Wednesday, September 8, 2010

தேனீக்கள் குறைவதால் உணவு உற்பத்தி பாதிப்பு


  தேனீக்கள் குறைந்து வருவதால் செடிகளில் மகரந்த சேர்க்கையும் குறைந்து உலக அளவில் இது உணவு தானியங்கள் உற்பத்தியில் பாதிப்பை எற்படுத்தும் என்று கனடாவை சேர்ந்த விஞ்ஞானி வருத்தம் தெரிவித்துள்ளார். கனடாவில்டோரண்டோ பல்கலை ஆராய்ச்சியாளர் ஜெம்ஸ் தாமஸ். இவர் கொலராடோவின் பாறைகள் நிறைந்த மலைப்பகுதியில் கடந்த 17 ஆண்டுகளாக தேனீகள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார்.

    இவரது ஆராய்ச்சியில், பிரிட்டனில் தேனீக்கள் பெரிய அளவில் குறைந்து செடிகளில் மகரந்தசேர்க்கை 50 சதவீதம் குறைந்துள்ளது. இது பெரிய அளவில் உணவு தானியங்கள் உற்பத்தியில் பாதிப்பை எற்படுத்தும். பிரிட்டனில் இந்த பாதிப்பு அதிகளவில் உள்ளது. மற்ற நாடுகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை.

  பிரிட்டனில் தான் தேனீக்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. பட்டாம்பூச்சி மற்றும் சில பூச்சிகள் இருப்பிட பற்றாக்குறை, சீதோஷண மாற்றம் போன்ற காரணங்களால் குறைந்து வருகின்றன என்று தெதிவித்துள்ளார்.

நன்றி தினகரன்..

இற்கையுடன் உயிரினங்களை வாழவிடுவோம்.


சோ.ஞானசேகர்.

No comments: