Friday, August 6, 2010


கேள்விக்குறி
  "?' - இந்தக் கேள்விக்குறி, புராதன கிரேக்க-லத்தீன் மொழிகளிலிருந்து வந்தது. தொடக்க காலத்தில் நிறுத்தற் குறிகள் (Punctuation), வாசகங்களின் அர்த்தத்தை சரியாகப் புரிந்துகொள்வதற்காக பயன்படுத்தப்படவில்லை. அக்காலத்தில் உரக்க வாசிப்பதுதான் வழக்கமாக இருந்தது. வாசிக்கும்போது, வாக்கியத்தின் அம்சங்களுக்கு அழுத்தம் கொடுப்பது எப்படி, தற்காலிகமாக எங்கே இடைநிறுத்தி மூச்சுவிட்டுக் கொள்ள வேண்டும் போன்றவற்றை குறிப்பிடத்தான் நிறுத்தற் குறிகள் பயன்படுத்தப்பட்டன.

  லத்தீன் மொழியில் ஒரு வாக்கியத்தின் முடிவில் கேள்வியைக் குறிப்பிடுவதற்காக "கொஸ்டியோ' (Questio)  என்று எழுதுவார்கள். அச்சு இயந்திரங்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு, புத்தகங்களை கையால் பிரதி எடுப்பதுதான் வழக்கமாக இருந்தது. எழுதும் வேலையைக் குறைப்பதற்காக பல வார்த்தைகளுக்கு சுருக்கெழுத்துகளை ஏற்படுத்தினார்கள். அப்படி Questio என்பது முதலில் Qo என்றானது. ஆனால் இது மற்ற சில சுருக்கெழுத்துகளுடன் சேர்த்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்பு இருந்ததால்  O வின் மேலே Q என்றெழுதத் தொடங்கினார்கள். விரைவிலேயே Q வரையப்பட்டதைப் போன்ற ஒரு அடையாளம் ஏற்பட்டது. அதன் கீழுள்ள O ஒரு புள்ளியாக மாறியது. ஒன்பதாம் நூற்றாண்டில் கிரிகோரியன் ஸ்துதி கீதங்கள் பாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட நிறுத்தற் குறிகளில் இன்றைய கேள்விக் குறியும் இருந்தது. ஆனால், அது சற்று வலது பக்கம் சரிந்திருந்தது. அதுமட்டுமல்ல, அது அன்றைய முற்றுப் புள்ளியைக் குறித்தது. பதினைந்தாம் நூற்றாண்டில் அச்சிடுவது தொடங்கப்பட்டதோடு முற்றுப்புள்ளி, ஆச்சரியக்குறி போன்ற நிறுத்தற் குறிகளைத் தொகுக்க வேண்டி வந்தது. 1566-இல் ஆல்டொமனுஸியோ என்பவர் முதலாவது நிறுத்தற் குறி நூலைப் பிரசுரித்தார். அதில் இன்றைய கேள்விக்குறி இருந்தது.


சோ.ஞானசேகர்.







1 comment:

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி ஐயா.... அறிந்துக்கொள்ள வேண்டிய ஒன்று