Friday, November 30, 2012

வேகமாக உயருகிறது கடல் நீர் மட்டம்


 சர்வதேச பருவநிலை மாற்றக் குழு கணித்ததை விட மிக வேகமாக உலகில் உள்ள கடல் மட்டம் உயர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 பூமியின் வெப்பநிலை உயர்ந்து வருவதன் காரணமாக பனிக்கட்டிகள் உருகி அதனால் கடல் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. இதனால், டோக்கியோ போன்ற கடற்கரையோர பகுதிகள் பலவும் நீருக்குள் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சர்வதேச பருவநிலை மாற்றக் குழு கணித்ததை விட 60% வேகமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதை செயற்கைக் கோள் மூலமாக அறிந்து அதனை விஞ்ஞானிகள் கணித்ததோடு ஒப்பிட்டதில் இந்த விவரம் தெரிய வந்தது.


அண்டங்கள் ஆகாயங்கள் இயற்கை! வானும் விண்மீன்களும் இயற்கை! சூரியனும் ஒளியும் இயற்கை! அதைச் சுற்றிவரும் கிரகங்கள் இயற்கை! ...


No comments: