Friday, October 14, 2011

அமில மழை


   சாதாரண மழையை நாம் பார்த்திருக்கிறோம் அதில் நனைந்து அதன் குளிர்ச்சியை அனுபவித்திருக்கிறோம். இதில் குறைந்த அமிலத்தன்மையிருக்கும் இது எந்தவகையிலும் நம்மை பாதிக்காது. ஆனால் சிலசமயங்களில் மழை பெய்யும்போது அதில் அமிலத்தன்மை அதிகமா இருக்கும். அந்த மழையை அமிலமாழை என்கிறார்கள்.
   அமில மழை பொழிவதற்கான காரணம் வானத்தில் சூழ்ந்திருக்கும் இயற்கை நிலைமைகள் பொதுவாக அமில மழைக்குக் காரணமாகின்றன. அத்துடன், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மூலம் வானத்தில் சல்பர் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் அதிகரிக்கின்றன. ஆலை புகை, தொழிற்சாலை புகை, மற்றும் கார் வெளியேற்ற உள்ள சல்பர் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகள்,
அடிக்கடி குமுரும் எரிமலைகளும், காடுகள் தீப்பிடிப்பதால் ஏற்படும் புகையும், மின்னல் மற்றும் திடப்பொருட்களிள் நொதிவு ஆகியவையும் வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தை எதிர்வினையாற்றுகிறது.புகைக்கரி மற்றும் சாம்பல், ஆலங்கட்டி மழை,  பனி, பனிப்புகை மற்றும் குறைந்த அளவு ஓசோன் வறண்ட படிதல்,வானத்தில் வீரிய அமிலத்தன்மையை உண்டாக்குகின்றன.
   தொழிற்சாலைகள் மிகுந்த நாடுகளிலும், மோட்டார் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ள பிரதேசங்களிலும் அமில மழை அதிகமாகப் பெய்வதாக கண்டறிந்திருக்கிறார்கல்.
   நிலப்பரப்பில் கால்சியம் கார்பனேட் பத்து மில்லி கிராமுக்கு குறைவாக இருந்தால் அந்த நிலப்பரப்பில்அமில மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
   அமில மழை அடிக்கடி பெய்யும் இடங்களில் கட்டிடங்கள், சிலைகள் மற்றும் பாலங்கள் சீர்குலையும். மற்றொரு சிக்கல் இது உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஏரிகள், ஆறுகள், மற்றும் நீரோடைகள் பாதித்து உள்ளது.  கடல் பகுதியில் உள்ள மீன்கள் பெருமளவில் உயிரை இழக்கின்றன. அந்தப் பிரதேசங்ளில் உள்ள சின்னஞ்சிறு உயிரினங்களும் அமில மழையால் உயிரிழக்க நேரிடுகிறது.
   சமிப காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அமில மழையால் தாவரங்கள் பாதிக்கப்படுவது கண்டரியப்பட்டுள்ளது.

வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...

1 comment:

Karthikeyan Rajendran said...

அருமை . அன்பு பதிவருக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் .