Tuesday, October 29, 2013

'மம்மொத்துகளின் அழிவுக்கு காலநிலை மாற்றமே காரணம்'


 புராதன காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மம்மொத் எனப்படும் உரோமங்களுடன் கூடிய யானைபோன்ற ஆனால் அதனையும் விடப் பெரிதான விலங்குகளின் அழிவுக்கு காலநிலை மாற்றம்தான் காரணம் என்பதற்கு ஆய்வாளர்கள் மேலும் வலுவன ஆதாரங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
இவை மனிதர்களால் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று முன்னர் நம்பப்பட்டது.

 காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக முன்னர் நம்பப்பட்டதற்கு நீண்ட காலம் முன்னதாகவே இவை அழிந்துபோனதாக அவற்றின் மரபணுக்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் காண்பித்தன.
ஐரோப்பாவில்கூட ஒரு வகை மம்மொத்துகள் வாழ்ந்ததாகவும் 30,000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவை அழிந்துவிட்டதாகவும் அறியப்பட்டுள்ளது.
பிரிட்டனின் விஞ்ஞான ஆய்வு நிலையமான றோயல் சொஷைட்டியின் அறிக்கை ஒன்று கூறிகிறது.

 காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்... 

No comments: