Friday, November 13, 2009

கொசு, மனிதனை விரும்பி கடிப்பது ஏன்?



   "வீட்டுல நிம்மதியா படுத்து தூங்க முடியல, கொசுத் தொல்லை தாங்க முடியல" என்கிறோம். 'எப்படித்தான் அடையாளம் கண்டு வருமோ இடம் மாற்றி படுத்தாலும் தேடி வந்து கடிக்கிறது' என்று சிலர் புலம்புவதுண்டு. அப்படி என்ன விஷேசம் மனித ரத்தத்துக்கு. நாமே காரணம் சொல்லிவிடுவோம். 'உன் ரத்தம் கொசுவுக்கு ரெம்ப பிடிச்சிருக்கு, ரத்தவாடை கண்டுபிடித்து வந்து கடிக்கிறது என்போம். ஆனால் அந்த ரத்தத்தில் கொசுவுக்கு பிடித்தது எது? இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடித்து இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

   கொசுக்கள் மனிதனையும், விலங்குகளையும் கடிக்கும் தன்மை உடையது. குறிப்பாக மனிதர்களையே கொசுக்கள் அதிகம் கடிக்கிறது. கியூலெக்ஸ் என்னும் ஒருவகை கொசுவே பலவித நோய்கள் உருவாவதற்கும் காரனமாக இருக்கிறது.

   கலிபோர்னியா பல்கலைக்கழக பூச்சியியல் பற்றிய ஆய்வுக்குழு இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டது. ஆய்வில் மனிதனை கொசு விரும்பி கடிப்பது ஏன் என்று தெரியவந்துள்ளது. நாமறிந்த படியே நமது உடல் வாசனையே கொசுக்களை நம்மை நோக்கி ஈர்த்து வருகிறது. கொசுவின் தலைப்பக்கத்தில் உள்ள ரத்தம் உறிஞ்சும் குழாய்தான் வாசனை அறியும் உறுப்பாக செயல்படுகிறது. மற்ற கொசுக்களைவிட கியுலெக்ஸ் இன கொசுக்களுக்கு இந்த உறுப்பு சிறப்பான அளவில் வளர்ச்சி அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

   மேலும் நமது ரத்தத்தில் கலந்துள்ள சில ரசாயனங்களே கொசுவின் விருப்ப உணவு. இந்த குறிப்பிட்ட ரசாயனமே கொசுக்களுக்கு அழைப்பு விடுகிறது. உங்களை கொசு தேடி வந்து கடித்தால் கொசுவுக்கு பிடித்தமான ரசாயனக் கலவை உங்கள் ரத்தத்தில் அதிகம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

   "காற்றாடியை வேகமாக வைத்தும் பயனில்லை என்றால் கொசுவலை விரித்து வலைக்குள் நாம் போய்விட வேண்டியதுதான். வேறென்ன செய்ய?" இரவில் தூங்க செல்லும் முன் குளித்விட்டு தூங்க சென்றால் கொசு கடியில் இருந்து கொஞ்சம் தப்பிக்கலாம்.

படித்தது..

சோ.ஞானசேகர்.

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வுங்க...

மற்றவர்களை பார்க்கின்றபொழுது என்னை கொசு அதிகமாக கடிப்பதில்லை... என்வாடை கோசுவிற்கு பிடிக்கவில்லையோஓஓஓ

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள பதிவு ஐயா...