி நடப்பேன்.

மேலே எழுதியுள்ள உறுதிமொழியை வீட்டில் கடவுளின் படத்திற்கு முன்னால் நின்று கொண்டு படிப்பது மிகுந்த நன்மையைக் கொடுக்கும்.

No comments: