Thursday, March 17, 2011

நமது நாடு 7.சுமேரியர்


    மேற்கு ஆசியாவிலே தைகிரஸ் யூபிரதர்ஸ் என்னும் இரண்டு ஆறுகள் ஒன்று சேர்ந்து பாரசீகக் குடாக்கடலுள் விழுகின்றன. அந்த ஆறுகளின் ஓரங்கள் மிகச் செழிப்பு வாய்ந்தன. அங்குக் கூலப்பொருள்கள் (தானியங்கள்) நன்கு விளையும். தமிழ் நாட்டினின்றும் வந்த மக்களின் ஒரு கூட்டத்தினர் அங்குத் தங்குவாராயினர். முன்னர்க் கூறப்பட்ட சிந்து,நீல ஆற்று ஓரங்களிற் போலவே அங்கும் மக்கள் பெருகினார்கள், நாடு நகரங்கள் உண்டாயின. அங்கு வாழ்ந்த மக்களுடையவும் தமிழருடையவும் நாகரிகங்கள் எல்லாவகையாலும் ஒரே வகையின. அங்குச் சென்று குடியேறிய மக்களின் தலைவர்கள் உவண்ணா என்னும் பெயர் தமிழரின் ஒரு பிரிவினராகிய துளுவ மக்களின் இடையே வழங்குகின்றது. அதற்குப் பூவின் அண்ணன் என்பது பொருள்.

    அம்மக்கள் குடியேறி வாழ்ந்த நாட்டுக்குச் சுமேரியா என்று பெயர். சுமேரியாவின் தலைநகரம் சுசா. அவர்கள் ஆற்று நீரை வாய்க்கால் வழியே வயல்களுக்குப் பாய்ச்சி வேளாண்மை செய்தனர்.
 
    மொகஞ்சொதரோ மக்கள் வழிபட்ட பெரிய கடவுளுக்கு ஆண் என்று பெயர்.சுமேரியரும் தமது பெரிய கடவுளை ஆண் என்னும் பெயர் கொடுத்து வழிபட்டனர். ஆண் எண்பதிலிருந்தே ஆண்டவன் என்னும் பெயர் வந்திருக்கலாம். அவர்களுடைய தாய்க் கடவுளின் பெயர் அம்மா. நம் தாய்க்கடவுளை நாம் இன்றும் அம்மன் என வழங்குகின்றோம்.

   குல நூலார் சுமேரியரும் தமிழரும் ஒரு பொதுத் தோற்றத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கூறுகின்றனர். இதற்கு, இரு மக்களின் நாகரிகம், மொழி, எழுத்து ஆதியன சான்று பகர்கின்றன.

   தைகிரஸ், யூபிரதர்ஸ் என்னும் ஆறுகளின் வடக்கேயுள்ள நாடுகளில் இன்னெரு மக்கட் கூட்டத்தினர் குடியேறி வாழ்ந்தனர். அவர்கள் தமது நாட்டுக்குச், சால்தியா எனப் பெயர் இட்டனர். சால்தியா என்பது சோழ தேசம் என்பதன் திரிபு. சோழ நாட்டினின்றும் வந்து குடியேறிய மக்கள் தமது தாய் நாட்டினின்றும் வந்து குடியேறிய மக்கள் தமது தாய் நாட்டின் பெயரையே குடியேற்ற நாட்டிற்கும் இட்டு வழங்குவாதாயினர்.

  பிற்காலங்களில் சால்தியாவும் சுமேரியாவும் இணைக்கப்பட்டுப் பபிலோனியா என்னும் பெயர் பெற்றன. பபிலோனியா என்பதற்குப் பகற் கடவுளின் நாடு என்பது பொருள். அது முன்னைக் காலத்தில் தமிழ் மக்களால் பவேரு என வழங்கப்பட்டது. புத்தரின் பழம் பிறப்பைக் கூறும் சாதகக் கதைகள் என்னும் பழைய நூல் ஒன்று உண்டு. அதில் பவேருவைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. அக்காலங்களில் இந்திய மக்கள் மரக்கலங்கள் வழியாகப் பவேருவுக்குச் சென்றார்கள். அங்கு பறவைகளைக் காண்பது அருமை. இந்திய வணிகர் ஒருமுறை காகம் ஒன்றைப் பவேருக்குக் கொண்டு சென்றனர். அந்நாட்டு மக்கள் அதன் வடிவைக் கண்டு அதனைக் கொண்டாடினார்கள். அடுத்த பயணத்தில் அவர்கள் ஆடும் மயில் ஒன்றைக் கொண்டு சென்றார்கள். அதன் அழகைக் கண்ட மக்கள் காக்கையின் வடிவினால் வியப்படையவில்லை. இரண்டாயிரத்து ஐஞ்ஞூறு ஆண்டுகட்கு முன் பவேருவில் கடை வைத்து வாணிகம் செய்த தமிழர் ஒருவரின் கணக்கு சூலையிட்ட களிமண் ஏட்டில் காணப்படுகிறது. அத்தமிழரின் விலாசம் மு.ர.சு.வ.ரா. பபிலோன் மக்கள் கனத்த களிமண் தட்டுகளில் குச்சிகளால் எழுதினார்கள், எழுதியபின் அவைகளைச் சூளையிட்டுக் காப்பாற்றினார்கள். இவ்வாறு களிமண் ஏடுகளில் எழுதப்பட்ட நூல்கள் பல பபிலோன் நாட்டிற் கண்டுபிடிக்கப்பட்டன.



Wednesday, March 16, 2011

எலி



   எலிகள் "கொறித்துண்ணும் பாலூட்டி' இனத்தைச் சேர்ந்தவை. அணிலும், முள்ளம் பன்றியும் இதே இனத்தைச் சேர்ந்தவைதான். மேல் தாடையில் உள்ள வெட்டுப் பற்கள் (இவற்றை உளிப் பற்கள் என்றும் சொல்வார்கள்) தொடர்ந்து வளர்ந்துகொண்டிருப்பதுதான் இவற்றின் முக்கியமான சிறப்பம்சம். இந்தப் பற்கள் தாமாகவே கூர்மையடையும். வெட்டுப் பற்களின் முன் பகுதியில் மட்டுமே எனாமல் இருக்கும். அதனால் தொடர்ந்து பயன்படுத்தும்போது, அந்தப் பற்களின் பின்புறம் தேய்ந்துகொண்டிருக்கும். அப்படித்தான் பற்கள் உளிபோன்று கூர்மையாகின்றன. நமது முன்    பற்களையும் வெட்டுப் பற்கள் என்று சொல்லலாம். என்றாலும் அவை எலிகளின் வெட்டுப் பற்களைப்போன்றவை அல்ல. 

   கொறித்துண்ணும் இனத்தைச் சேர்ந்தவற்றின் முன் பற்கள் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கும். எனவே அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையென்றால் அந்த முன் பற்கள் மிகவும் நீளமாக வளர்ந்துவிடும். பிறகு எதையும்  கடிப்பதற்கு இயலாமல் போய்விடும்.

   எப்போதாவது, மேல் வரிசை வெட்டுப் பற்கள்  வளர்ந்து வாயைத் துளைத்துக்கொண்டு கீழே வந்துவிடுவதும் உண்டு. எனவே, எதையாவது கடித்துக்கொண்டிருப்பதைத் தவிர எலிகளுக்கு வேறு வழி இல்லை. முக்கியமாக, எலிகள் மென்மையான உணவுகளையே அதிகம் தின்றுகொண்டிருக்கும்போது பற்களின் நீளம் அதிகமாகும்.  அதுபோன்ற சூழ்நிலைகளில் மரம், பிளாஸ்டிக், கம்பி ஆகியவற்றைக் கடித்துக் கடித்து, பற்களின் நீளம் அதிகரிக்காமல் எலிகள் பார்த்துக்கொள்ளும்.

இயற்கையை இயற்கையாக இருக்க உதவுவோம்...

Friday, March 11, 2011

வரிக்குதிரை


   வரிக்குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது ஒரு தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. வரிக்குதிரை, பாலூட்டிகளில் குதிரை, கழுதையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். இவை உடல் முழுவதும் கருப்பு வெள்ளையிலான வரிகளைக் கொண்டுள்ளன. இதனாலாயே இவை வரிக்குதிரைகள் எனப்படுகின்றன.

  வரிக்குதிரைகள் குகிரை இனத்தைச் சேர்ந்தவைதான். ஆனால் குணயியல்பைப் பொருத்தவரை குதிரைகளுக்கும் வரிக்குதிரைகளுக்கும் மிகவும் வித்தியாசம் உண்டு.  வரிக்குதிரைகள் மனிதர்களுடன் இசைந்து பழகாத குணயில்புடையவை. மனிதர்களின் கட்டளைகளைக் குதிரைகள் ஏற்று நடப்பதைப்போல, வரிக்குதிரைகள் நடக்காது. வாய்ப்புக் கியைத்தால் மனிதர்களைத் துன்புறுத்தவும் தயங்காதவை. இவை, குதிரைகளைப் போல அமைதியாகவும் அல்ல. பயம் என்பதே இவற்றிக்குக் கிடையாது. எப்போதும் மிரட்சியடைந்ததைப் போலத்தான் நடந்துகொள்ளும். ஓட்டமெடுத்தால், கட்டுப்படுத்த முடியாத பயங்கர வேகத்தில்தான் ஓடும். இத்தகைய காரணங்களால்தான், வரிக்குதிரைகள் காட்டிலேயே வாழட்டும் என்று மனிதர்கள் விட்டுவிட்டார்கள். வரிக்குதிரைகள் மனிதர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பவையாக இருந்தால், நமக்கு குதிரை வண்டிகளுக்குப் பதிலாக வரிக்குதிரை வண்டிகள் இருந்திருக்கும்.

மரம் வளர்ப்போம் வரும் சந்ததி காப்போம்.....

Thursday, March 10, 2011

நமது நாடு 6. எகிப்தியர்


    தமிழ் நாட்டினின்றும் புறப்பட்ட இன்னெரு கூட்டத்தினர் மேற்கு நோக்கிச் சென்றனர், அவர்கள் செங்கடல் வழியாக வட ஆப்பிரிக்காவை அடைந்தனர். அங்கு என்றும் நீர் வற்றாத ஆறு ஒன்று உண்டு. அதற்கு நீல ஆறு (நைல்) எனேபது பெயர். அதன் பள்ளத்தாக்குகள் பயிர் இடுவதற்கு மிகவும் வாய்ப்புடையன. இவ்வாற்றேரங்களில் வந்து அக்கூட்டத்தினர் தங்கினர், நாடு நகரங்கள் உண்டாயின. அங்கு எழுந்த நகரங்களுள் மெம்பிஸ், தீப்ஸ் என்னும் பட்டினங்கள் சிறந்திருந்தன. அம்மக்கள் குடியேறிப் பெருகிய இடம் எகிப்து எனப் பெயர் பெற்றது. எகிப்தில் வாழ்ந்த மக்கள் எகிப்தியர் எனப்பட்டனர்.

   எகிப்தியர் பைபிரஸ் என்னும் ஒருவகைத் தாளில் எழுதினார்கள். அவர்கள் நூல்களில் அவர்கள் பண்டு நாட்டினின்றும் வந்து குடியேறினார்கள் எனக் கூறப்படுகின்றது. பண்டு என்பது பாண்டிநாட்டின் பழைய பெயர்.

    ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் எகிப்தியர் தென்னிந்தியாவோடு வாணிகம் நடத்தினார்கள். குரங்குக்கும் யானைத் தந்தத்துக்கும் அவர்கள் மொழியில் வழங்கிய பெயர்கள் இன்றும் தமிழில் காணப்படுவன. அவை கவு, எவு என்பன. இவை கவி, இபம் என்னும் தமிழ்ச் சொற்களின் திரிபுகள். தமிழர்களிடையும் பழைய எகிப்தியரிடையும் காணப்பட்ட பழக்கவழக்கங்கள் பெரும் பாலும் ஒரே வகையின. அவர்கள் எழுதுவதற்கு ஓவியங்களைப் பயன்படுத்தினர். ஓவியங்களே தமிழ் மக்களின் எழுத்துக்களாக ஒருகாலத்தில் இருந்தன. அவர்கள் தினமும் பருகும் ஏனங்களைச் (பாத்திரம்) சுத்தஞ் செய்தார்கள். குருமார் தோய்த்துலர்ந்த ஆடையுடுத்தினர், ஒவ்வொரு மூன்றாவது நாளும் உடல் முழுவதையும் மழித்துக்கொண்டனர், காலில் மிதியடி தரித்தனர், இடபத்துக்கும் ஞாயிற்றுக் காடவுளுக்கும் பூசை செய்தனர், விரதமிருந்தனர், மரணத்துக்குப்பின் உயிர் நிலைபெறுவதை நம்பினர். இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது உணவும், அவர்கள் பயன்படுத்திய பொருள்களும் பக்கத்தேவைக்கப்பட்டன. எகிப்தியர் வழிபட்ட தாய்க்கடவுளுக்கு ஊர்தி சிங்கம். எகிப்தியரின் மரக்கலங்கள் இன்றும் இந்தியநாட்டில் காணப்படுவன போன்றவை.

   எகிப்திய மக்கள் ஆறாயிரம் ஆண்டுகளின் முன் பெரிய கூர்நுதிக் கோபுரங்களைக் கட்டினார்கள். இவை அரசரின் உடலை அடக்கஞ் செய்வதற்காகக் கட்டப்பட்டன. இவை இன்னும் உலக வியப்புகளுள் ஒன்றாக விளங்குகின்றன. இவர்களின் நாகரிகம் மிகப் பழமையுடையது.

Monday, March 7, 2011

மலர்கள் மணம் பரப்புவது ஏன்?


  எவ்வளவோ செடிகளைப் பார்க்கிறோம். எத்தனையோ மலர்கள் ஒவ்வொன்றும் ஒரு விதம். அந்த மலர்களின் அமைப்பு, மென்மை, அழகு ஆகியவை நம்மை வியக்க வைக்கின்றன. சில செடிகளின் மலர்கள் என்று நினைப்பது உண்மையில் மலர்களாக இருக்காது. சில செடிகளில் வென்னிற உறைகளில் இருந்து எட்டிப் பார்ப்பவை மலர்களே அல்ல. மலர் போலத் தோற்றமளிக்கும் போலிகள் சில செடிகளின் வண்ண இலைகளே மலர்கள் போல் காட்சியளிக்கும்.

  மலர்கள் இல்லாதவற்றை மலர்கள் என்று எண்ணுகிறோம். சில செடிகளில் மலர்களை நம்மால் அடையாளம் தெரிந்துகொள்ள முடிவதில்லை. புற்களின் நுனியில் உள்ள சிறுதுணுக்குகள் புற்களின் மலர்கள்தான் தானியங்களின் இளங்கதிர்களே அவற்றின் மலர்கள்.
பூந்தாதையோ, விதைகளையோ அல்லது இரண்டையுமே உருவாக்கும் தொகுதியே மலர்களாகும். விதைகளை உடைய தாவரத்திற்கே மலர்கள் உள்ளன. விதைகள் உருவாக்குவதற்குக் காரணமாக உள்ள தாவரத்தின் பாகங்களே மலர்கள் என்று சொல்லலாம்.

   மகரந்தச் சேர்க்கை புரிய உதவும் பூச்சியினங்களைக் கவர்ந்திழுக்க, பூக்கள் நறுமண வலையை வீசுகின்றன. பூவிதழ்களிலேயே வாசனை தரும் மிகச் சிறிய துகள்கள் உள்ளன. அவையே நறுமணத்தை ஏற்படுத்துகின்றன. பூச்சிகளை மகரந்தம் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டியே நறுமணம் எந்கிறார்கள், தாவரவியல் நிபுணர்கள்.
சில மலர்களின் இதழ்களில் உள்ள ஒருவித எண்ணை, நறுமணத்தை உண்டு பண்ணுகிறது. அந்த எண்ணைகளைத் தாவரங்கள் தங்கள் வளர்ச்சியின் போது உற்பத்தி செய்திருக்க வேண்டும். மிகச் சிக்கலான அப்பொருள், நடைமுறையில் உருக்குலைந்தோ, சிதைந்தோ எண்ணையாக மாறி காற்றிலோ, வெயிலிலோ ஆவியாகி நறுமணத்தை வெளியிடுகிறது.
எல்லா மலர்களின் நறுமணமும் ஒரேவிகிதமாக இருப்பதில்லை. சிலவற்றை நாம் விரும்புவோம். சில நமக்குப் பிடிக்காது. ஆனால் பூச்சியினங்களுக்கு ஒவ்வொரு நருமணமும்  நன்றாக நினைவில் இருக்கும். தங்களுக்கு விருப்பமான நறுமணத்தை அவை அறிந்திருக்கும்.

மரம் வளர்ப்போம் புவி காப்போம...

நமது நாடு 5. மொகஞ்சொதரோத் தமிழர்

  தென்னிந்தியாவிலே மக்கள் பெருகத் தொடங்கினார்கள். அவர்கள் வடக்கே செல்ல முடியாதபடி தண்டகம் என்னும் பெரிய காடு கிடந்தது. கடற்கரைப் பக்கங்களில் வாழ்ந்த மக்கள் பலர் குடியேற்ற நாடுகளை நாடி கடல் வழியே சென்றனர். இவ்வாறு சென்றவர்களுள் ஒரு சிலர் சிந்துநதி முகத்துவாரத்தை யடைந்தனர். அவ்வாற்றோங்கள் மிகச் செழிப்புடையன அங்கு இம்மக்கள் தங்கினார்கள், ஆற்றினின்றும் நீரை வாய்க்கால்களாற் பாய்ச்சி வேளாண்மை செய்தார்கள். தானியங்கள் நன்றாய் விளைந்தன அங்கு குடியேரிய மக்களின் தொகை பெருகத் தொடங்கிற்று. அவர்கள் சிறிது சிறிதாக சிந்து நதி வெளி முழுமையிலும் குடியேறி வாழ்ந்தார்கள். இம்மக்கள் கட்டி வாழ்ந்த இரண்டு பெரிய பட்டினங்கள் மண்ணினால் மூடுண்டு நீண்ட காலம் அறியப்படாமற் கிடந்தன. அண்மையில் அந்நகரங்கள் கண்டு பிடிக்கப்பட்ட்ன. அப்பட்டினங்கள், இப்பொழுது அரப்பா, மொகஞ்சொதரோ என்று வழங்குகின்றன. பட்டினங்கள் இரண்டிற்கும் இடையிலுள்ள தொலைவு நானூறுமைல்.இரண்டு நகரங்களிலும் வாழ்ந்த மக்களின் நாகரிகமும் ஒரே வகையாகவுள்ளது. இதனால் அக்காலத்தே தமிழ் மக்கள் மிக அகன்ற இடப்பரப்பிற் குடியேறி யிருந்தார்கள் என விளங்குகின்றது.
  
    இப் பட்டினங்களில் பழந் தமிழரின் நாகரிகக் குறிகள் பல கிடைத்தன, இவைகளைக் கண்டு உலகமே வியப்படைந்தது. இக்கால மக்கள் தாமும் அவ்வகை  அழகிய நகரங்களை அமைக்க மாட்டார்கள். நகரங்களின் இடையிடையே அகன்ற வீதிகளின் இரு பக்கங்களிலும் வீடுகள் வரிசையாகக் கட்டப்பட்டன. சூளையிட்ட செங்கற்கள் கட்டிட வேலைக்குப் பயன்படுத்தப் பட்டன.வீடுகளுக்கு ஒன்று முதல் மூன்று மாடிகள் வரையில் உண்டு. அவைகளின் முகப்புகள் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடையன. வீடுகளுக்கு உள் முற்றம் உண்டு. உள் முற்றத்தே கிணறு இருந்தது. எல்லா வீடுகளுக்கும் குளிக்குமறை இணைக்கப்பட்டிருந்தது. உள் முற்றத்தே ஆடு மாடுகள் கட்டப்பட்டன. வீட்டிலிருந்து வீதியிலுள்ள சாக்கடை வரையும் வாய்க்கால்கள் இருந்தன. இவை செங்கற்களாற் பதிக்கப்பட்டிருந்தன. கழிவு நீர், வாய்க்கால் வழியே சென்று வீதியிலுள்ள சாக்கடையில் விழுந்தது. இவ்வாறு அமைக்கப்பட்ட அழகிய வீடுகளில் அக்கால மக்கள் வாழ்ந்தார்கள்.

    மக்கள் ஆடை நெய்ய நன்கு அறிந்திருந்தனர். ஆடைகளுக்கு அழகிய நிறங்கள் ஊட்டப்பட்டன. குயவர் பலவகையான அழகிய மட்பாண்டங்களைச் செய்தனர். அவைமீது செடி, கொடி, பறவை, விலங்கு முதலிய ஓவியங்களும் எழுதப்பட்டன. வீடுகளிற் பயன்படுத்தும் ஏனங்கள் பல செம்பு வெண்கலம் முதலிய உலோகங்களாற் செய்யப்பட்டன. ஆடவர் முகத்தை மழித்துக்கொண்டனர். மழிக்கும் கத்திகள் வெண்கலத்தினாற் செய்யப்பட்டன. சிறுவர் பலவகை விளையாட்டுப் பொருள்களை வைத்து விளையாடினர்.

    மகளிர், பொன் வெள்ளி வெண்கலம் செம்பு முதலியயவைகளாற் செய்த அழகிய  நகைகளை அணிந்தனர். முகத்துக்கு மணப்பொடி பூசினர், நெற்றியில் சாதிலிங்கப் பொட்டிட்டனர்.

  வழிபாட்டிற்குரிய கடவுளரில் சிவன், அம்மன் என்போர் தலைமை பெற்றிருந்தனர். அவர்களுக்கு கோவில்கள் இருந்தன. கோவிலின் பக்கத்தே படிக்கட்டுகளுடைய கேணி யிருந்தது. ஆலயங்களுக்குச் செல்வோர் இதில் நீராடினர். கேணியின் பக்கத்தே அறைகள் பல இருந்தன. இவைகளில் நீராடுவோர் தங்கினர். கேணியின் அடியில் ஒரு புறத்தில் பெரிய துவாரம் ஒன்று விடப்பட்டிருந்தது. இதனால் கேணியின் நீர் இடையிடையே போக்கப்பட்டது. அத்துவாரத்தின்கீழ் பெரிய மதகு இருந்தது. கேணியின் பக்கத்தே மூன்று கிணறுகள் இருந்தன. இவைகளிலிருந்து இறைக்கப்படும் நீரால் கேணி நிரப்பப்பட்டது. இங்கு கூறப்பட்டவற்றால் அக்கால மக்கள் எவ்வாறு நாகரிகம் அடைந்திருந்தார்கள் என்பது நன்கு விளங்குகின்றது.

Saturday, March 5, 2011

நெல்லிக்காய்

                     நெல்லிக்காய் இளமை காக்கும் காய்
  நெல்லிக்காய் அனைவரும் விரும்பி சாபிடும் காய். நெல்லிக்காய் சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் இனிப்பு சுவையாக இருக்கும். பெருநெல்லி,  சிறுநெல்லி இரண்டு வகை உண்டு இது இளமை காக்கும் காய். எளிதில் ஜீரணமாகும் இது மற்ற உணவுகளையும் எளிதில் ஜீரணமாக வைக்கும். குடல் பகுதியிலும், உணவுக் குழாயிலும் இருக்கும் அடைப்பை நீக்கும்.

   இனிப்பு, துவரிபு, காரம், புளிப்பு, கசப்பு என 5 சுவைகளும் கலந்தது. இதில் 'வைட்டமின் சி' அதிகமாக இருப்பதால், தோலோட நிறத்தைப் பாதுகாக்கும். வருடத்திற்கு 3 மாதங்கள் மட்டுமே நெல்லிக்காய் காய்க்கும். இதன் இலை, காய், வத்தல் மூன்றுமே மருத்துவக்குணம் உடையது.
ஒரு கைப்பிடி நெல்லிக்காய் இலையை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அந்தத் தண்ணீரில் வாய் கொப்புளிச்சா வாய்ப்புண் சரியாகும். நன்கு முற்றிய நெல்லிக்காய்களை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து தினமும் இரண்டு சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும் நன்கு பசி எடுக்கும், சோர்வு நீங்கி உற்சாகம் கிடைக்கும்.
 
   "சி' வைட்டமின் மிகுதியாக உள்ள காய் நெல்லிக்காய். ஐந்துகிலோ ஆரஞ்சுப்பழத்தில் உள்ள "சி'வைட்டமின் அளவு ஒரு கிலோ நெல்லிக்காய் இருக்கும். உடல் அணுக்களைப் பாதுகாப்பதில் இந்தக் கனி மிகச் சிறந்த காரணியாக விளங்குகின்றது.

  இதனை பச்சையாக உண்பதால், ஈறுகளில் ஏற்படும் அனைத்து நோய்களும் எளிதில் நீங்கி விடும். உடலில் உண்டாகும் அதிக சூட்டைத் தணித்து, குளிர்ச்சியை உண்டாக்கும் ஓர் அரிய மருந்து. மேலும் கர்ப்பப்பை கோளாறுகளையும் இது போக்குகிறது.          

  வைட்டமின் `சி' நிறைந்தது, நெல்லிக்காய். அதன் அற்புதமான மருத்துவக்குணங்கள்...

  உமிழ்நீர் சுரப்பியைத் தூண்டி விடுகிறது. பற்களுக்கு உறுதியைத் தருகின்றன. கல்லீரல் குறைபாட்டை நீக்குகிறது. இரைப்பை அழற்சியை போக்கி அல்சர் வராமல் பாதுகாக்கிறது. மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது.

   சீரான ரத்த ஓட்டம் நடைபெறவும், இதயம் பலம் பெறவும் உதவுகிறது. ரத்த ஓட்டத்தின் போது நச்சுக்கிருமிகள் பரவாமல் பாதுகாக்கிறது. ரத்த நாளங்கள் சீராக இயங்கவும் உதவுகிறது. கொழுப்பைக் குறைத்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துகிறது. ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

   சளியை வெளியேற்றி, சுவாசமண்டலத்தை சீராக இயக்குகிறது. நீண்ட நாள் இருந்து வரும் இருமல், ஆஸ்துமா, எலும்புருக்கி நோய் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக உதவுகிறது.

    பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. மூளை பலம்பெறவும், ஐம்புலன்கள் சீராக இயங்கவும் உறுதுணை புரிகிறது. மனஇறுக்கத்தைப் போக்கி, நுண்ணறிவுடன் செயல்பட வழிவகுக்கிறது.

   விந்தணுக்களுக்கு வீரியத்தைக் கொடுக்கிறது. பெண் இனப்பெருக்க உறுப்பிற்கு பாதுகாப்பையும், உறுதியையும் தருகிறது.

    சிறுநீரக கோளாறுகளை நீக்குகிறது. சருமங்களில் ஏற்படும் சுருக்கங்கள், சொறி, சிரங்கு உள்பட அனைத்து விதமான தோல் வியாதிகளையும் போக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.

இயற்கை நமக்கு கொடை...

Friday, March 4, 2011

நமது நாடு 4.நாவலந் தீவு

4.நாவலந் தீவு
  தமிழ் மக்கள், தாம் இப்பொழுது வந்தடைந்த நாட்டுக்கு நாவலந் தீவு எனப் பெயரிட்டனர். இந்தியா என்பது தமிழர் கொடுத்த பெயரன்று. அது கிரேக்க மக்கள் நமது நாட்டுக்கு இட்ட பெயர், இந்தியா என்பதற்குச் சிந்து நதியை உடைய நாடு என்பது பொருள். சிந்து என்பதை கிரேக்கர் ஹிந்து என்று உச்சரித்தனர். ஹிந்துவிலிருந்து இந்தியா தோன்றிற்று. சிந்து என்பதற்க்குச் சிந்துவது என்பது பொருள்.

  நாவலந் தீவில் முன் உண்டானது போன்ற குழப்பங்கள் நேரவில்லை. மக்கள் அமைதியுடன் வாழ்ந்தார்கள். அவர்கள் பெருகத் தொடங்கினர். பலவகைத் தொழில்கள் தலை யெடுத்தன. நாடு முழுவதையும் ஓர் அரசன் ஆண்டான். பின்பு நாடு மூன்றாய்ப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டையும் ஒவ்வொரு அரசன் ஆண்டான். மேற்குக் கடற்கரையை ஆண்ட அரசனின் பெயர் சேரன். அவன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி சேரநாடு எனப்பட்டது. சேரனுக்கு கொடி, வில், மாலை, பனங்குருத்து. கிழக்குப் பிரிவை ஆண்ட அரசன் சோழன் எனப்பட்டான். அவன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி சோழநாடு எனப்பட்டது. சோழனுக்குக் கொடி, புலி, மாலை, ஆத்தி. தெற்குப் பிரிவை ஆண்ட அரசனுக்குப் பாண்டியன் என்பது பெயர். பழைய அரசன் இருந்த நாடு இது பண்டு நாடு எனப்பட்டது. பண்டு நாட்டை ஆண்ட அரசர் * பாண்டியர் எனப்பட்டானர். பண்டுநாடு பின்பு பாண்டிய நாடு எனப்பட்டது. சிலர், பாண்டியர் என்பது பாரதக் கதையிற் கூறப்படும் பாண்டுவின் பெயரினின்றும் வந்ததென்பர். பாண்டுவுக்கு முன்னே பாண்டியர் உளர். ஆதலின் அது அறப் பொருந்தாது.

   இம் மூவேந்தரும் பேரரசர் எனப்பட்டார்கள். இவர்கள் நாடுகளில் சிற்றரசர் பலர் ஆண்டனர். இவர்கள் பேரரசர்களுக்கு அடங்கி நடந்தார்கள். சிலர் அடங்காதும் இருந்தார்கள். இக்காரணத்தினால் இடையிடையே அவர்களுக்கிடையில் போர்கள் மூள்வதும் உண்டு.

   மக்கள் வாழ் இடங்களும் அதனைச் சூழ்ந்த விளை நிலங்களும் அடங்கிய பாகம் கிராமம் அல்லது ஊர் எனப்பட்டது. கிராமங்கள் பல சேர்ந்தது கூற்றம், கூற்றங்கள் பல சேர்ந்தது நாடு. இவ்வாறு நாடு பல உட்பிரிவுகளாக்கப்பட்டுக் கிராம சபைகளால் ஆளப்பட்டது. கிராம சபைகள் எல்லாவற்றுக்கும் தலைவனாக அரசன் இருந்தான்.

  அரசன் வாழும் பட்டணம் நகர் எனப்பட்டது அரசனின் வீட்டுக்குக் கோயில் என்பது பெயர். கோயிலைச்சுற்றி மதில் இருந்தது. அரண் என்பது மதிலுக்கு மற்றெரு பெயர். அரசனது வீட்டைச் சூழ்ந்து அரண் இருந்தமையின் அது அரண்மனை எனப்பட்டது. அரண்மனையைச் சூழ்ந்து அரச குடும்பத்தினரும் அவன் கருமகாரரும் வாழ்ந்தார்கள். இவர்கள் வாழும் வீதிகளைச் சூழ்ந்து ஒன்றன் பின் ஒன்றாகப் பல வீதிகள் இருந்தன. அவ்வீதிகளில் ஆடை நெய்வோர், அணிகலன் செய்வோர் முதலிய பல தொழிலாளரும் வணிகரும் வாழ்ந்தனர். இவ்வீதிகள் எல்லாவற்றையும் சூழ்ந்து மதில் இருந்தது. அதனைச் சூழ்ந்து பெரிய அகழியிருந்தது. அது ஆழமும் அகலமும் நீர் நிறைவும் உடையது. அகழியைச் சூழ்ந்து மரங்கள் வளர்கப்பட்டிருந்தன.

* பாண்டியர் என்பதிலுள்ள இயர் என்பது ஐயர் என்பதன் திரிபு. முற்காலத்தில் கடவுளுக்கும் அரசனுக்கும் ஐயன் என்னம் பெயர் வழங்கிற்று. பண்டு ஐயன் பாண்டியனாயிற்று.  

Monday, February 28, 2011

நமது நாடு 3.குமரி நாடு

3.குமரி நாடு
      குமரி நாட்டிலே குமரி,பஃறுளி, பேராறு முதலிய ஆறுகள் பாய்ந்தன. குமரிக்குன்று, மணிமலை முதலிய மலைகள் இருந்தன. தெங்கு நாடு, பனை நாடு, பெருவள நாடு முதலிய நாடுகள் விளங்கின. நாடு மிகச் செழிப்புற்றிருந்தது. மக்கள் தமிழ்மொழியை வழங்கினார்கள். அந்தநாட்டை ஒருகாலத்தில் செங்கோன் என்னும் அரசன் ஆண்டான். இவன் பல நாடுகளைத் தன்னடிப்படுத்திப் பேரரசனாய் விளங்கினான். இவன் தமிழில் மிகப் பற்றுடையவன். இவன், நாட்டில் விளங்கிய தமிழ்ப் பெரும் புலவர்களைத் தன் தலைநகருக்கு அழைத்தான், தமிழ்ப்பேரவை கூட்டினான், புலவர்களுக்கு ஊக்கம் அளித்தான். அவர்கள் அரிய தமிழ் நூல்கள் பல இயற்றினர். நாடெங்கும் தமிழ் மணம் கமழ்ந்தது.

  செங்கோன் மீது பாடிய பழைய நூல் ஒன்று உள்ளது. அதற்குச் செங்கோன் தரைச்செலவு என்பது பெயர். தரைச்செலவு என்பதற்குப் படை எடுத்துச் சென்று வெற்றி பெறுதல் என்று பொருள். அந்நூல் முழுவதும் இப்பொழுது கிடைக்கவில்லை, சில பாட்டுக்களே கிடைத்துள்ளன. குமரி நாடு ஒரு காலத்தில் நாகரிகத்தின் உச்சநிலை அடைந்திருந்தது. அப்பொழுது அந்நாட்டைச் சிறிது சிறிதாகக் கடல் விழுங்கிற்று. கடல் கோளுக்கு அஞ்சி மக்கள் வடக்குநோக்கி ஓடிச் சென்றனர், சென்றமக்கள் தென்னிந்தியாவில் தங்கி வாழ்ந்தனர்.

      கடல் கோளினால் தமிழரின் பழைய நாகரிகக் குறிகள் மறைந்தன. அவர்களின் நூல்களும் மாண்டன. கடல் கோளுக்குப் பிழைத்து வந்த மக்கள் தெற்கில் கன்னித் தெய்வத்தின் திருவுருவை நாட்டி வழிபட்டார்கள். அவ்வுருவம் வைக்கப்பட்ட இடம் கன்னியா குமரி என்னும் பெயர் பெற்ரது. இரண்டாயிரம் ஆண்டுகளின் முன் அத்திருவுருவம் அங்குக் காணப்பட்டது. அதனை இந்தியாவுக்குவந்து மீண்ட உரோமைப் பிரயாணிகள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

Saturday, February 26, 2011

தாவரங்களின் வகைகள்


  நம்மைச் சுற்றிலும் பலவிதமான தாவரங்கள் இருக்கின்றன. நாம் சாதாரணமாகப் பார்க்கும் தாவரங்களுக்கு தண்டும் வேரும் உள்ளன. வேர், மண்ணுக்கு அடியில் புதைந்துருக்கும், தண்டில், கிளைகள் பரவி இருக்கும். கிளையில் இலைகளும், பூக்களும் உள்ளன. பூக்கள் காய்களாகி, பின்னர் கனியாகின்றன. கனியில் விதைகள் உள்ளன. விதைகளை மண்ணுக்கு அடியில் புதைத்தால், வேரும், தண்டும் உருவாகி புதுத்தாவரமாக முளைக்கிறது. ஆனால், எல்லா தாவரங்களும் இந்த வரையறைக்குள் அடங்குவதில்லை. தாவரங்களை பாசி, பெரணி, ஊசியிலை மற்றும் பூ பூப்பவை என நான்கு பிரிவுகளாக பிரிக்கின்றனர்.

பாசி
   காலை வைத்தால் வழுக்கும் பாசியை நீங்கள் பார்த்திருக்கலாம். இவை, ஈரமான பரப்பில் மெத்தென்று வளர்ந்திருக்கும். குறிப்பாகக் குளங்கள், பெரிய மரங்களின் அடியில் இவை காணப்படுகின்றன. ஒன்றிலிருந்து 10செ.மீ. உயரத்துக்கு வளரக்கூடியது. இவற்றுக்கு மெலிந்த தண்டும், மெல்லிய ஊசி போன்ற இலைகளும் உண்டு. ஆனால் வேர் கிடையாது. தாவரவியலில் இவற்றுக்கு 'பிரையோபைட்டா' என்று பெயர். உலக அளவில் சுமார் 10 ஆயிரம் பாசிகள் உள்ளன.

பெரணி
  நீண்டு வளரும் இந்தத் தாவர வகைக்கு, தண்டுகள், இளைகள், கிளைகள் உண்டு. இலைகள், ஊசிபோல இருக்கும். இவற்றுக்கு பூ கிடையாது. ஆனால், விதைகள் உண்டு. பல விதைகள் கொத்தாக இருக்கும். இவற்றின் தாவரவியல் பெயர் 'பினோபைட்டா' சில நூறு தாவரங்களே இந்த வகையில் உள்ளன.

ஊசியிலை
  இவற்றுக்கும் தண்டும், இலைகள் உண்டு. வேர்கூட உண்டு, ஆனால், பூவும், விதையும் கிடையாது. காடுகள், மலைகள் என பல்வேறு தட்பவெப்பநிலைகளில் வளரக்கூடியவை. தாவரவியலில் இவற்றுக்கு 'டெரிடோபைட்டா' என்று பெயர். உலக அளவில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரணி வகைகள் உள்ளன.

பூ பூப்பவை
   இதுதான் நாம் தினமும் பார்க்கும் தாவரவகை. வேர், தண்டு, கிளைகள், இலைகள், பூக்கள், விதைகள் என எல்லாமே இவற்றுக்கு உண்டு. இவற்றின் தாவரவியல் பெயர் 'மேகேனோலியோபைட்டா'. இந்த வகையில் தான் பெரும் பாலான தாவரங்கள் உள்ளன. மிகச்சிறிய செடியில் இருந்து, மிகப்பெரிய மரங்களும், நேராக நிற்க முடியாத கொடிகளும் கூட இந்த வகையில் அடங்கும்.

படித்ததில் கிடைத்தது...

 இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்


Friday, February 25, 2011

நமது நாடு 2. நம் முன்னேர்


2. நம் முன்னேர்   
  உலகிற் காணப்படும் படைப்புகள் எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கம் உண்டு. அது போலவே மக்கட் படைப்புக்கும் ஒரு தொடக்கம் உண்டு. ஆதி மக்கள் நாவலந்தீவிலேயே தோன்றிய பகுதி இப்பொழுது சுமத்திரா, யாவாத் தீவுகள் இருக்குமிடமா யிருக்கலாமென ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். ஒரு தாய் தந்தையரினின்று மக்கள் பெருகத் தொடங்கினால், 1750 ஆண்டுகளில் இன்றைய மக்கள் அளவு பெருகி விடுவார்கள். இவ்வாறு மேல் நாட்டு அறிஞர் ஒருவர் கணக்கிட்டுள்ளார். மக்கள் இவ்வளவு வேகமாகப் பெருகுவார்களானால் அவர்கள் இருப்பதற்கு இவ்வுலகம் போதாமல் இருக்குமல்லவா மக்கள் இவ்வளவு வேகமாகப் பெருகுவதில்லை. இடையிடையே கொள்ளை நோயிம் போரும் தோன்றி மக்களின் தொகையைக் குறைத்துவிடுகின்றன.

  மனிதன் உயிர் நூல் முறைப்படி விலங்கினத்தைச் சேர்ந்தவன், விலங்குகளிலும் பார்க்க நிறைவுடையவன், சிந்தித்து ஒன்றினைக் கண்டுபிடிக்கும் அறிவு ஆற்றல் உடையவன். மனிதனுடைய பற்களும் குடலும் காய், கனி, விதை முதலிய தாவரப் பொருள்களை உண்டு வாழ்தற்கேற்ற அமைப்பு உடையவன். ஆதிகாலத்து மனிதர் காடுகளிற் கிடைக்கும் காய், கனி, விதைகளை உண்டனர், சுனை நீரைப் பருகினர், மலைத் தாழ்வாரங்களிலும் நிழல் மரங்களின் கீழும் ஒதுங்கினர், சுருங்கக் கூறுமிடத்துக் குரங்குகளைப் போலவே வாழ்ந்தனர்.
 
   அவர்களின் தொகைபெருகத் தொடங்கிற்று. அப்பொழுது எல்லோருக்கும் போதிட உணவு ஒரே இடத்திலேயே கிடைத்தல் அரிதாயிற்று. அகவே அவர்கள் தமது இருப்பிடங்களை விட்டு சிறிது சிறிதாக அகன்று சென்று வாவத் தொடங்கினர். அப்போது அவர்கள் நிலம், வீடு, பொருள், பண்டங்கள் வைத்துக் கொள்லவில்லை. ஆகவே அவர்கள் தாம்சென்ற இடங்களிலேயே தங்கி வாழ்ந்தனர். முன் வாழ்ந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லும் கட்டாயம் அவர்களுக்கு உண்டாகவில்லை. இவ்வாறு மக்கள் இவ்வுலகின் எல்லாப் பாகங்களுக்குஞ் சென்று பரவினர்.

   அவர்கள் பிரியத் தொடங்கிய நடு இடத்தில் சிலர் தங்கி வாழ்ந்தனர். அவர்கள் படிப்படியே நாகரிக வளர்ச்சி யடைந்தனர். நாகரிகம் எப்படி வளர்ச்சி யடைகின்றது வாழ்க்கைக்கு வேண்டும் ஊணும் உடையும் பிறவும் தேடும் வகைகளினாலேயே அது வளர்கின்றது. ஆதியில் மக்கள் காய், கனி, விதைகளை உண்டு வாழ்ந்தனர். அவை எல்லாக் காலங்களிலும் கிடைப்பது அரிதாயின. ஆகவே அவர்கள் விலங்குகளையும் பறவைகளையும் கொன்று அவற்றின் ஊனையும் உணவாகக் கொண்டனர். பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடிக் கொல்வது எந்நேரமும் முடியாமல் இருந்தது. பின்பு அவர்கள் காட்டில் வாழும் ஆடு, மாடு முதலிய விலங்குகளைப் பிடித்துப் பழக்கி வளர்த்தனர், தமக்கு கிசைக்கும் மற்ற உணவுகளுடன் அவை தரும் பால் முதலிய பயன்களையும் உண்டு வாழ அறிந்தனர், பின்பு மழைபெய்யும் பருவங்களை அறிந்து தானியங்களை விளைவித்தனர். இவ்வாறு நாகரிகம் படிப்படியாக வளர்ந்தது.

  இவ்வாறு நாகரிக வளர்ச்சியடைந்த மக்கள் நாவலந் தீவிலே வாழ்ந்தார்கள். எரிமலைக் குழப்பங்களால் நாவலந் தீவின் பல பகுதிகள் தீவுக்கூட்டங்ளாக மாறின. அப்பொழுது இம் மக்களுள் பலர் கூட்டங் கூட்டமாகத் தனித்து வாழ நேர்ந்தது, பெரும் பகுதியினர் வடக்கு நோக்கிச் சென்றனர். நாவலந் தீவின் வடக்கே குமரிநாடு இருந்தது. குமரிநாட்டில் வாழ்ந்த மக்கள் திருந்திய நாகரிகம் அடைந்திருந்தார்கள்.

நமது நாடு வளரும்...

Thursday, February 24, 2011

நமது நாடு 1.நமது தாயகம்



நமது நாடு   

      தமிழர்கள்தான் ஆதியின் முன்னேடிகள் என்பதை நமது நாடு என்ற புத்தகத்தின் மூலம் ஆசிரியர் யாழ்ப்பாணத்து நாவாலியூர் திருவாளர் ந.சி.கந்தையா பிள்ளை அர்கள் 1945 ஆம் ஆண்டு இதன் முதல் பதிப்பை 95பக்கங்களாக  800 பிரதி வெளியிட்டுள்ளது, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் திருநெல்வேலி & சென்னை.

நன்றி. திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் திருநெல்வேலி    &   சென்னை.
முன்னுரை
 "நமது நாடு" எனினும் இந்நூல் சிறுவர் தமிழ் மக்களின் வரலாற்றைக் கற்று அறிந்து கொள்ளும் முறையில் சுருங்க எழுதப்பட்ட தொன்றாகும். இதண்கண் யாம் கூறியுள்ள ஒவ்வொன்றுக்கும் தக்க சான்றுகள் உள்ளன. அவைகளை இப்பொருள்பற்றிக் கூறும் விரிந்த நூலாகிய "தமிழ் இந்தியா" விற் காண்க. ஆதிமக்கள் ஒரே வகையினர். அவர் சமயம் ஒன்று, மொழி ஒன்று என்னும் கொள்கைகள் வலி பெற்று வருகின்றன. மேல்நாட்டு ஆராய்ச்சி அறிஞர்களின் ஆய்வுகளை ஒழுங்கு வைத்து ஆராயிமிடத்து அவ்வாதி மக்கள் தமிழரே என நன்கு தெளிவாகின்றது. இது மிக வியப்புக்குரிய தொன்றாகும். ஆராய்ச்சி நூலை இளைஞர் எளிதில் கற்று விளங்கிக்கொள்ளமாட்டாதவர்களாவர். அகவே ஆராய்ச்சியிற் கண்ட முடிவுகள் வரலாறுபோலத தொடர்பு படுத்தி எழுதப்பட்டிருக்கின்றன.

  1.நமது தாயகம்          
  நாம் எல்லாரும் தமிழர்; நம்மைப்பற்றி அறிதல்வேண்டும், நம் நாட்டைப்பற்றியும் அறிதல்வேன்டும்; வேண்டுமாயின் பின்பு மற்ற நாட்டவர்களைப்பற்றி அறியலாம்.
     தமிழர், உலகின் மிகப் பழைய சாதியினர். தமிழகத்தினின்றே உலகின் பல பாகங்களுக்கு நாகரிகம் பரந்து சென்றது. இதனை மேல்நாட்டு அறிஞர் சிலர் நன்கு ஆராய்ந்து கூறியிருக்கின்றனர். இவ்வாறு கூறுதல் பலருக்கு வியப்பைத் தரும். இப்பொழுது தமிழர் உலகில் பெரிய சாதியினராகக் காணப்படவில்லை அல்லவா? இதுவே அவ்வியப்பிற்குக் காரணமாகும். வறியவர் செல்வராதலும் செல்வர் வறியவராதலும் உலக இயல்பு. ஒருகாலத்தில் ஒருவரின் பின் ஒருவராகச்சாதியினர் பலர் உயர் நிலை அடைந்திர்ந்தனர், பின்பு வீழ் நிலை அடைந்தனர். வீழ் நிலை அடைந்த சாதியாருள் தமிழரும் ஒருவர்.
  மற்ற சாதியரின் வரலாற்று நூல்கள் பல இருக்கின்றன. தமிழரின் வரலாறு கூறும் நூல்கள் பல வெளிவரவில்லை. ஆகவே நாம் நம்மைப்பற்றிய வரலாறுகளை எளிதில் அறிய முடியவில்லை. இப்பொழுது நமது நாட்டைப்பற்றிச் சிறிது படிப்போம்.
   பூகோள படத்தில் இந்தியாவைப் பாருங்கள். அதன் தென்பகுதியில் கன்னியாகமரி என்னும் முனை இருக்கிறது. அதற்குத் தெற்கே பெரிய கடல் ஒன்று அலைமோதுகின்றது. அதற்கு இக்காலத்தில் இந்துமாக் கடல் என்று பெயர். நம் வாழும் உலகம் தேன்றி எண்ணில்லாத காலம் ஆகின்றது. இவ்வளவு எண்ணில்லாத காலத்திள், இது பல மாறுதல்கள் அடைந்துள்து. இந்துமகாக் கடல் தோன்றுமும் அங்கே பெரிய நிலப்பரப்பு ஒன்று இருந்தது. அது நாவலந்தீவு எனப்பட்டது. ஐரோப்பிய மக்கள் அதற்கு "லெமூரியா" எனப் பெயர் இட்டுள்ளார்கள். "கொந்வானா" என்பதும் அவர்கள் அதற்கு கொடுத்த மற்றெரு பெயர். இதன் நடுவில் மோருமலை நின்றது. அதன் ஒரு கொடுமுடியே இலங்கைத்தீவு. நாவலந்தீவு அல்லது லெமூரியா இப்பொழுது வடக்கே ஆசியாக்கணடம் இருப்பதுபோலத் தெற்கில் இருந்தது.

   

படம் 1. (ஏகபாதமூர்த்தி) திருவரங்கம்.
படம் 2. கித்தைதி (சின்ன ஆசிய) மக்களின் தந்தைக் கடவுள்.
படம் 3. சிரியா நாட்டிற் கிடைத்த தந்தைக் கடவுளின் வடிவம்.


  நிலவுருண்டை ஒருகாலத்தில் அனற்பந்து போல இருந்தது. இதனுள் இன்னும் நெருப்பு இருக்கின்றது. இந்நெருப்பு இடையிடையே பூமியைக் கிழித்துக்கொண்டு வெளியே கிளம்புவதுண்டு. அப்பொழுது அது உள்ளே இருந்து கல்லையும் மம்ணையும் மேலே கக்கும். அதனால் அவ்வெடிப்புகளின் வாய்களில் பெரிய மலைகள் உண்டாகும். இவ்வாறு பூமியினின்றும் நெருப்பு வெளியே வரும் இடங்கள் எரிமலைகள் எனப்படும். எரிமலைக் குழப்பங்களிளால் சில சமயங்களில் தரை கடலுள் மறைந்து போகும். நாவலந் தீவில் எரிமலைக் குழப்பங்கள் பல தோன்றின. அப்பொழுது அதன் பல பகுதிகள் கடலுள் மறைந்தன. அப்பொழுது கன்னியா குமரியைத் தொடர்ந்து ஒரு பெரிய நிலப்பரப்பு நீண்டிருந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் தாய்க்கடவுளை வழிபட்டார்கள். தாய்க் கடவுளுக்குக் கன்னி அல்லது குமரி என்பது பெயர். ஆகவே அந்தத் தரைக்குக் குமரிநாடு என்று பெயருண்டாயிற்று. நாவலந்தீவும் அதனைச் சார்ந்த குமரி நாடுமே தமிழ் மக்களின் தாயகம்.

நமது நாடு தொடரும்

Wednesday, February 16, 2011

கடல் ஆழி



  கடலில் வாழும்  பல வகையான விநோத உயிரினங்களில் முத்துச் சிப்பியின் குடும்பத்தைச் சேர்ந்த உயிரினமே கடல் ஆழி. மேலை நாடுகள் பலவற்றில் பிரபலமான நட்சத்திர ஹோட்டல்களில் சுவை மிகுந்த உணவாக விற்பனை செய்யப்படும் இந்த உயிரினத்தின் சிறப்புகள்
கடலில் வாழும் ஓடுகளையுடைய பல உயிரினங்களில் தனக்கென்று ஒரு குறிப்பிட்ட உருவம் இல்லாத ஓர் உயிரினம்தான் கடல் ஆழி. கிரோஸோஸ்டீரியா என்ற விலங்கியல் பெயருடைய இதன் ஓடுகளின் விளிம்புகள் அடர்த்தியான கால்சியத்தால் ஆக்கப்பட்டிருக்கிறது. இவை ஒரு பிளேடைப் போன்று மிகவும் கூர்மையாக இருப்பதால், இதன் மீது தப்பித் தவறி கால் வைத்து விட்டால் கூட, "சரக்'கென்று வெட்டிவிடும் தன்மையுடையது.

  ஆறுகளின் கழிமுகத் துவாரங்களிலும், சென்னையை ஒட்டியிருக்கிற கடற்கரைகளிலும் அதிக எண்ணிக்கையில் வாழும் கடல் ஆழிகளுக்கு விஞ்ஞானிகள் கிரோஸோஸ்டீரியா மெட்ராஸென்சீஸ் என்றும் பெயர் வைத்திருக்கின்றனர். இவ்வினங்கள் மட்டும் மற்ற கடல் ஆழிகளைக் காட்டிலும் விரைவாக வளர்வதுடன், மிகவும் சுவையாகவும் இருக்கின்றன. கடலில் அதிகமான பரப்பளவில் ஆழிகள் படர்ந்து காணப்படும் இடங்களை ஆழிப்படுகைகள் என்கிறார்கள்.

   உலகிலேயே மிகப் பெரிய ஆழிப்படுகை சிஸ்பாக் வளைகுடாவில் இருக்கிறது. கடலில் வாழும் பவளப் பாறைகளுக்கு அடுத்தபடியாக அதிகமான கடல்வாழ் உயிரினங்களுக்கு உண்டு, உறைவிடமாகவும் இருக்க ஆழிப் படுகைகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.
கடல் தாமரைகள், கடல் விசிறிகள், நத்தைகள் போன்றவை உயிர் வாழவும் இவை சிறந்த உறைவிடமாக உள்ளன.

   இந்த உயிரினங்களைத் தின்று வாழும் பெரிய வகை மீன்களும் ஆழிப் படுகைகள் இருக்கும் பகுதிக்கு அவ்வப்போது வந்து செல்கின்றன. பழைய ஆழிகளுக்கு மேற்புறத்திலேயே புதிய ஆழிகளும் ஒட்டிக் கொண்டே உருவாகி விடுவதால், ஆழிப் படுகைகள் பரப்பளவிலும், கொள்ளளவிலும் அதிகரித்து கடலுக்குள் அவை ஒரு தனி உலகமாகவே காட்சியளிக்கின்றன.
தினமணி...

இயற்கையின் அதிசயம் கடல் வாழ்  உயிரினம்

Thursday, February 10, 2011

நம்ம ஊர் ரோடு

    ரோடு ஒரு நாடு வளர்ச்சி அடைந்தது என்று கருதப்பட்டால், அந்த நாடு போக்குவரத்து     வசதியில் நல்ல முறையில் இருக்கும். அது தரை, நீர், ஆகாய மார்கம் இருக்கும்.
   நம் நாட்டில் தரை மார்க்கம்தான் அதிகம் பயன் படுத்துகிறோம். ஆனால் நமது சாலை வசதி எப்படியுள்ளது குண்டும் குழியுமாக சமமாக இல்லாமல், இது எல்லாம் எப்போதிருந்து 20,25 வருடங்களாக. ரோடு அனேக இடங்களில் போடப்படுகிறது ஆனால் அதன் நிலமை மிவும் மகாமட்டமான ரோடு, இது எதனால் தரமில்லாத பொருள்கள், அனுபவம் இல்லாத பொது நலத்தில் அக்கரை இல்லாத காண்டிராக்டர்களால், அதிகாரிகள் கண்டித்து கேக்க முடியாத நிலை, அரசியல் தலையிடு, அதிக லாபநோக்கோடு செயல்படுவது.
  முன்பு ரோடு போடுவது என்றால் முதலில் டெண்டர் விட்டு, மதிப்பீட்டு தொகையில் யார் குறைந்த தொகை கேப்பவருக்கு முன்னுரிமை.
இது போக ரோட்டை நீலம் அகலம் அளந்து, ஒரு அடிக்கு இத்தனை கன அடி கருங்கல், என்று அளவு கணக்கு எடுத்து, தார் கருங்கள் நன்கு நனைந்து இருக்கும் படி கலந்து போடுவார்கள். ரோடு தார் கருங்கல் உயரம் இத்தனை அங்குலம் இருக்கவேண்டும், என்று வறைமுறை இருந்தது. அதுவும் இப்போது கிடையாது.
   அதிக டன் எடைகொண்ட ரோடு ரோலரை ஓட்டினால் தார் சாலை நன்றாகப் பதியும். எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறோமோ, அவ்வளவு தூரம் சாலை திடமாக இருக்கும்.  ஆனால் குறைந்த எடையுள்ள ரோடு ரோலரை பயன்படுத்துவதால் தார் சாலை நன்றாகப் பதியாது. தார் கலவை நன்றாக  கலக்காமல் போடுவதால் மழைகாலத்தில் மழை நீர் வடிவதற்கு ரோட்டின் இரண்டு பக்கமும் வடிகால் இல்லாததால், மழைநீர் உட்பெயர்ந்து மழைநீர் தேங்கி ரோடு பெயர்ந்துபோகும்.  வெயில் காலத்தில் ரோடு போடமல் மழைகாலத்தில் போட்டு, ரோடு இப்பத்தான் போட்டார்கள் அதற்குள் மழை பெயர்த்து விட்டது என்று எனினும்படி செய்கிறார்கள். எங்கள் பகுதியில் இரவில் போட்ட ரோடு காலையில் பார்க்கும் போது எப்போதோ போட்ட ரோடுபோல் உள்ளது.
   இப்படி இருப்பதால் நமது வாகனங்கள் எவ்வளவு தேய்மானம், எரிபொருள் எவ்வளவு விரயம், பொருள் இழப்பு, காலம் விரயம் குண்டும் குழியுமாக இருப்பாதால் எத்தனை விபத்து. 
   நான்  ஒரு ஆங்கில சினிமா படம் டிவியில் பார்க நேர்ந்தது சைக்கிள்ரேஸ் அந்த ரேஸ் நடக்கும் இடமாகக் காட்டப்பட்ட இடம் மலைப்பாதை அதிக தூரம் அதை பார்க்கும் போது  அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. என் மகன் ரோட்டைப் பார்த்தவுடன் நம்ம நாட்டில் இது சான்சேயில்லப்பா என்றான் பாருங்க என்னால் பதில் சொல்லமுடியவில்லை போங்க. நம்ம சந்ததிக்காவது கிடைக்குமா? நல்ல ரோடு!

மரம் வளர்த்து மழை வளம் காப்போம்...

Wednesday, February 9, 2011

ஓடை

   ஓடை என்ற ஒரு இடம் இருந்த அடையாளமே, கிராமங்களில் இல்லாமல் போகும் அபாய நிலை, இப்போது ஏற்பட்டுவிட்டது என்று தோன்றுகிறது.    
   
நான் வருடத்தில் இரண்டு, அல்லது மூன்று தடவை எங்கள் கிராமத்திற்கு செல்வது உண்டு. அப்படி செல்லும் போது ஏதாவது ஒரு மாற்றம் தெரியும். பெரிதாக வளர்ச்சி எதுவும் இருக்காது. அடிப்படையைத்தவிற, ஒரு சமயம் செல்லும் போது பலவருடங்கள் இருந்த நாவல்மரம் அந்த இடத்தில் இல்லை. மற்றெரு சமயம் அதே வயதுடைய அரசமரத்தையும் கானவில்லை.
 
  இப்போது ஒரு நான்கு நாள் தொடர்ந்து ஊரில் இருக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. அப்போது முன்பு சின்ன வயதில் சுற்றித் திரிந்த  இடத்தை பார்கலாம் என்று போனால், அந்த இடங்களை அடையாளம் கானமுடியவில்லை. ஓடை, ஊருணி, ஊத்து இது எல்லாம் குறிகி அடையாளமே தெரியவில்லை.
  
   ரோட்டோரம் இரண்டு பக்கமும் வயல் அல்லது கரிசல்காடுகள் இருக்கும். இதற்கிடையில் முன்பு பெரிய ஓடை இருந்தது, ஒரு பெரிய யானை உள்ளே இருந்தாலும் தெரியாது, அந்த அளவு பெரியது. மரம், செடி, கொடி படர்ந்து இருந்தது.
   மழை காலத்தில் அதிகமாக மழை பெய்யும் சமயம் உபரிநீர் எல்லாம் காட்டில் இருந்து வடிந்து ஓடையில் விழும். சிறிய ஓடையில் ஆரம்பித்து, பெறிய ஓடையில் கலந்து கண்மாய்க்கு வந்து சேரும். ஓடையில் தேங்கியிருக்கும் நீரில் மீன்கள் இருக்கும் மீன்களை பிடித்து வீட்டுக்கு எடுத்துச் செல்வோம், சில நேரங்களில் அங்கே மீனைச் சுட்டுச் சாப்பிடுவேம். மீன் மட்டுமல்ல குருவி, சில நேரங்களில் முயல் கூட சிக்கும், கொக்குக்கு கண்ணி வைத்து பிடிபோம், கிடைத்தால் சுட்டுச் சாப்பிடுவோம். தேன் எடுப்போம், இவ்வளவு பெருமை உள்ள ஓடை இப்போது இல்லை.

   ஆனால் இப்போ சிறிய ஓடைகள் இருந்த சுவடே இல்லை, பெறிய ஓடைகள் சின்ன வாய்கால்களாக இருக்கிறது. அதில் இருந்த மரம், செடி, கொடிகள் எங்கு போனது என்று தெரியவில்லை.இப்படி வடிகால் இல்லாமல் போனதே, மழைகாலத்தில் மழை நீர் தேங்கி பயிர்கள் நாசமாகிண்றன. கண்மாக்கு தண்ணீர் சரிவர வந்து சேரமல் தண்ணீர் வீனாகிறது.
   ஓடையில் இருந்த காட்டு சின்ன விலங்கு நரி, முயல், மறறும் பறவை இருக்க இடமில்லாமல் அழிவின் விளிம்பிற்கு செனறு விட்டது. இதைவிட மழைகாலத்தில் மலையில் இருந்து, கண்மாய்க்கு தண்ணீர் வரும் ஆறு பல நூறு அடிகளாக இருந்தது, சில அடிகளாக மாறிவிட்டது. இதில் மணல்களை அள்ளி நீர் வரும் போக்கையே மாற்றிவிட்டார்கள். இது எங்கள் கிராம் மட்டும்மல்ல, எல்லா தமிழகக் கிராமங்கள் நிலையும் இதுவாகத்தான் இருக்கும்.

  மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.

Monday, February 7, 2011

கசகசா ஓபியெம் "பாப்பி மலர்"


   கசகசா "பாப்பி விதை" நமது கசகசா என்பது எண்ணெய் சத்துள்ள ஒரு வகையான வித்து.  இதை இந்தியாவின் எல்லா பாகங்களிலும் சமையலுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இந்த விதைகள் பெரும்பாலும் சைவ, அசைவ எல்லா வித குழம்பு, குருமா, மற்றும் கறிகளுக்கு அரைத்துப் பயன்படுத்தப்படுகின்றது.

  இந்திய உணவில் பயன்படுத்தப்படும் முக்கியமான ஒன்று. ஆனால் வளைகுடா நாடுகளில் கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப்பொருள். வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் கசகசா கொண்டு செல்வதை தவிர்க்கவும் இந்த பாப்பி செடியில் உள்ள காய் முற்றி, காய்ந்தபிறகு அதில் இருந்து எடுப்பதுதான் கசகசா. ஆனால் காயாக இருக்கும்போது காயைக் கீறி அதிலிருந்து வடிகிற பால் சேகரிக்கப்படுகிறது அதுதான் ஓபியம். இதில் இன்னெரு பாப்பி மலர் பல நாடுகளில் அலங்காரத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.

  ஒரு பயிர் நன்றாக விளைந்தால் யாராவது கவலைப்படுவார்களா? ஆனால் ஐக்கிய நாடுகள் சபை கவலைப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் விளையும் ஒரு பயிருக்காக- அதன் அமோக விளைச்சலுக்காக- ஐ.நா. "ஜாக்கிரதை... ஜாக்கிரதை' என்று எச்சரிக்கை மணி அடிக்கிறது. அந்தப் பயிர் ஓபியெம். போதைப் பொருள். இதில் ஆபத்து என்பது, தெற்கு ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் நிறைய விளைகிறது என்பதில் உண்மை இருக்கிறது.
 
   தாலிபன்கள் ஓபியெம்மை விவசாயிகளிடமிருந்து விளைச்சலை வாங்கி பதுக்கி வைத்துக் கொள்கிறார்கள். அவர்களின் அதிர்ஷ்டம் பாருங்கள், ஆப்கானிஸ்தான் பயிர்களில் மற்றவையெல்லாம் விலை குறைகின்றன. ஓபியெம் மட்டும் விலை உயர்கிறது. இதனை தாலிபன்கள் ஓபியெம்மை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொண்டு அதை சேவிங்க்ஸ் அக்கவுண்ட்ஸ் போலக் கருதுகிறார்கள். பணம் வேண்டும்போது பேங்க்கில் "வித்ட்ரா' பண்ணுவது போல, ஓபியெம்மை வெளிச் சந்தையில் விற்று பணம் பண்ணுகிறார்கள்.

  இந்தப் பணம் பயங்கரவாதச் செயல்களுக்குத் துணை போகின்றது. இதுதான் உலகநாடுகளை அச்சுறுத்துகின்றது.

   ஒரு புள்ளி விவரத்தின்படி 2009 ஆம் ஆண்டு ஓபியெம் எந்த விலைக்கு விற்கப்பட்டதோ அதைவிட 2010 இல் 164 சதவீதம் உயர்ந்துவிட்டது.

  ஆப்கனில் ஓபியெம், கோதுமை இரண்டும்தான் பிரதான பயிர்கள். கோதுமையின் விலை குறைந்து, ஓபியெம் உச்சத்தில் இருக்கிறது. ஓபியெம் விவசாயிகள் கோதுமை விவசாயிகளைவிட ஆறு மடங்கு அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். உலகில் விளையும் ஓபியெம்மில் மூன்றில் இரண்டு பங்கு   ஆப்கானிஸ்தானில் விளைகிறது. இந்த மூன்றில் இரண்டில் 98 சதவீதம் தாலிபன் பகுதிகளில் ஒன்பது மாகாணங்களில் விளைகிறது.
தினமணி...

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...

Saturday, February 5, 2011

இலைதான் போர்வை


  பெரும்பாலான மரங்கள், தங்களின் அடி மரத்தினை சிற்றிய வளர்ச்சியில் கவனம் செலுத்தும். அங்கிருந்து கிளம்பும் கிளைகள் அந்த இடத்தில் அடர்த்தியான இலைகளான போர்வை போன்ற அமைப்பை ஏற்படுத்திவிடும். இந்த இலை போர்வையை மீறி கொண்டு உயரமாய் வளரும் மரங்களும் உண்டு. அது போன்ற மரங்களில் மிக அறியப்பட்டவைகள் கபோக் மற்றும் பெரிய இலைகள் கொண்ட மஹாகோனி மரங்கள்.
  இவற்றை விட மேல், பிரூம்லியட் மரங்கள் எல்லா மரங்களை விடவும் உடரமாய் வளர்ந்து, தனக்கு தேவையான சூரிய ஒளிடை போட்டியின்றி பெறும். மேலே உயரமாய் வளர்ந்த மரங்களின் விதானத்தின் கீழே சிறிய மரங்கள். சூரிய ஒளிக்காக தன் வளர்ச்சியை அதிகப்படுத்தும். பெரிய வயதான மரங்களை போல இலைகளுக்கு நீண்ட குறுகிய உச்சி உண்டு. இதன் மூலம் சூரிய ஒளியை பெற்றுவிடும். இந்த மத்திய மர அடுக்குக்கு கீழே புதர், குத்து செடி அடுக்கு ஏற்பட்டிருக்கும்.
  இங்கே இயற்கையான உருவ அளவில் குறைந்திருக்கும் மரங்கள், புதர்களாக வளர்ந்திருக்கும்.வெகு சிலவே 6மீ., (20) அடி உயரம் வளரும்.

இயற்கையை காப்பது நம் கடமை...

காட்டுமரம் தான் எனக்கு ஏனி


  லியானாஸ் இவை மிக பிரமாண்டமான படரும் கொடிவகை தாவரம். மழை காட்டு மரங்களை இயற்கை அமைத்த பந்தலாக கருதி அவைகளின் மீது படர்ந்து திரை சீலையாக மூடி விடும். தரையிலிருந்து மரங்களின் அவ்வளவு உயரத்திற்கு இவை வளரும். இந்த தாவரத்தின் பிரமாண்ட வளர்ச்சியால் கிளைகளுக்கு இடையேயான இடைவெளிகள் அனைத்தும் அடைப்பட்டுவிடும். இவை மனிதன் தொடை தடிமனுக்கு இருக்கும்.
 
வனவிலங்குகளை காத்து இயற்கையை காப்போம்..

Friday, February 4, 2011

சின்ன வேட்டைக்காரன்


  அடர்த்தியான பசுமை, இருட்டான, ஈரக் கசிவான ஆச்சர்யமாக அமைதியாக இருக்கும் காட்டின் தரைப்பகுதியில், வெகு சில உயிரினங்கள்தான் வாழ்கிறது. தாவர தின்னியான, 'டாப்பிர்' விலங்கு தன் உணவாக விதைகளையும், பழங்களையும் உண்கிறது. இங்கிருக்கும் பல பிராணிகள் தங்கள் பெரும்பாலான பொழுதை மரங்களில் செலவிடுகின்றன. ஆனால், கோடிஸ் என்னும் விலங்கு மரத்திலும், தரையிலும் தீவனம் தேடும்.
   பிற விலங்குகளை தாக்கி உண்ணும் விலங்குகளுக்கு அருமையான மறைவிடமாக அமைந்து விடுகிறது. அதோடு அந்த விலங்குகளின் உடல் நிறமும் சூழலுக்கு ஏற்ப இருக்கும். புள்ளிகள் நிறைந்த பூனை வகைகளில் மேக வண்ண சிறுத்தை, ஒசிலாட், கோலி குண்டு பூனை போன்ற பெரும் பாலானவை இங்கேதான் வாழ்கின்றன.
  சின்ன வேட்டைக்காரன், அட்டகாசமாய் இருக்கும் இந்த குட்டி (மியாவ்) "மார்கே பாப்பா" அமேசான் மழை காட்டு பூனைகளில் ஒன்றாகும்.
பூமியை காக்க, பிளாஸ்டிக்கை ஒழிப்போம்!

வெப்ப மண்டல மழை காடுகள்


   வெப்ப மண்டல மழை காடுகள்தான் அதிகப்படியான மற்றும் சிறப்புமிக்க அழகிய தாவர வகைகளின் இருப்பிடமாக உள்ளது. உலகின் 40 சதவீத விலங்கு மற்றும் தாவர வகைகள் இங்குதான் காணப்படுகிறது.
  
 இங்கே வெப்ப நிலை சமமாக இருக்கும். டெம்பரேச்சர் பொதுவாக 20 டிகிரி முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
 மழை வருடத்தின் பெரும்பாலான அனைத்து நாட்களிலும் பெய்கிறது. வருட மவைபொழிவு 1500 மி.மி., (60 இன்ச்) என்ற அளவினைவிட குறைவதே இல்லை. அதோடு சில சமயம் இந்த அளவு 4000 மி.மி., (160 இன்ச்) என்பதை கூட எட்டிவிடும்.
 வெப்ப மண்டல காடுகளில் தாவரங்கள் பல்வேறு அடுக்குகளில் தோன்றுகின்றன. சூரிய ஒளி பூமியில் படாதவாறு வளர்ந்திடும் மரங்கள் பொதுவாக 25 மீ (150 அடி) உயரமும், புதர் செடி அடுக்கு அதிகபட்சமாக 10 மீ (30 அடி) உயரமும், குறைந்த காலம் தோன்றி மறையும் மரங்கள் 45 மீ (150 அடி) உயரமும் வளர்ந்திடும்.
  
   எங்கும் பச்சைமயம். வெப்ப மண்டல மழை காடுகள் டிராபிக் ஆப் கேன்சர் மற்றும் கேப்ரிகார்னின் இடைப்பட்ட பகுதியில் காணப்படும் மத்திய மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் நிலப்பகுதிகளில் வளர்கின்றன. இதுதான் உலகின் தாவர சாம்ராஜ்யம். இந்த வெப்ப மண்டல பருவ காடுகள். மலைகள் மற்றும் பெரிய புல்தரை பரப்புகள் உள்ளன.
  பெரிய காட்டுப் பகுதி, அமேசான் பகுதிதான் உலகின் தனிப் பெரிய வெப்ப மண்டல காட்டு பகுதியாகும்.

இயற்கை வனவளமே நாட்டின் வளம்...

Thursday, February 3, 2011

கடல் எலி


   கடற்கரையோரம்  கடல் மண்ணுக்குள் இருந்து ஒரு வினோத உயிரினம் அடிக்கடி வெளிப்படும். யாராவது பார்த்துவிட்டால் நொடிப்பொழுதில் குழிதோண்டி மறைந்து கொள்கிறது. அடுத்தடுத்து கடல் அலைகள் கடற்கரை மணலில் மோதி மீண்டும் கடல் நீர் கடலுக்குள் செல்லும் சமயங்களில் கூட்டமாக வெளிப்படும் இந்த உயிரினம், சாதுர்யமாக இரையை பிடித்துக் கொண்டு மீண்டும் மண்ணுக்குள் மறைந்து கொள்கின்றன. நிலத்தில் உள்ள எலி போல் தோற்றமளிக்கும் இந்த வினோத கடல் உயிரினம்.

   இந்த உயிரினம் நண்டு வகையை சேர்ந்த மச்ச நண்டு ஆகும். இதன் அறிவியல் பெயர் "எமிரிட்டா ஆசியாடிக்கா'. இது,"ஹிப்பாய்டியே' குடும்பத்தை சேர்ந்தது. உள்நாட்டு மீனவர்கள் இதை "கடல் எலி' என்று அழைக்கின்றனர். இவற்றுக்கு ஐந்து இணை கால்கள் இருந்தாலும், நண்டுகளைப் போல் வெட்டு கொடுக்குகள் இல்லை. இவை பக்கவாட்டில் நகராது. பின்னோக்கி நகரும் தன்மை கொண்டவை.

   நேரில் பார்த்தால் அப்படி தெரியாது. கடற்பறவைகள், இவற்றை கண்டால் குஷியாகி பிடித்து தின்று விடும். கடற்பறவைகளிடம் இருந்து தப்பிக்க, அலை அடிக்கும் அரிப்பள்ளம் அருகே மச்ச நண்டுகள் வலை தோண்டி மறைந்து கொண்டு வாழும். இந்த மச்ச நண்டுகளுக்கு இரண்டு நீண்ட உணர்வு தண்டுகள் முகப் பகுதியில் உள்ளன. கடல் நீர் ஏற்றத்தையும் வற்றலையும் தெரிந்து கொள்ள இந்த உணர்வு தண்டுகள் உதவுகின்றன. மற்ற நண்டுகளைப் போல் இதன் ஓடுகள் தோலுரிக்கும் தன்மை உடையது.

    இவற்றில் ஆண், பெண் உண்டு. சில ஆண் மச்ச நண்டுகள் ஓட்டின் அளவு 3.5 மி.மீட்டர் வளர்ந்த பிறகு, ஆண் தன்மை மறைந்து, பெண் இனமாக மாறும். அதே நேரத்தில், அது முழு வளர்ச்சி பெற்ற பெண்ணாகவும் இருக்காது. பின்பக்க பகுதியில் சினை முட்டைகள் காணப்படும். கடல் அலை கரையைத் தொட்டு திரும்பும் நேரத்தில், கடல் நீரிலுள்ள மிதவை உயிர் பொருள், மற்றும் சிறு உயிரிகளை உண்டு இவை உயிர் வாழும். மீனவர்கள் தூண்டில்களில் மீன் பிடிக்க இரையாக பயன்படுத்துகின்றனர்.

படித்தும் கண்டும் அறிந்தது...
  
இயற்கையை ரசித்து இயற்கையாக வாழவும்.

Tuesday, February 1, 2011

பசு மீன்



தலையில் இரண்டு கூர்மையான கொம்புகள் உள்ள இந்த வித்தியாசமான பிராணியைப் பாருங்கள். இது ஒரு மீன் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அதிலும் இது பசு மீன். ஆமாம்.  பசுவிற்கு இருப்பதைப்போன்று இரண்டு கொம்புகள் உள்ளதுதான் இந்த மீனின் சிறப்புத் தன்மை. இதற்கு இப்படிப்பட்ட கொம்புகள் உள்ளதால் எதிரிகளால் இதை அவ்வளவு எளிதாக விழுங்க முடியாது. அது மட்டும் அல்ல, தன் மேல் தோலில் கடும் விஷத்தைக்கொண்ட மீன் இது. ஆயினும் மஞ்சள் நிறத்தில் நிறைய வெண்புள்ளிகள் உடைய இவற்றைத்தான் வெளிநாட்டுக்காரர்கள் தங்கள் மீன் காட்சிச் சாலைகளில் மிகவும் அதிகமாக வளர்க்கிறார்கள். 

இயற்கையின் அதிசயம் நமக்கு மகிழ்ச்சி

Monday, January 31, 2011

இயற் (கை) கொடுக்கும் காடுகள்!


   காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன.பெருமளவில் மனிதகுலத்திற்கு அவை நமக்கு மரம்,மூலிகை, காய், கனிகள் இன்னும் பல பொருட்களைத் தருகின்றன. காட்டு மரங்களில் இருந்தே நாம் காகிதங்களையும், செயற்கைப் பட்டுகளையும் உருவாக்குகிறோம்.
  ஒரு காலகட்டத்தில் மனிதன் காடுகளை பெருமளவில் நாசப்படுத்தியதோடு, அழித்தும் வந்தான். காடுகள் அவ்வாறு அழிக்கப்பட்டதால் மரங்களும், பிற பயனுக்குரிய பொருட்களும் கிடைகாமல் போயின. அதுமட்டுமல்ல, தட்பவெப்பநிலை மாறியதோடு, காடுகள் மறைந்த இடங்களில் எல்லாம் பாலைவனங்கள் தோன்றலாயின. அதன்பின்பே காடுகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பரவலாயிற்று.
   காடுகள், நீர் வளத்தைப் பாதுகாக்கின்றன. மலைகளில் உள்ள் அடர்ந்த காடுகளில் மழை பெய்யும்போது, மரங்களின் இலைகளால் அதன் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு நீர் விழுகிறது. எனவே அங்கு வளமான மண் கரைந்து போவதில்லை. அப்படி அரித்துச் செல்லும் மண்ணை மலைச்சரிவில் உள்ள மரவேர்கள் தடுத்து விடுகின்றன.
   மலைகளில் மரங்களே இல்லாதிருந்தால் மழை வேகமாகப் பெய்து, அங்குள்ள வளமான மண்ணை அடித்துக்கொண்டு போய்விடுகிறது. குளிர்காலங்களில் மலையில் பெய்து உறையும் பனி, வெறுந்தரையில் விரைவில் உருகிவிடும். ஆனால் காடுகளில் பெய்யும் பனி மெதுவாகவே உருகும். மேலும் அந்த நீர், நிலங்களுக்கும், பண்ணைகளுக்கும், ஊற்றுகளுக்கும், மெதுவாகச் சென்று பரவுகிறது.
  வேகமாக வெள்ளப் பெருக்கு, மரங்களை வீழ்த்தி விடுகிறது. வெற்றிடத்தில் விழும் மழை நீரும், உருகும் பனி நீரும் மெதுவாகச் செல்வதற்குப் பதிலாக துரித கதியில் ஓடி மறைந்து விடுகிறது.
   வண்டல் மண்ணை வாய்க்கால், ஆறுகள், கடல் ஆகியவற்றுக்கு மழை நீர் இழுத்துச் செல்வதை காடுகள் தடுக்கின்றன. மரங்களின் வேர்களும், கிளைகளும், வண்டல் மண் அரித்துச் செல்லப்படாமல் தடுத்து விடுகின்றன.
   காடுகள் அழிக்கப்பட்டு மொட்டையாகும். மலைகளில் இருந்து அடித்துச் செல்லப்படும் வண்டல், துறைமுகங்கள், நதிக் கால்வாய்கள் ஆகியவற்றில் படிகிறது. அந்த வண்டல் மண்ணை அகற்றி, ஆழப்படுத்த உலகெங்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அதே நேரம் வண்டல் அரிக்கப்படும் நிலம் தனது வளத்தை இழப்பதால், விவசாயம் கேள்விக்குறியாகிறது.
  மனிதன் தனது சுயநலத்தால் எப்படி தனக்குத் தானே தீங்கு செய்துகொள்கிறான் என்பது இதிலிருந்து புரியும்.

மரம் வளர்ப்போம் புவிகாப்போம்

Friday, January 28, 2011

ஆல்ப்ஸ் மலை வெள்ளை அழகி

   ஆல்ப்ஸ் என்ற பெயரைத் திரை இசைப் பாடல்களில் கேட்டிருப்போம். ஆல்ப்ஸ் என்பது தென் மத்திய ஆஸ்திரியா, ஸ்லோவேனியா பகுதிகளில் துவங்கி, இடையில் இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி நாடுகளைக் கடந்து, மேற்கே ஃபிரான்ஸ் தேசம் வரை, இம்மலைத்தொடர் பிறை வடிவத்தில் மத்தியதரைக்கடலோரம் நீண்டிருக்கிறது.
லத்தீன் மொழியில் ஆல்ப்ஸ் என்றால் வெண்மை என்று அர்த்தம். இம்மலைத்தொடர் பனி நிறைந்து வெண்மையாக இருப்பதால், ஆல்ப்ஸ் என்ற பெயர் பெற்றது.
  சுமார் ஆயிரத்து இருநூறு கிலோமீட்டர் நீளமும், இரண்டு லட்சத்து ஏழாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பல சிகரங்கள் பத்தாயிரம் அடிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. இங்கு பல்லாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குப் பனிப்பாறைகள் உள்ளன.
  ஆல்ப்ஸ் மலைத்தொடர் அட்லாண்டிக் பெருங்கடலையும் மத்தியதரைக் கடலையும், கருங்கடலையும் பிரிப்பதாக அமைந்துள்ளது. ரோன், டான்யுப், மற்றும் போ உள்ளிட்ட பல ஐரோப்பிய ஆறுகளின் தோற்றுவாயாக இம்மலைத்தொடர் விளங்குகிறது.
   பொதுவாக, கிழக்கு ஆல்ப்ஸ், மேற்கு ஆல்ப்ஸ் என்று இம்மலைத்தொடர் இரு பகுதிகளாகக் குறிப்பிடப்படுகிறது. ரைன், லிரோ, மேரா என்ற நதிகளை ஒட்டி, கான்ஸ்டன்ஸ் மற்றும் கோமோ என்ற ஏரிகளுக்கு இடையில் இப்பிரிவு நிகழ்ந்துள்ளது.
   மேற்கு ஆல்ப்ஸில், பதினாறாயிரம் அடி உயரமுள்ள மான்ட் என்பது மிக உடரமான சிகரமாக விளங்குகிறது. கிழக்கு ஆல்ப்ஸில் பதிமூன்றாயிரம் அடிகளுக்கு மிகுந்த பிஸ் பெர்னியா என்பதே உயரமான சிகரமாகும்.
ஆர்வம், வணிகம், ஆராய்ச்சி, சுற்றுலா, யாத்திரை என்று பல காரணங்களுக்காக ஆல்ப்ஸ் மலைத் தொடர் மனிதனை வசீகரித்துத் தன்பால் இழுக்கிறது.
   அங்காங்கே மலைச்சரிவுகளையும், இடைப்பட்ட சமவெளிகளையும் கடக்கச் சாலைகள், ரயில் பாதைகள், நடைபாதைகள் இருக்கின்றன. அதனால், ஆல்ப்ஸ் மலைத் தொடரில் வசதியாகப் பயணம் செய்வது இன்றைக்கு சாத்தியமாகி இருக்கிறது.
மலையின் வெவ்வேறு உயரங்களில் வெவ்வேறு சீதோஷ்ண நிலை நிலவுகிறது. அதற்கேற்றபடி அங்கே தாவரங்ளும், உயிரினங்ளும் காணப்படுகின்றன. கிரேநோபிள், இன்ஸ்ப்ரூக், பொல்ஸானோ ஆகியவை குறிப்பிடத்தக்க ஆல்பைன் நகரங்களாக விளங்குகின்றன.
செயின்ட் காடர்ட் கணவாய் ஆல்ப்ஸின் குறிப்பிடத்தக்க சுரங்கப் பாதைகளில் ஒன்றாகும்.
  மூவாயிரம் அடிக்கும் தாழ்வான உயரங்களில், குளிர் குறைவாக இருப்பதால், சிறு சிறு கிராமங்கள் அமைந்துள்ளன. பலவகைத் தாவரங்கள் இங்குப் பயிரிடப்படுகின்றன. பனி மூடாத நேரத்தில், மலைத்தொடரே திடீரென்று உயிர்பெற்றது போல், பூத்துக் குலுங்கும் வண்ண, வண்ணமான பூக்களுடன் காண்போர் கண்களைக் கொள்ளை கொள்கிறது.
  கோடை, குளிர்காலம் இரண்டு பருவங்களிலும் சுற்றுலாவுக்கு ஆல்ப்ஸ் வழி செய்கிறது. குறிப்பாக, குளிர்காலத்தில், பனிச்சறுக்குப் பந்தையங்கள் உள்ளிட்ட பல்வேறு பனி விளையாட்டுக்களில் பங்கு கொள்ள ஆர்வலர்கள் கூடுகின்றனர்.
  இயற்கையின் மாபெரும் அழகுப் பிரதேசங்களில் ஒன்றாக ஆல்ப்ஸ் அமைந்துள்ளது. தரை மார்க்கம், ஆகாய மார்க்கம், மற்றும் ரயில் வழி என்று அக்கம்பக்கத்து நாடுகளிலிருந்து ஆல்ப்ஸ் சென்று வர பல வசதிகள் செய்து தரப்படுகின்றன. இதன் காரணமாக ஆண்டு தோறும் பல கோடி சுற்றுலாப் பயணிகள் ஆல்ப்ஸ் மலைக்கு வருகின்றனர்.

இயற்கையை இயற்கையாக இருக்க விடுவோம்...

Thursday, January 27, 2011

அமேசான் மழைக்காடுகள் இற்கையின் பொக்கிஷம்.
  தென் அமேரிக்காவில் இருக்கும் அமேசான் காடுகள் மிக அடர்ந்த மழைக்காடுகள். 2008ம் வருடம் உலகின் புதிய ஏழு அதிசயங்களுக்கான பட்டியலில், அமேசான் காடுகள் இடம் பெற்றன. அமேசோனியா என்றும் அமேசான் மழைக்காடுகள் என்றும் அழைக்கப்படும் இவை நூற்று நாற்பது கோடி ஏக்கர் பரப்பளவுக்குப் பரந்துள்ளன. இப்பரப்பளவை பிரேடிலே, பெரு, கொலம்பியா, வெனிசுலா, ஈக்வதார், பொலிவியா, கயானா, கரிநேம், மற்றும் ஃப்ரென்ச் குயானா என்ற ஒன்பது தென் அமெக்கா நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன.
  இக்காட்டில் பல்லாயிரக் கணக்கான மரங்கள், தாவர வகைகள் காணப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பறவை வகைகள், மீன் வகைகள், பல நூறு வகை மிருகங்கள் இங்கு வாழ்கின்றன. இருநூற்றைம்பது கோடி விதமான பூச்சி வகைககள் அமேசான் காடுகளில் சுற்றி வருகின்றன. இப்படி, பல கோடி உயிரினங்களுக்கு அமேசான் காடுகள் அடைக்கலம் கொடுத்துள்ளது. வேறெங்கும் கான முடியாத விதம் விதமான உயிர் வகைகள் இங்கு இருப்பதால், உயிரினங்கள் பற்றிய எந்த ஆராய்ச்சியும் இக்காடுகளைக் கவனிக்காமல் முழுமை பெற முடியாது.
  அமேசான் என்ற பெயர் வரக் காரணம் என்ன? இங்குள்ள மரங்களின் வேர்ப்பகுதிகள் நீரோடைகளில் வரும் படகுகளைக் கவிழ்க்க வல்லவை. எனவே இங்கு வாழ்ந்த காட்டு மக்கள் அவ்வகை மரங்களை அமேசான் என்று அழைக்கலாயினர், அமேசான் என்றால், இங்குள்ள மக்கள் மொழியில் 'படகுகளை அழிக்க வல்லவன்' என்று பொருள்.
  அழகு இருக்கும் இடத்தில் ஆபாத்தும் பொதிந்து தானே இருக்கும்? ராட்சத அனகோண்டா பாம்புகள், முதலை வகையைச் சேர்ந்த கருநிற கேய்மன், மலைவாழ் சிங்கங்கள், வெகு வேகமாக ஓடக்கூடிய சிறுத்தை வகைகள் என்று இயற்கையின் ஆபத்தான உயிரினங்களும், சில வகை விஷத்தாவரங்களும் இங்கே காணப்படுகின்றன.
  இங்குள்ள ஈல் மீன் மனிதனையே சாய்க்கக் கூடிய அளவு மின்சாரம் பாய்ச்சக் கூடியது. ரத்தக் காட்டேரி நகை வவ்வால்களும் காணப்படுகின்றன. இவை ராபீஸ் என்னும் மிகக் கொடிய நோயைப் பரப்ப வல்லவை. மஞ்சல் காய்ச்சல், டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் இங்கு வேகமாகப் பரவுகின்றன.இங்கு பாயும் அமேசானே ஆறு, அதிக நீர்க் கொள்ளவிலும், விரிந்த ஆற்றுப் படுகையிலும் உலகின் மிகப் பெரிய ஆறாக விளங்குகிறது.
  உலகத்தில் மொத்தமுள்ள நதி நீரில் ஐந்தில் ஒரு பங்கு, தென் அமெரிக்காவில் ஓடும் அமேசான் நதியில் உள்ளது. இந்த நதி 6448 கிலோமீட்டர் நீளமுடையது. இரண்டாயிரத்திற்கும் அதிகமான மீன் இனங்கள் இங்கே இருக்கின்றன. உலகத்திலேயே பெரிய நதி அமேசான் நதிதான் என்று சிலரும், நைல் நதிதான் என்று சிலரும் சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. பெரிய நதி என்று சொல்வதன் மூலம் நாம் எதைக் குறிப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியமானது.

  மிகவும் கடைசியாக நடத்திய கணக்கெடுப்பின்படி, நைல் நதியின் நீளம் 6670 கிலோ மீட்டர். அமேசான் நதியின் நீளம் 6448 கிலோ மீட்டர். சில ஆவணங்களில் அமேசான் நதியின் நீளம் 6750 கிலோ மீட்டர் என்றும் காணப்படுகிறது. அமேசான் நதி கடலை நெருங்கும்போது அதற்கு ஒரு கிளை நதி உண்டு. இது பாரா எனும் மற்றொரு நதியைச் சென்றடையும். இந்த நதிவழி, அட்லாண்டிக் கடலை அடையும் தூரத்தைக் கணக்கிடும்போதுதான், அமேசானுக்கு 6750 கிலோ மீட்டர் நீளம் வருகிறது.

  ஆனால், அந்த நதி அமேசானின் கிளை நதி அல்ல. நீரியலின்படி  அது, டோக்காட்டின்ஸ் பகுதியில் இருக்கிறது. எனவே, அமேசான் நதி அட்லாண்டிக்கை அடைவது, தோ-நோர்த்  எனும் கனால் வழியாகத்தான். அந்த வழியில் உள்ள நீளத்தைத்தான், அமேசான் நதியின் சரியான நீளமாகக் கொள்ள வேண்டும். அமேசான், 6448 கிலோ மீட்டர் நீளமுடையது என்று சொல்வதற்கு இதுதான் காரணம்.

  ஆனால், மிகப் பெரிய நதி எது என்று முடிவு செய்வதற்கு நாம் நதிகளின் நீளத்தை மட்டும் கணக்கிலெடுப்பது அறிவியல் பூர்வமானது அல்ல. நதி உட்கொள்கின்ற நீரின்     அளவு, நதியின் பரப்பளவு, நதி பயணிக்கும் பகுதியின் நீளம் எனும் அம்சங்களையும் நாம் பரிசீலிக்க வேண்டும். இந்தத் தன்மைகளின்படி ஆராய்ந்து பார்க்கும்போது அமேசான் நதிதான் முதலிடத்தில் இருக்கிறது. அமேசான் நதியின் வழியாக சாதாரண நேரங்களில் ஒரு வினாடிக்கு 42,00,000 கன மீட்டர் தண்ணீர் செல்கிறது. வெள்ளப் பெருக்கு ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் இது வினாடிக்கு 70,00,000 கன மீட்டராக அதிகரிக்கிறது.

   நைல் நதி உட்பட மற்ற எந்த நதியிலும் இந்தளவு நீர்ப்போக்கு ஏற்படுவது கிடையாது. பரப்பளவிலும் அமேசான் நதிதான் முதலிடத்தில் இருக்கிறது. இதன் பரப்பளவு ஏறத்தாழ 27,20,000 சதுர மைலாகும். உலத்தில் மற்ற எல்லா நதிகளையும்விட இந்த நதிதான் அதிகமான கிளை நதிகளைக் கொண்டிருக்கிறது. 15,000 கிளை நதிகள் உண்டு இதற்கு. நீளத்தைப் பற்றிய விஷயத்தில் விவாதம் இருந்தாலும் உலகத்திலேயே பெரிய நதி அமேசான் நதிதான் என்பதில் சந்தேகம் இல்லை.
  மனிதன் தான் வாழ்வதற்காக காடுகளை அழிக்க ஆரம்பித்த போது, அக்கொடுமையிலுருந்து அமேசான் காடுகளும் தப்பவில்லை. கடந்த ஐம்பது வருடங்களில் மவைக்காடுகளில் நேர்ந்த பொருளாதரச் சுரண்டல் காரனமாகப் பெருமளவு மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பய்யன. மண்ணரிப்பால், பூமியின் சுற்றுச்சூழலே பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டு, இற்கையின் சீற்றத்துக்கு வழி செய்யப்பட்டு விட்டது. தவிர, மரத்தவளை போன்ற அரிய உயிரினங்கள் முற்றிலும் அழிக்கப்படும் ஆபத்துகள் உள்ளாகியிருக்கின்றன.
  உலகின் மிகப்பரந்த மழைக் காடுகளைக் கொண்ட அமேசான் படுகை அரிய வகைப் பறவையினங்கள்,மீன் வகைகள் மற்றும் மிருக இணங்களுக்குக் குடியிருப்பாக இருந்து இயற்கைக்கு உதவுகிறது. இயற்கையின் பொக்கிசமாக விளங்கும் அமேசான் காடுகளை உரிய வகையில் பாதுகாத்து, மற்ற உயிரினங்களுக்கு பாதிப்பில்லாமல் நடந்து கொள்ள வேண்டியது மனிதரின் கடமை.

மழைக்காடுகள் இற்கையின் பொக்கிஷம்...
கங்கை நதி

  பாரத மக்கள் தெய்வமாகக் கருதும் கங்கை, வற்றாத நீரும், குதறையாத வளமும் வழங்கும் ஜீவநதி. கங்கை மீதிருக்கும் மரியாதை குறைந்து விடலாகாது என்று அதன் பிறப்புக்கு, கடவுளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு புராணக் கதையும் வழங்கப்படுகிறது.
  கைலாயத்தில் பார்வதி சிவனின் கண்களைப் பொத்தினதினார். இருண்ட அகிலத்துக்கு ஒளியூட்ட சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதந் வெப்பம் தாக்கியதால் பார்வதியின் கைகளில் வியர்வை முத்துக்கள் அரும்பின. அன்னை கைகளை உதறினாள். உதிர்ந்த துளிகள் வெளளமாகத் திரண்டன. சிவன் அந்த வெள்ளத்துக்கு  கங்கை எனப் பெயரிட்டு, அள்ளி எடுத்து தலையில் முடிந்து கொண்டார். கங்கை புனிதமடைந்தது. மக்களின் பாவங்களைக் கரைக்கும் சக்கியும் பெற்றது.
  கங்கையைப் பூமிக்கு வரவழைத்தால் மக்களின் பாவங்களைப் போக்கிவிடலாம் என்று எண்ணிய பகீரதன் என்னும் அரசகுமாரன் சிவனைக் குறித்துத் தவம் புரிந்தான்.
  அவனுக்கும், மக்களுக்கும் அருள் புரிய, மஹாவிஷ்ணு கங்கையிடம் பூமிக்கச் செல்லுமாறு கூறியதாகவும், கங்கையும் பூமி நோக்கிப் பாய்ந்தாள் என்றும் அந்தக் கதை சொல்லப்படுகிறது.
  இமயமலையின் இருபத்து இரண்டாயிரமாவது அடி உயரத்தல் படர்ந்திருக்கும் பனி உருகி நதியாகப் பாயத் தொடங்குகிறது. சற்று தூரம் ஓடி மலைப் பிளவுக்குள் மறைந்து நிலமட்டத்தில் இருந்து பத்தாயிரத்த முன்னூறு அடி உயரத்தில் வெளிப்படுகிறது. பகீரதனின் தவத்தால் பூமிக்கு வந்தது என்று நம்பப்படுவதால் நதிக்கு இங்கு பாகீரதி என்று பெயர்
  கங்கை இந்தியாவின் முக்கிய ஆறாகும். இமய மலையில் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதியானது, தேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது. பிறகு உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று, ஹூக்லி, பத்மா என இரு ஆறுகளாக பிரிந்து முறையே மேற்கு வங்காளம், வங்கதேசம் வழியாகச் சென்று மிகப்பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கங்கை ஆறு மொத்தம் 2507கிமீ ஓடுகிறது. ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பட்னா, கொல்கத்தா ஆகியவை இவ்வாற்றின் கரையில் அமைந்த முக்கிய நகரங்களாகும்.
  வங்கதேசத்தில் கங்கையானது பத்மா என அழைக்கப்படுகிறது.

  கங்கை பிறப்பெடுக்கும் இடத்திலிருந்து பதினாறு கி.மி. தொலைவில் அதன் கரையில் முதல் கோயில் அமைந்துள்ளது. அதன் பெயர் கங்கோத்ரி. 250 கி.மி. பயணம் செய்தபின் கங்கை ஹரித்வாரைத் தொடுகிறது. இங்கு கங்கையுடன், யமுனையும் கலக்கிறது.
  பயணத் துவகத்திலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் கங்கை, அலஹாபாதைக் கடந்தவுடன் காசியைத் தொடுவதற்காக வடக்கு நோக்கிப் பாய்வது ஓர் ஆச்சரியம்!
   கங்கையில் ஏராளமான மீன்கள் உள்ளன. அவற்றைப் பிடித்து மீனவர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள். இமயத்தில் படர்ந்திருக்கும் பனி உருகிக் கொண்டே இருப்பதால் கங்கையில் நீர் வற்றுவதே இல்லை. நீர் பாசனத்துக்கு பயன்பட்டு ஏராளமான விவசாயிகளின் வாழ்வாதாரமாக கங்கை விளங்குகிறது.
  தூய்மையான கங்கையில் ஆலைக் கழிவுகள் கலக்கப்பட்டு நீர் மாசடைந்து கொண்டே போவதால் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் விரைவிலேயே கங்கை எதற்கும் பயன்படாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளதாகக் கவலைப்படுகிறார்கள்.
  காசியின் விளிம்பைத் தொட்டுச் செல்லும் கங்கையின் கரையெங்கும் கடவுளர்களின் கோயில்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட படித்துறைகள். மக்கள் நதியில் நீராடுகிறார்கள், புஷ்பாஞ்சலி செய்கிறர்கள், தீபங்களை ஏற்றி, தெப்பங்களாக மிதக்க விடுகிறார்கள். இவ்வளவு மரியாதைகளையும் ஏற்றுக் கொள்ளும் கடவுள்காம்தான் கங்கையை காப்பாற்ற வேண்டும்!

இயற்கையின் கொடை நதிகளை மாசுபடாமல் இருக்க உதவுவோம்.

Thursday, January 20, 2011

 ஏலகிரி பச்சை மலை

  வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்திருக்கும் ஏலகிரி மலை, பிற கோடை வாசஸ்தலங்களோடு ஒப்பிடுகையில், இயற்கைச் சூழலிலும், தட்பவெப்ப நிலையிலும் ஓரளவு மாறுபட்டிருக்கிறது.
  கடல் மட்டத்திலிருந்து 1045 மீட்டர், அதாவது 3,400 அடி உயரத்தில் இந்த ஏலகிரி அமைந்திருக்கிறது. இதனால், கோடை காலத்திலும் சில்லென வீசும் காற்று, இரவில் எப்போதும் குளிர் என மனதுக்கு இதமளிக்கும் சூழல். குளிர்காலத்தில் இங்குள்ள குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்ஷியஸ், கோடை காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்ஷியஸ். கோடை காலத்தில் வெயில் நிலவினாலும், குளிர்ந்த காற்று வீசுவதை உணர முடியும்.
  இதுமட்டுமன்றி, மொத்தம் இருக்கும் 14 கொண்டை ஊசி வளைவுகளுக்கும், காரி, பாரி, ஓரி, ஒüவையார், கபிலர், கம்பர், இளங்கோ, திருவள்ளுவர், பாரதியார், பாவேந்தர் எனத் தமிழ் வளர்த்த புலவர்கள், கவிஞர்களின் பெயர்கள். சாலைகள் அனைத்தும் பளிச்சென, புத்துயிர் பெற்று, பள்ளம் மேடின்றி, அழகாகப் பராமரிக்கப்பட்டிருந்தன.
  வேலூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஒசூர், பெங்களூர் பகுதி மக்களுக்கும் ஏற்ற இடமாக இருக்கிறது. பெங்களூரில் கணினி மென்பொருள் துறையில், கணினியோடு போராடும் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் வார இறுதி நாள்களைக் கொண்டாட ஏற்ற இடமாக இன்றைக்கு ஏலகிரி மாறியிருக்கிறது. பெங்களூரிலிருந்து காரில் சுமார் 4 மணி நேர பயணத்தில் ஏலகிரியை அடைய முடியும் என்ற சூழல் இருக்கிறது. அதிலும் சிலர், இரு சக்கர வாகனங்களிலேயே நேராக ஏலகிரி மலைக்கு வந்து விடுகின்றனர்.
  ஏலகிரி மலை மீது முதலில் வரவேற்பது, 13-வது வளைவில் இருக்கும் டெலஸ்கோப்
மையம். வனத்துறை பராமரிப்பில், இலவசமாகவே மலை அடிவாரத்தில் இருக்கும்  பொன்னேரி கிராமத்தின் அழகை ரசிக்க முடியும்.
  அடுத்ததாக, புங்கனூர் கிராமத்தில் இருக்கும் ஏரி. ஏலகிரியில் படகு சவாரி செய்வதற்கான மிகப் பெரிய ஏரி இது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் எனப் பலர் ஒரே நேரத்தில் சவாரி செய்வதற்கான வகை, வகையான படகுகள் உள்ளன. சுற்றுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கிறார்கள்.
  படகுத் துறைக்கு எதிரேயே இயற்கைப் பூங்கா அமைத்திருக்கின்றனர் சுற்றுலாதுறையினர். இதை தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது. புல்வெளிப் பூங்கா இது. இதன் நடைபாதையின் இரு பக்கமும் பச்சைப் பசேலெனப் புல் தரைகள், அழகான செடிகள், 5 செயற்கை நீரூற்றுகள், இசைக்கு ஏற்ப நடனமாடும் செயற்கை நீரூற்று, செயற்கையாகவே உருவாக்கப்பட்ட சிற்றருவி, தொட்டிகளில் பார்வைக்கு வைக்கப்பட்ட மீன்கள், ரோஜாப் பூந்தோட்டம் என அழகின் அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கிறது.
  புங்கனூருக்கு மிக அருகே இருக்கும் அத்தனாவூர். அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் பாராகிளைடிங் திருவிழா நடைபெறும் இடம் இருக்கிறது. திருவிழா நாட்களில் மட்டுமே இங்கு கூட்டம் அதிகம் காணப்படும்.
  அங்கிருந்து 8 கி.மீ. தூரத்தில் நிலாவூர் இருக்கிறது. அங்கு அம்மன் கோயிலும், அதையொட்டிய சிறு பூங்காவும் உண்டு. மலைகளில் இருந்து பெருகி, வழிந்தோடி வரும் ஓடை நீரைச் சேமித்து, சிறு படகு நிலையம் அமைத்திருக்கின்றனர்.
  காட்டு வழிப் பயணமாக, அங்கிருந்து மலைப் பாதையில் 8 கி.மீ. தூரம் நடந்து சென்றால் ஜலகாம்பாறை செல்ல முடியும். அங்கு முருகன் கோயில் இருக்கிறது. காட்டு வழியில், மூலிகைச் செடிகள், புதர் மண்டிய இடங்கள், உயர்ந்து வளர்ந்த பல வகை மரங்கள், வன விலங்குகளைக் காண முடியும். அருகேயிருக்கும் மங்கலம் கிராமத்துக்குச் சென்றால், சுவாமி மலை கோயிலுக்குச் செல்ல 4 கி.மீ. தூரத்துக்கு காட்டுவழிப் பாதை இருக்கிறது.
  ஆண்டுக்கு ஒரு முறை அரசால் நடத்தப்படும் கோடை விழா தவிர்த்து, இங்கு வாகனப் பெருக்கம் அவ்வளவாகக் கிடையாது. பேருந்து நிலையம் இல்லை.
  ஆட்டோக்களின் நெரிசல் இல்லை. அமைதியான சூழல்; கோடையில் அளவுக்கு ஏற்ற குளிர், மழைக்காலத்தில் உறையவைக்கும் குளிர் எனச் சூழலுக்கு ஏற்றவாறு, தன்னை மாற்றிக்கொண்டு, இன்றும் இயற்கையின் இன்னிசையை வெளிப்படுத்துகிறது ஏலகிரி.

கட்டுரையாளர் - ஜெய்சங்கர்:
நன்றி தினமணி தீபாவளி மலர்...

இயற்கை நமக்கு கொடுத்த கொடை மலை.
 பச்சைகுமாச்சி மலை
                      ஹைவேவிஸின் தோற்றம்
  தேனி மாவட்டத்தில், சின்னமனூர் அருகில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரத்தில் உள்ளது பச்சைகுமாச்சி மலை.
இந்த மலையில் ஹைவேவிஸ், மேகமலை, மணலாறு, மேல்மணலாறு, வெண்ணியாறு, மகாராஜாமெட்டு, இரவங்கலார் ஆகிய மலைக் கிராமங்கள் உள்ளன.
   கொஞ்சி விளையாடும் மேகக் கூட்டங்கள், அருவிகள், அணைக்கட்டுகள், பச்சைப் பட்டு உடுத்தியது போல பரவிக் கிடக்கும் தேயிலை, காபித் தோட்டங்கள், புல்வெளிகள், யானைக் கூட்டம் ஆகியவை இங்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்கின்றன. இதனால் தற்போது ஹைவேவிஸிற்கு வந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
   தேனியிலிருந்து 23 கி.மீ. தூரம் உள்ள சின்னமனூருக்குச் சென்று அங்கிருந்து 40 கி.மீ. தூரம் ஹைவேவிஸ்ஸிற்குச் செல்ல வேண்டும். ஹைவேவிஸ் சாலையைப் பராமரிக்க முடியாமல், எஸ்டேட் நிர்வாகங்கள் தற்போது அரசிடம் ஒப்படைக்க முன்வந்துள்ளன. ஹைவேவிஸ் மலையை சுற்றுலாத்தலமாக்கும் முயற்சியில் கரடு முரடான நிலையில் உள்ள சாலைக்கான இடத்தை கையகப்படுத்தி சீரமைக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
    சின்னமனூரில் இருந்து காலை, மாலை நேரங்களில் ஹைவேவிஸிற்கு 3 பஸ்கள் இயக்கப்பட்டாலும், அங்கிருந்து பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கு வாய்ப்பாகவும், காலதாமதம் மற்றும் போக்குவரத்து சிரமங்களை தவிர்ப்பதற்கும் சுற்றுலாப் பயணிகள் தனியார் வாகனங்களில் சென்று வருவது வசதியாக இருக்கும்.
சின்னமனூர்-ஹைவேவிஸ் சாலையில் 13 கி.மீ. தொலைவில் மலை அடிவாரத்தில் தென்பழனி முருகன் கோயில் உள்ளது. மாலை நேரங்களில் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியின் இயற்கைச் சூழலும், உலாவரும் மயில்களின் கூட்டமும் பார்வையாளர்களுக்கு பரவசத்தைத் தரும். ஹைவேவிஸ் சாலையில் 22 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் இருந்து கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை கிராமங்கள், சின்னச்சுருளி அருவி, பள்ளத்தாக்குகள், மலைமுகடுகள் ஆகியவற்றின் எழில்மிகு தோற்றங்களைக் காணலாம்.
    ஹைவேவிஸ்ஸில் பசுமை பரவிக்கிடக்கும் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கிருந்து மணலாறு ஏரியின் தோற்றத்தைக் கண்டு ரசிக்கலாம். மலை முகடுகளுக்கு மத்தியில் ஹைவேவிஸ் அணை உள்ளது. இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர் மேல்மணலாறு வழியாக இரவங்கலாறு அணைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. ஹைவேவிஸ்ஸில் இருந்து 6 கி.மீ. தொலைவில் மேல்மணலாறு பகுதியில் வட்டப்பாறை என்ற இடம் உள்ளது. இங்கிருந்து வன விலங்கு கூட்டங்களை கண்டு களிக்கலாம். இதற்கு அருகில் வெண்ணியாறு அணை, எக்கோ பாயின்ட் ஆகிய இடங்கள் உள்ளன.
     ஹைவேவிஸ்ஸில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள இரவங்கலாறு அணையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கியிருக்கும். ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு அணைகளில் இருந்து இரவங்கலாறு அணைக்குத் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, சுருளி மின் உற்பத்தித் திட்டத்திற்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இரவங்கலாறு அணை அருகில் இரவங்கலாறு அருவி உள்ளது. இந்த அருவியில் ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நீர்வரத்து இருக்கும்.
  இரவங்கலாறு பகுதியில் உள்ள ஏரியில் யானை, காட்டெருமை, பல வகையான மான் இனக் கூட்டம் தண்ணீர் அருந்திச் செல்லும் அழகைக் கண்டு ரசிக்கலாம். இந்த இடம் முல்லையாறு வன விலங்குகளின் புகலிடமாகத் திகழ்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலை முகடுகளின் கண்கவர் தோற்றம், கேரள வனப்பகுதிகள் ஆகியவற்றையும் இங்கிருந்து காணலாம்.
ஹைவேவிஸ் பகுதியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள முல்லையாற்றுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள்தாழி மூலம் இந்த இடத்தின் தொன்மைச் சிறப்பு தெரியவருகிறது. "மதிகெட்டான் சோலை' என்று அழைக்கப்படும் வனப்பகுதியும் இங்குதான் உள்ளது.
மகாராஜாமெட்டு என்னும் இடத்தில் அமைந்துள்ள மகராசியம்மன் கோயில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. மதுரையிலிருந்து கேரளத்துக்குச் செல்லும் வழியில் கண்ணகி வந்து தங்கியிருந்த இடமே தற்போது கண்ணகி கோட்டம் என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் இருந்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியின் இயற்கை எழில் தோற்றத்தைக் காணலாம்.
  ஹைவேவிஸ்ஸில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பயணியர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 18 அறைகள் உள்ளன. தனியார் விடுதிகள் எதுவும் இல்லை. சிறிய அளவிலான உணவகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகள் ஹைவேவிஸ் பேரூராட்சி அலுவலகம் தொலைபேசி எண்: 04554- 232225, கொடைக்கானல் சுற்றுலா அலுவலகம் தொலைபேசி எண்: 04542- 241675ஆகியவற்றில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

கட்டுரையாளர் - ஜி.ராஜன்:
நன்றி தினமணி தீபாவளி மலர்...

இயற்கையை இயற்கையாக இருக்க உதவுங்கள்.