Saturday, July 24, 2010

சப்தங்கள்


          பெரிய ஓசைகள் மனிதர்களின் உடல் நலத்தையும், மன நலத்தையும் பெரிதும் பாதிக்கின்றன. ஓசை ஒரு அளவு வரை ஆரோக்கியகரமாகும். குறைந்த அளவுடைய ஓசை, கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும், செயல்படுவதற்கும் தடையாக இருக்காது. அமைதியான சூழ்நிலையைவிட தாலாட்டுப் பாடல்தான் குழந்தையைத் தூங்கவைக்க உதவுகிறது. நகரச் சாலைகளிலிருந்து வரும் பேரோசைகள் உடல் நலத்திற்கு ஏற்றதல்ல. வாகனங்களும், சைரன்களும், கட்டடம் கட்டும்போது வரும் ஓசைகளும், பலவிதமான மணியோசைகளும், ஒலிபெருக்கிச் சப்தங்களும் ஓலி மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. நகரத்தில் வசிப்பவர்கள் வழக்கமாக இதுபோன்ற சப்தங்களைக் கேட்டுவருவதால், இது அவர்களுக்குப் பழகிப் போயிருக்கும். தொந்தரவாக இருக்காது. ஆயினும் இது உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் மிகவும் ஆபத்தானது.

   டெசிபல் எனும் வார்த்தை ஒலியின் அளவைக் குறிக்கிறது. 90 டெசிபலுக்கு அதிகமான சப்தம் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. 95 டெசிபலுக்கு அதிகமான ஓசையை வருடக் கணக்காகக் கேட்டுவரும் பட்சத்தில் காதுகள் செவிடாகிவிடும். தொடர்ச்சியான சப்தம் உறக்கத்தைத் தடை செய்கிறது. 130 டெசிபலுக்கு அதிகமான ஓசை, காதுகளுக்கு வலி தருகிறது. மனஅமைதியைக் குலைக்கிறது. இதனால்தான் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேற்பட்ட சப்தங்களை ஏற்படுத்தாதபடி சட்டத்தின் மூலம் தடை செய்திருக்கிறார்கள்.

இலைகள் சலசலக்கும் ஓசை - 10 டெசிபல்

ரகசியம் பேசும் குரல் - 20 டெசிபல்

மெதுவான உரையாடல் - 40 டெசிபல்

கூட்டமான ஒரு கடையில் உள்ள ஓசை - 60 டெசிபல்

நகரத் தெருக்களின் சப்தம் - 70 டெசிபல்

தொழிற்சாலையின் ஓசை -100 டெசிபல்

ஒலி பெருக்கிச் சப்தம் - 110 டெசிபல்

விமானத்தின் ஓசை -120 டெசிபல்


படித்தது.


சோ.ஞானசேகர்.

No comments: