Monday, April 21, 2014

பசுமை பூங்கா

 
நகரப்புறங்களில் பசுமையான செடி கொடிகளும், தோட்டங்களும், பூங்காக்களும் அதிகம் இருந்தால் அதன் மூலம் அந்த நகரங்களில் வசிக்கும் மனிதர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
  செடிகொடிகளால் மன அழுத்தம், கோபம் மற்றும் மன உளைச்சல் போன்றவை குறைகிறது மரணத்துக்கு காரணமான நான்காவது பெரிய காரனமாக இருப்பது போதுமான உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது தான்  ஆகவே அதிக அளவில் நகர்ப்புறங்களில் தோட்டங்கள் அமைத்தால் அவற்றில் மனிதர்கள் உடற்பயிற்சி செய்யலாம். 
  பசுமையான தோட்டங்கள், பூங்காக்கள் போன்றவை நகரப்புறங்களில் இருந்தால் அவற்றால் ஏராளமான நன்மைகள் மனிதர்களுக்கு ஏற்படும்.
மருத்துவமனைகளில் பசுமையான தோட்டங்களை அமைப்பதால், நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் பணியாளர்கள் இடையே பெருமளவு மன அழுத்தம் குறையும்.
  ஆனால் தோட்டங்களில் விதவிதமான செடிகள் இருப்பது அவசியம். மேலும் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பசுமையான தோட்டங்களை பார்ப்பதாலு, பறவைகளின் சத்தத்தைகேப்பதாலும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் வரும் படபடப்பு போன்றவை குறைவதால், அவர்களுக்கு     தேவைப்படும் மருந்தின் தேவையும் குறையும்.
  அதே போன்று தோட்டத்தில் வேலை செய்வதால் உடல் இலகுவாகிறது, மேலும் தடுமாற்றம் இல்லாமல் நடக்க முடிகிறது, இதனால் தனியாக வீட்டில் இருக்கும் வயதானவர்கள் தடுமாறி வீட்டிற்குள் விழுந்து விடுவது குறைகிறது.
  சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், சூரிய ஒளி உடலில் பட்டால், அதனால் ரத்தக் கொதிப்பு குறைவது தெரிய வந்துள்ளது.
இவ்வளவு நன்மை உடைய பசுமை பூங்காக்களையும், தோட்டங்களையும் அமைத்தால் அது சுகாதாரத்துறைக்காக அரசு செலவிடும் தொகை ஏராளமாக குறையவாய்ப்பு இருக்கிறது.

இயற்கை வளங்களை காப்போம் பறவைகளை வாழவிடுவோம்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்

வலைச்சர தள இணைப்பு : ஞாயிற்றுக்கிழமை, சுற்றுலா

S.Gnanasekar said...

நன்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே. என் வலைத் தளத்திற்கு வருகை தந்தமைக்கு அன்புடன் வரவேற்கிறேன்.