Thursday, January 27, 2011

கங்கை நதி

  பாரத மக்கள் தெய்வமாகக் கருதும் கங்கை, வற்றாத நீரும், குதறையாத வளமும் வழங்கும் ஜீவநதி. கங்கை மீதிருக்கும் மரியாதை குறைந்து விடலாகாது என்று அதன் பிறப்புக்கு, கடவுளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு புராணக் கதையும் வழங்கப்படுகிறது.
  கைலாயத்தில் பார்வதி சிவனின் கண்களைப் பொத்தினதினார். இருண்ட அகிலத்துக்கு ஒளியூட்ட சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதந் வெப்பம் தாக்கியதால் பார்வதியின் கைகளில் வியர்வை முத்துக்கள் அரும்பின. அன்னை கைகளை உதறினாள். உதிர்ந்த துளிகள் வெளளமாகத் திரண்டன. சிவன் அந்த வெள்ளத்துக்கு  கங்கை எனப் பெயரிட்டு, அள்ளி எடுத்து தலையில் முடிந்து கொண்டார். கங்கை புனிதமடைந்தது. மக்களின் பாவங்களைக் கரைக்கும் சக்கியும் பெற்றது.
  கங்கையைப் பூமிக்கு வரவழைத்தால் மக்களின் பாவங்களைப் போக்கிவிடலாம் என்று எண்ணிய பகீரதன் என்னும் அரசகுமாரன் சிவனைக் குறித்துத் தவம் புரிந்தான்.
  அவனுக்கும், மக்களுக்கும் அருள் புரிய, மஹாவிஷ்ணு கங்கையிடம் பூமிக்கச் செல்லுமாறு கூறியதாகவும், கங்கையும் பூமி நோக்கிப் பாய்ந்தாள் என்றும் அந்தக் கதை சொல்லப்படுகிறது.
  இமயமலையின் இருபத்து இரண்டாயிரமாவது அடி உயரத்தல் படர்ந்திருக்கும் பனி உருகி நதியாகப் பாயத் தொடங்குகிறது. சற்று தூரம் ஓடி மலைப் பிளவுக்குள் மறைந்து நிலமட்டத்தில் இருந்து பத்தாயிரத்த முன்னூறு அடி உயரத்தில் வெளிப்படுகிறது. பகீரதனின் தவத்தால் பூமிக்கு வந்தது என்று நம்பப்படுவதால் நதிக்கு இங்கு பாகீரதி என்று பெயர்
  கங்கை இந்தியாவின் முக்கிய ஆறாகும். இமய மலையில் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதியானது, தேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது. பிறகு உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று, ஹூக்லி, பத்மா என இரு ஆறுகளாக பிரிந்து முறையே மேற்கு வங்காளம், வங்கதேசம் வழியாகச் சென்று மிகப்பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கங்கை ஆறு மொத்தம் 2507கிமீ ஓடுகிறது. ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பட்னா, கொல்கத்தா ஆகியவை இவ்வாற்றின் கரையில் அமைந்த முக்கிய நகரங்களாகும்.
  வங்கதேசத்தில் கங்கையானது பத்மா என அழைக்கப்படுகிறது.

  கங்கை பிறப்பெடுக்கும் இடத்திலிருந்து பதினாறு கி.மி. தொலைவில் அதன் கரையில் முதல் கோயில் அமைந்துள்ளது. அதன் பெயர் கங்கோத்ரி. 250 கி.மி. பயணம் செய்தபின் கங்கை ஹரித்வாரைத் தொடுகிறது. இங்கு கங்கையுடன், யமுனையும் கலக்கிறது.
  பயணத் துவகத்திலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் கங்கை, அலஹாபாதைக் கடந்தவுடன் காசியைத் தொடுவதற்காக வடக்கு நோக்கிப் பாய்வது ஓர் ஆச்சரியம்!
   கங்கையில் ஏராளமான மீன்கள் உள்ளன. அவற்றைப் பிடித்து மீனவர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள். இமயத்தில் படர்ந்திருக்கும் பனி உருகிக் கொண்டே இருப்பதால் கங்கையில் நீர் வற்றுவதே இல்லை. நீர் பாசனத்துக்கு பயன்பட்டு ஏராளமான விவசாயிகளின் வாழ்வாதாரமாக கங்கை விளங்குகிறது.
  தூய்மையான கங்கையில் ஆலைக் கழிவுகள் கலக்கப்பட்டு நீர் மாசடைந்து கொண்டே போவதால் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் விரைவிலேயே கங்கை எதற்கும் பயன்படாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளதாகக் கவலைப்படுகிறார்கள்.
  காசியின் விளிம்பைத் தொட்டுச் செல்லும் கங்கையின் கரையெங்கும் கடவுளர்களின் கோயில்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட படித்துறைகள். மக்கள் நதியில் நீராடுகிறார்கள், புஷ்பாஞ்சலி செய்கிறர்கள், தீபங்களை ஏற்றி, தெப்பங்களாக மிதக்க விடுகிறார்கள். இவ்வளவு மரியாதைகளையும் ஏற்றுக் கொள்ளும் கடவுள்காம்தான் கங்கையை காப்பாற்ற வேண்டும்!

இயற்கையின் கொடை நதிகளை மாசுபடாமல் இருக்க உதவுவோம்.

No comments: