Wednesday, March 31, 2010

    வாழைப்பழம்
வாழை மரம் இது மனிதனை வாழவைத்துக்கொண்டு இருக்கிறது இதனுடைய இலை, காய், பழம், பூ, தண்டு, நார் எல்லா பகுதிகளும் நமக்கு பயண்படுகிறது.

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல்வேறு நன்மைகளைத் தரக்கூடுயது.

வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் உள்ளது எளிதில் ஜீரணம் ஆகும். இது பழைய கதை. இப்போது இதில் எய்ட்ஸ் நோயைத் தடுக்கும் சக்தி இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வாழைப்பழங்களில் லேக்டின் என்னும் ஒரு வகைப்புரதம் உள்ளது. இது எய்ட்ஸ் கிருமியான எச்.ஜ.வி. வைரசை ஒடுக்கும் தன்மை உடையது. தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், லேக்டின் புரதம் நோய் எதிர்ப்பு சக்கியை வழங்கும். அத்துடன் எச்.ஜ.வி. கிருமி உட்புகுந்தால் அவற்றை சூழ்ந்து ஒரு உறையை ஏற்படுத்தி செயல் இழக்கச் செய்யும் ஆற்றலையும் லேக்டின் தருகிறது.

நல்ல பலன்தரும் வாழைப்பழத்தை சாப்பிட்டு நாமும் நலமுடன் இருப்போமே!

சோ.ஞானசேகர்..

No comments: