Saturday, September 4, 2010

இயறக்கை நமக்கு என்ன தருகிறது?

    இயற்கைதான் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், பூமி தோன்றியது முதல் தாய் போல அனைத்து உயிரினங்களையும் காலங்காலமாக சந்தோஷமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பொழுதைக் கழிப்பதற்ககு பணம் சேர்ப்பதற்கு இற்கைதான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது.

   காடுகள், புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், கடற்கரையோர கழிமுகப் பகுதிகள், மீன்வளம் மிகுந்த ஆழ்கடல் பகுதிகள் உள்பட இற்கையின் பல்வேறு அம்சங்கள், நாம் உயிர் வாழத்தேவையான காற்று, நீர், உயிர்சத்து, ஊட்டச்சத்து போன்ற வற்றை உற்பத்தி செய்து வருகின்றன. நம்மிடம் எந்தப் பிரதிபலனும் எதிர்பாரமல் இவ்வளவையும் செய்து கொண்டிருகின்றன. இவை அனைத்தின் உற்பத்தியும் அதிவேகமாகக் குறைந்து வருவதைப் பற்றித்தான் விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

  உலகிலுள்ள 650 கோடி பேரும் இயற்கையைச் சார்ந்தே வாழ்க்கை நடத்தினாலும் அதிலிருந்து நாம் வெகுதுரம் விலகி வந்துவிட்டோம். இற்கை வளங்களின்றி நம்மால் வாழ முடியாது என்பதை இந்த நிலையிலும் உணர மறுக்கிறோமா? ''இற்கை இன்றி நம்மால் வாழ முடியுமா?'' இந்தக் கேள்வியை மீண்டும் ஒரு முறை நமக்குள்ளேயே சிந்தித்துப் பார்ப்போம்.இயற்கையைப் பாதுகாப்போம்.

இயற்கையோடு ஒத்து வாழுங்கள்.


நன்றி தினமணி, சிறுவர்மணி.

சோ.ஞானசேகர்.

No comments: