Saturday, August 15, 2009

"நம்ம ஊர் தட்டான் தும்பி"
நம்மில் நிறையப்பேருக்கு வெளிநாடு செல்ல ஆசையிருக்கும். சிலபேர் சுத்திப்பார்க்க போவார்கள். சிலபேர் வேலை நிமித்தமாக போவார்கள். ஒவ்வெருவருக்கும் ஒரு ஆசை இருக்கும். ஆனால் அதற்க்கு நிறைய பார்மால்ட்டி இருக்கு பாஸ்போர்ட், விசா எடுக்கவேண்டும். அப்பொழுதான் விமாணத்தில் பறந்து வெளிநாடு செல்லமுடியும். இதெல்லாம் இல்லாமல் போய்வருபவர்கள் உண்டு யார்னு உங்களுக்கு தெரியும் யார் நம்மலுடைய பறைவைகள்தான்.

வசந்தகாலம் வந்துவிட்டால் பறவைகள் நாடுவிட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் வந்து முட்டையிட்டு, குஞ்சு பொரித்து அந்தக் குஞ்சுகளுடன் தாய்நாடு திரும்பும், இப்படி வந்து போகிற பறவைகளை நம் நாட்டில் நிறைய சரணாலயத்தில் பார்த்து இருக்கிறேம் கேள்விப்பட்டிருக்கிறேம்.இது இல்லாமல் வண்ணத்துப் பூச்சிகளும் நீண்டதுரம் 4ஆயிரத்து 300 மைல் துரம் பயணிப்பாதாக கேள்விப்பட்டிருக்கிறேம். இதெல்லாம் இல்லாமல் நம்ம ஊரில் மழை காலம் முடிந்தவுடன் ஒரு பூச்சி இணம் பறக்கும் அதுதான் 'தட்டான் பூச்சி' (தும்பினும்) சொல்வார்கள். இதுவும் கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்கிறது 12 ஆயிரம் மைல்கள் பயணம் செய்கிறது நம் தமிழ் நாட்டு தட்டான்கள். ஆண்டுதோறும் ஆகஸ்ட்டு மாதம் தென்னிந்தியாவில் இருந்து புறப்பட்டு அக்டோபர் ம்தம் மாலத்தீவை அடைகிறது. பின்னர் அங்கிருந்து நவம்பரில் செகேல்ஸ் தீவை அடைகிறது. டிசம்பரில் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மொசம்பிக் நகரை அடைகிறது. அங்கு இருந்து ஏப்ரல் மாதம் மாலத்தீவு வழியாக மீண்டும் இந்தியா திரும்புகிறது. இதில் ஆச்சரியப்படவேண்டிய விஷயம் என்னவெனில் அவை ஒவ்வொரு இடத்திலும் சில நாட்களே தங்குகின்றன. இடையே 600 மிதல் 800 கிலோமீட்டர் தூரம் கடலை கடக்கின்றன. இவை 3 ஆயிரத்து 200 அடி உடரத்தில் பறக்கின்றன. தாழ்வாக பறந்தால் காற்றிந் வேகம் தட்டாந்களை தள்ளிவிட்டு திசை மாற்றிவிடக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதில் சுவராசியமான விசயம் என்னவென்றால் இப்படி நீண்டதூரம் கண்டம் விட்டு கண்டம் செல்வதற்கு அவற்றின் அத்தியாவசிய தேவையான சுத்தமான தண்ணிர் கிடைக்காததுதான் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நாம் சின்னவயதில் சாதரனமாக நினைத்து அடித்து துன்புறுத்திய ஒரு தட்டானுக்கு இப்படி ஒரு திறமை..

நன்றி தினத்தந்தி இளைஞர் மலர்....



சோ.ஞானசேகர்..

5 comments:

ஆ.ஞானசேகரன் said...

//இதில் சுவராசியமான விசயம் என்னவென்றால் இப்படி நீண்டதூரம் கண்டம் விட்டு கண்டம் செல்வதற்கு அவற்றின் அத்தியாவசிய தேவையான சுத்தமான தண்ணிர் கிடைக்காததுதான் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.//
நல்ல பகிர்வு மிக்க நன்றி ஐயா

ஆ.ஞானசேகரன் said...

நான் உங்களுடன் தொடர்வதில் மகிழ்ச்சியே

S.Gnanasekar said...

நன்றி நன்பர் ஆர்.ஞானசேகரன் அவர்களே

அது ஒரு கனாக் காலம் said...

இப்ப தான் உங்க பக்கம் வர முடிஞ்சது ....அந்த மலை எந்த ஊரு சார் ( கூவலபுரமோ ????) ரொம்ப அழகா இருக்கு.

நல்ல தகவல்... இந்த தும்பி, பட்டாம் பூச்சி எலாம், ரொம்ப தூரம் பறக்கமுடியாதுன்னு தான் நினைத்துஇருந்தேன் .... இது புதிய தகவல் எனக்கு.

அட்கிக்கடி பாக்கலாம் சார் , வலை பதிவில்

Thamira said...

ஆச்சரியமான தகவல்கள்.! நன்றி. அப்படியே அவை கடலில் பறக்கும் காலங்களில் உணவுக்கு என்ன செய்கின்றன என்றும் சொல்லியிருக்கலாம். ஆர்வமாக இருந்தது.

(நிறைய எழுத்துபிழைகள் இருக்கின்றன. கவனிக்கவும்)