Friday, February 4, 2011

வெப்ப மண்டல மழை காடுகள்


   வெப்ப மண்டல மழை காடுகள்தான் அதிகப்படியான மற்றும் சிறப்புமிக்க அழகிய தாவர வகைகளின் இருப்பிடமாக உள்ளது. உலகின் 40 சதவீத விலங்கு மற்றும் தாவர வகைகள் இங்குதான் காணப்படுகிறது.
  
 இங்கே வெப்ப நிலை சமமாக இருக்கும். டெம்பரேச்சர் பொதுவாக 20 டிகிரி முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
 மழை வருடத்தின் பெரும்பாலான அனைத்து நாட்களிலும் பெய்கிறது. வருட மவைபொழிவு 1500 மி.மி., (60 இன்ச்) என்ற அளவினைவிட குறைவதே இல்லை. அதோடு சில சமயம் இந்த அளவு 4000 மி.மி., (160 இன்ச்) என்பதை கூட எட்டிவிடும்.
 வெப்ப மண்டல காடுகளில் தாவரங்கள் பல்வேறு அடுக்குகளில் தோன்றுகின்றன. சூரிய ஒளி பூமியில் படாதவாறு வளர்ந்திடும் மரங்கள் பொதுவாக 25 மீ (150 அடி) உயரமும், புதர் செடி அடுக்கு அதிகபட்சமாக 10 மீ (30 அடி) உயரமும், குறைந்த காலம் தோன்றி மறையும் மரங்கள் 45 மீ (150 அடி) உயரமும் வளர்ந்திடும்.
  
   எங்கும் பச்சைமயம். வெப்ப மண்டல மழை காடுகள் டிராபிக் ஆப் கேன்சர் மற்றும் கேப்ரிகார்னின் இடைப்பட்ட பகுதியில் காணப்படும் மத்திய மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் நிலப்பகுதிகளில் வளர்கின்றன. இதுதான் உலகின் தாவர சாம்ராஜ்யம். இந்த வெப்ப மண்டல பருவ காடுகள். மலைகள் மற்றும் பெரிய புல்தரை பரப்புகள் உள்ளன.
  பெரிய காட்டுப் பகுதி, அமேசான் பகுதிதான் உலகின் தனிப் பெரிய வெப்ப மண்டல காட்டு பகுதியாகும்.

இயற்கை வனவளமே நாட்டின் வளம்...

Thursday, February 3, 2011

கடல் எலி


   கடற்கரையோரம்  கடல் மண்ணுக்குள் இருந்து ஒரு வினோத உயிரினம் அடிக்கடி வெளிப்படும். யாராவது பார்த்துவிட்டால் நொடிப்பொழுதில் குழிதோண்டி மறைந்து கொள்கிறது. அடுத்தடுத்து கடல் அலைகள் கடற்கரை மணலில் மோதி மீண்டும் கடல் நீர் கடலுக்குள் செல்லும் சமயங்களில் கூட்டமாக வெளிப்படும் இந்த உயிரினம், சாதுர்யமாக இரையை பிடித்துக் கொண்டு மீண்டும் மண்ணுக்குள் மறைந்து கொள்கின்றன. நிலத்தில் உள்ள எலி போல் தோற்றமளிக்கும் இந்த வினோத கடல் உயிரினம்.

   இந்த உயிரினம் நண்டு வகையை சேர்ந்த மச்ச நண்டு ஆகும். இதன் அறிவியல் பெயர் "எமிரிட்டா ஆசியாடிக்கா'. இது,"ஹிப்பாய்டியே' குடும்பத்தை சேர்ந்தது. உள்நாட்டு மீனவர்கள் இதை "கடல் எலி' என்று அழைக்கின்றனர். இவற்றுக்கு ஐந்து இணை கால்கள் இருந்தாலும், நண்டுகளைப் போல் வெட்டு கொடுக்குகள் இல்லை. இவை பக்கவாட்டில் நகராது. பின்னோக்கி நகரும் தன்மை கொண்டவை.

   நேரில் பார்த்தால் அப்படி தெரியாது. கடற்பறவைகள், இவற்றை கண்டால் குஷியாகி பிடித்து தின்று விடும். கடற்பறவைகளிடம் இருந்து தப்பிக்க, அலை அடிக்கும் அரிப்பள்ளம் அருகே மச்ச நண்டுகள் வலை தோண்டி மறைந்து கொண்டு வாழும். இந்த மச்ச நண்டுகளுக்கு இரண்டு நீண்ட உணர்வு தண்டுகள் முகப் பகுதியில் உள்ளன. கடல் நீர் ஏற்றத்தையும் வற்றலையும் தெரிந்து கொள்ள இந்த உணர்வு தண்டுகள் உதவுகின்றன. மற்ற நண்டுகளைப் போல் இதன் ஓடுகள் தோலுரிக்கும் தன்மை உடையது.

    இவற்றில் ஆண், பெண் உண்டு. சில ஆண் மச்ச நண்டுகள் ஓட்டின் அளவு 3.5 மி.மீட்டர் வளர்ந்த பிறகு, ஆண் தன்மை மறைந்து, பெண் இனமாக மாறும். அதே நேரத்தில், அது முழு வளர்ச்சி பெற்ற பெண்ணாகவும் இருக்காது. பின்பக்க பகுதியில் சினை முட்டைகள் காணப்படும். கடல் அலை கரையைத் தொட்டு திரும்பும் நேரத்தில், கடல் நீரிலுள்ள மிதவை உயிர் பொருள், மற்றும் சிறு உயிரிகளை உண்டு இவை உயிர் வாழும். மீனவர்கள் தூண்டில்களில் மீன் பிடிக்க இரையாக பயன்படுத்துகின்றனர்.

படித்தும் கண்டும் அறிந்தது...
  
இயற்கையை ரசித்து இயற்கையாக வாழவும்.

Tuesday, February 1, 2011

பசு மீன்



தலையில் இரண்டு கூர்மையான கொம்புகள் உள்ள இந்த வித்தியாசமான பிராணியைப் பாருங்கள். இது ஒரு மீன் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அதிலும் இது பசு மீன். ஆமாம்.  பசுவிற்கு இருப்பதைப்போன்று இரண்டு கொம்புகள் உள்ளதுதான் இந்த மீனின் சிறப்புத் தன்மை. இதற்கு இப்படிப்பட்ட கொம்புகள் உள்ளதால் எதிரிகளால் இதை அவ்வளவு எளிதாக விழுங்க முடியாது. அது மட்டும் அல்ல, தன் மேல் தோலில் கடும் விஷத்தைக்கொண்ட மீன் இது. ஆயினும் மஞ்சள் நிறத்தில் நிறைய வெண்புள்ளிகள் உடைய இவற்றைத்தான் வெளிநாட்டுக்காரர்கள் தங்கள் மீன் காட்சிச் சாலைகளில் மிகவும் அதிகமாக வளர்க்கிறார்கள். 

இயற்கையின் அதிசயம் நமக்கு மகிழ்ச்சி

Monday, January 31, 2011

இயற் (கை) கொடுக்கும் காடுகள்!


   காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன.பெருமளவில் மனிதகுலத்திற்கு அவை நமக்கு மரம்,மூலிகை, காய், கனிகள் இன்னும் பல பொருட்களைத் தருகின்றன. காட்டு மரங்களில் இருந்தே நாம் காகிதங்களையும், செயற்கைப் பட்டுகளையும் உருவாக்குகிறோம்.
  ஒரு காலகட்டத்தில் மனிதன் காடுகளை பெருமளவில் நாசப்படுத்தியதோடு, அழித்தும் வந்தான். காடுகள் அவ்வாறு அழிக்கப்பட்டதால் மரங்களும், பிற பயனுக்குரிய பொருட்களும் கிடைகாமல் போயின. அதுமட்டுமல்ல, தட்பவெப்பநிலை மாறியதோடு, காடுகள் மறைந்த இடங்களில் எல்லாம் பாலைவனங்கள் தோன்றலாயின. அதன்பின்பே காடுகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பரவலாயிற்று.
   காடுகள், நீர் வளத்தைப் பாதுகாக்கின்றன. மலைகளில் உள்ள் அடர்ந்த காடுகளில் மழை பெய்யும்போது, மரங்களின் இலைகளால் அதன் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு நீர் விழுகிறது. எனவே அங்கு வளமான மண் கரைந்து போவதில்லை. அப்படி அரித்துச் செல்லும் மண்ணை மலைச்சரிவில் உள்ள மரவேர்கள் தடுத்து விடுகின்றன.
   மலைகளில் மரங்களே இல்லாதிருந்தால் மழை வேகமாகப் பெய்து, அங்குள்ள வளமான மண்ணை அடித்துக்கொண்டு போய்விடுகிறது. குளிர்காலங்களில் மலையில் பெய்து உறையும் பனி, வெறுந்தரையில் விரைவில் உருகிவிடும். ஆனால் காடுகளில் பெய்யும் பனி மெதுவாகவே உருகும். மேலும் அந்த நீர், நிலங்களுக்கும், பண்ணைகளுக்கும், ஊற்றுகளுக்கும், மெதுவாகச் சென்று பரவுகிறது.
  வேகமாக வெள்ளப் பெருக்கு, மரங்களை வீழ்த்தி விடுகிறது. வெற்றிடத்தில் விழும் மழை நீரும், உருகும் பனி நீரும் மெதுவாகச் செல்வதற்குப் பதிலாக துரித கதியில் ஓடி மறைந்து விடுகிறது.
   வண்டல் மண்ணை வாய்க்கால், ஆறுகள், கடல் ஆகியவற்றுக்கு மழை நீர் இழுத்துச் செல்வதை காடுகள் தடுக்கின்றன. மரங்களின் வேர்களும், கிளைகளும், வண்டல் மண் அரித்துச் செல்லப்படாமல் தடுத்து விடுகின்றன.
   காடுகள் அழிக்கப்பட்டு மொட்டையாகும். மலைகளில் இருந்து அடித்துச் செல்லப்படும் வண்டல், துறைமுகங்கள், நதிக் கால்வாய்கள் ஆகியவற்றில் படிகிறது. அந்த வண்டல் மண்ணை அகற்றி, ஆழப்படுத்த உலகெங்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அதே நேரம் வண்டல் அரிக்கப்படும் நிலம் தனது வளத்தை இழப்பதால், விவசாயம் கேள்விக்குறியாகிறது.
  மனிதன் தனது சுயநலத்தால் எப்படி தனக்குத் தானே தீங்கு செய்துகொள்கிறான் என்பது இதிலிருந்து புரியும்.

மரம் வளர்ப்போம் புவிகாப்போம்

Friday, January 28, 2011

ஆல்ப்ஸ் மலை வெள்ளை அழகி

   ஆல்ப்ஸ் என்ற பெயரைத் திரை இசைப் பாடல்களில் கேட்டிருப்போம். ஆல்ப்ஸ் என்பது தென் மத்திய ஆஸ்திரியா, ஸ்லோவேனியா பகுதிகளில் துவங்கி, இடையில் இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி நாடுகளைக் கடந்து, மேற்கே ஃபிரான்ஸ் தேசம் வரை, இம்மலைத்தொடர் பிறை வடிவத்தில் மத்தியதரைக்கடலோரம் நீண்டிருக்கிறது.
லத்தீன் மொழியில் ஆல்ப்ஸ் என்றால் வெண்மை என்று அர்த்தம். இம்மலைத்தொடர் பனி நிறைந்து வெண்மையாக இருப்பதால், ஆல்ப்ஸ் என்ற பெயர் பெற்றது.
  சுமார் ஆயிரத்து இருநூறு கிலோமீட்டர் நீளமும், இரண்டு லட்சத்து ஏழாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பல சிகரங்கள் பத்தாயிரம் அடிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. இங்கு பல்லாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குப் பனிப்பாறைகள் உள்ளன.
  ஆல்ப்ஸ் மலைத்தொடர் அட்லாண்டிக் பெருங்கடலையும் மத்தியதரைக் கடலையும், கருங்கடலையும் பிரிப்பதாக அமைந்துள்ளது. ரோன், டான்யுப், மற்றும் போ உள்ளிட்ட பல ஐரோப்பிய ஆறுகளின் தோற்றுவாயாக இம்மலைத்தொடர் விளங்குகிறது.
   பொதுவாக, கிழக்கு ஆல்ப்ஸ், மேற்கு ஆல்ப்ஸ் என்று இம்மலைத்தொடர் இரு பகுதிகளாகக் குறிப்பிடப்படுகிறது. ரைன், லிரோ, மேரா என்ற நதிகளை ஒட்டி, கான்ஸ்டன்ஸ் மற்றும் கோமோ என்ற ஏரிகளுக்கு இடையில் இப்பிரிவு நிகழ்ந்துள்ளது.
   மேற்கு ஆல்ப்ஸில், பதினாறாயிரம் அடி உயரமுள்ள மான்ட் என்பது மிக உடரமான சிகரமாக விளங்குகிறது. கிழக்கு ஆல்ப்ஸில் பதிமூன்றாயிரம் அடிகளுக்கு மிகுந்த பிஸ் பெர்னியா என்பதே உயரமான சிகரமாகும்.
ஆர்வம், வணிகம், ஆராய்ச்சி, சுற்றுலா, யாத்திரை என்று பல காரணங்களுக்காக ஆல்ப்ஸ் மலைத் தொடர் மனிதனை வசீகரித்துத் தன்பால் இழுக்கிறது.
   அங்காங்கே மலைச்சரிவுகளையும், இடைப்பட்ட சமவெளிகளையும் கடக்கச் சாலைகள், ரயில் பாதைகள், நடைபாதைகள் இருக்கின்றன. அதனால், ஆல்ப்ஸ் மலைத் தொடரில் வசதியாகப் பயணம் செய்வது இன்றைக்கு சாத்தியமாகி இருக்கிறது.
மலையின் வெவ்வேறு உயரங்களில் வெவ்வேறு சீதோஷ்ண நிலை நிலவுகிறது. அதற்கேற்றபடி அங்கே தாவரங்ளும், உயிரினங்ளும் காணப்படுகின்றன. கிரேநோபிள், இன்ஸ்ப்ரூக், பொல்ஸானோ ஆகியவை குறிப்பிடத்தக்க ஆல்பைன் நகரங்களாக விளங்குகின்றன.
செயின்ட் காடர்ட் கணவாய் ஆல்ப்ஸின் குறிப்பிடத்தக்க சுரங்கப் பாதைகளில் ஒன்றாகும்.
  மூவாயிரம் அடிக்கும் தாழ்வான உயரங்களில், குளிர் குறைவாக இருப்பதால், சிறு சிறு கிராமங்கள் அமைந்துள்ளன. பலவகைத் தாவரங்கள் இங்குப் பயிரிடப்படுகின்றன. பனி மூடாத நேரத்தில், மலைத்தொடரே திடீரென்று உயிர்பெற்றது போல், பூத்துக் குலுங்கும் வண்ண, வண்ணமான பூக்களுடன் காண்போர் கண்களைக் கொள்ளை கொள்கிறது.
  கோடை, குளிர்காலம் இரண்டு பருவங்களிலும் சுற்றுலாவுக்கு ஆல்ப்ஸ் வழி செய்கிறது. குறிப்பாக, குளிர்காலத்தில், பனிச்சறுக்குப் பந்தையங்கள் உள்ளிட்ட பல்வேறு பனி விளையாட்டுக்களில் பங்கு கொள்ள ஆர்வலர்கள் கூடுகின்றனர்.
  இயற்கையின் மாபெரும் அழகுப் பிரதேசங்களில் ஒன்றாக ஆல்ப்ஸ் அமைந்துள்ளது. தரை மார்க்கம், ஆகாய மார்க்கம், மற்றும் ரயில் வழி என்று அக்கம்பக்கத்து நாடுகளிலிருந்து ஆல்ப்ஸ் சென்று வர பல வசதிகள் செய்து தரப்படுகின்றன. இதன் காரணமாக ஆண்டு தோறும் பல கோடி சுற்றுலாப் பயணிகள் ஆல்ப்ஸ் மலைக்கு வருகின்றனர்.

இயற்கையை இயற்கையாக இருக்க விடுவோம்...

Thursday, January 27, 2011

அமேசான் மழைக்காடுகள் இற்கையின் பொக்கிஷம்.
  தென் அமேரிக்காவில் இருக்கும் அமேசான் காடுகள் மிக அடர்ந்த மழைக்காடுகள். 2008ம் வருடம் உலகின் புதிய ஏழு அதிசயங்களுக்கான பட்டியலில், அமேசான் காடுகள் இடம் பெற்றன. அமேசோனியா என்றும் அமேசான் மழைக்காடுகள் என்றும் அழைக்கப்படும் இவை நூற்று நாற்பது கோடி ஏக்கர் பரப்பளவுக்குப் பரந்துள்ளன. இப்பரப்பளவை பிரேடிலே, பெரு, கொலம்பியா, வெனிசுலா, ஈக்வதார், பொலிவியா, கயானா, கரிநேம், மற்றும் ஃப்ரென்ச் குயானா என்ற ஒன்பது தென் அமெக்கா நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன.
  இக்காட்டில் பல்லாயிரக் கணக்கான மரங்கள், தாவர வகைகள் காணப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பறவை வகைகள், மீன் வகைகள், பல நூறு வகை மிருகங்கள் இங்கு வாழ்கின்றன. இருநூற்றைம்பது கோடி விதமான பூச்சி வகைககள் அமேசான் காடுகளில் சுற்றி வருகின்றன. இப்படி, பல கோடி உயிரினங்களுக்கு அமேசான் காடுகள் அடைக்கலம் கொடுத்துள்ளது. வேறெங்கும் கான முடியாத விதம் விதமான உயிர் வகைகள் இங்கு இருப்பதால், உயிரினங்கள் பற்றிய எந்த ஆராய்ச்சியும் இக்காடுகளைக் கவனிக்காமல் முழுமை பெற முடியாது.
  அமேசான் என்ற பெயர் வரக் காரணம் என்ன? இங்குள்ள மரங்களின் வேர்ப்பகுதிகள் நீரோடைகளில் வரும் படகுகளைக் கவிழ்க்க வல்லவை. எனவே இங்கு வாழ்ந்த காட்டு மக்கள் அவ்வகை மரங்களை அமேசான் என்று அழைக்கலாயினர், அமேசான் என்றால், இங்குள்ள மக்கள் மொழியில் 'படகுகளை அழிக்க வல்லவன்' என்று பொருள்.
  அழகு இருக்கும் இடத்தில் ஆபாத்தும் பொதிந்து தானே இருக்கும்? ராட்சத அனகோண்டா பாம்புகள், முதலை வகையைச் சேர்ந்த கருநிற கேய்மன், மலைவாழ் சிங்கங்கள், வெகு வேகமாக ஓடக்கூடிய சிறுத்தை வகைகள் என்று இயற்கையின் ஆபத்தான உயிரினங்களும், சில வகை விஷத்தாவரங்களும் இங்கே காணப்படுகின்றன.
  இங்குள்ள ஈல் மீன் மனிதனையே சாய்க்கக் கூடிய அளவு மின்சாரம் பாய்ச்சக் கூடியது. ரத்தக் காட்டேரி நகை வவ்வால்களும் காணப்படுகின்றன. இவை ராபீஸ் என்னும் மிகக் கொடிய நோயைப் பரப்ப வல்லவை. மஞ்சல் காய்ச்சல், டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் இங்கு வேகமாகப் பரவுகின்றன.இங்கு பாயும் அமேசானே ஆறு, அதிக நீர்க் கொள்ளவிலும், விரிந்த ஆற்றுப் படுகையிலும் உலகின் மிகப் பெரிய ஆறாக விளங்குகிறது.
  உலகத்தில் மொத்தமுள்ள நதி நீரில் ஐந்தில் ஒரு பங்கு, தென் அமெரிக்காவில் ஓடும் அமேசான் நதியில் உள்ளது. இந்த நதி 6448 கிலோமீட்டர் நீளமுடையது. இரண்டாயிரத்திற்கும் அதிகமான மீன் இனங்கள் இங்கே இருக்கின்றன. உலகத்திலேயே பெரிய நதி அமேசான் நதிதான் என்று சிலரும், நைல் நதிதான் என்று சிலரும் சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. பெரிய நதி என்று சொல்வதன் மூலம் நாம் எதைக் குறிப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியமானது.

  மிகவும் கடைசியாக நடத்திய கணக்கெடுப்பின்படி, நைல் நதியின் நீளம் 6670 கிலோ மீட்டர். அமேசான் நதியின் நீளம் 6448 கிலோ மீட்டர். சில ஆவணங்களில் அமேசான் நதியின் நீளம் 6750 கிலோ மீட்டர் என்றும் காணப்படுகிறது. அமேசான் நதி கடலை நெருங்கும்போது அதற்கு ஒரு கிளை நதி உண்டு. இது பாரா எனும் மற்றொரு நதியைச் சென்றடையும். இந்த நதிவழி, அட்லாண்டிக் கடலை அடையும் தூரத்தைக் கணக்கிடும்போதுதான், அமேசானுக்கு 6750 கிலோ மீட்டர் நீளம் வருகிறது.

  ஆனால், அந்த நதி அமேசானின் கிளை நதி அல்ல. நீரியலின்படி  அது, டோக்காட்டின்ஸ் பகுதியில் இருக்கிறது. எனவே, அமேசான் நதி அட்லாண்டிக்கை அடைவது, தோ-நோர்த்  எனும் கனால் வழியாகத்தான். அந்த வழியில் உள்ள நீளத்தைத்தான், அமேசான் நதியின் சரியான நீளமாகக் கொள்ள வேண்டும். அமேசான், 6448 கிலோ மீட்டர் நீளமுடையது என்று சொல்வதற்கு இதுதான் காரணம்.

  ஆனால், மிகப் பெரிய நதி எது என்று முடிவு செய்வதற்கு நாம் நதிகளின் நீளத்தை மட்டும் கணக்கிலெடுப்பது அறிவியல் பூர்வமானது அல்ல. நதி உட்கொள்கின்ற நீரின்     அளவு, நதியின் பரப்பளவு, நதி பயணிக்கும் பகுதியின் நீளம் எனும் அம்சங்களையும் நாம் பரிசீலிக்க வேண்டும். இந்தத் தன்மைகளின்படி ஆராய்ந்து பார்க்கும்போது அமேசான் நதிதான் முதலிடத்தில் இருக்கிறது. அமேசான் நதியின் வழியாக சாதாரண நேரங்களில் ஒரு வினாடிக்கு 42,00,000 கன மீட்டர் தண்ணீர் செல்கிறது. வெள்ளப் பெருக்கு ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் இது வினாடிக்கு 70,00,000 கன மீட்டராக அதிகரிக்கிறது.

   நைல் நதி உட்பட மற்ற எந்த நதியிலும் இந்தளவு நீர்ப்போக்கு ஏற்படுவது கிடையாது. பரப்பளவிலும் அமேசான் நதிதான் முதலிடத்தில் இருக்கிறது. இதன் பரப்பளவு ஏறத்தாழ 27,20,000 சதுர மைலாகும். உலத்தில் மற்ற எல்லா நதிகளையும்விட இந்த நதிதான் அதிகமான கிளை நதிகளைக் கொண்டிருக்கிறது. 15,000 கிளை நதிகள் உண்டு இதற்கு. நீளத்தைப் பற்றிய விஷயத்தில் விவாதம் இருந்தாலும் உலகத்திலேயே பெரிய நதி அமேசான் நதிதான் என்பதில் சந்தேகம் இல்லை.
  மனிதன் தான் வாழ்வதற்காக காடுகளை அழிக்க ஆரம்பித்த போது, அக்கொடுமையிலுருந்து அமேசான் காடுகளும் தப்பவில்லை. கடந்த ஐம்பது வருடங்களில் மவைக்காடுகளில் நேர்ந்த பொருளாதரச் சுரண்டல் காரனமாகப் பெருமளவு மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பய்யன. மண்ணரிப்பால், பூமியின் சுற்றுச்சூழலே பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டு, இற்கையின் சீற்றத்துக்கு வழி செய்யப்பட்டு விட்டது. தவிர, மரத்தவளை போன்ற அரிய உயிரினங்கள் முற்றிலும் அழிக்கப்படும் ஆபத்துகள் உள்ளாகியிருக்கின்றன.
  உலகின் மிகப்பரந்த மழைக் காடுகளைக் கொண்ட அமேசான் படுகை அரிய வகைப் பறவையினங்கள்,மீன் வகைகள் மற்றும் மிருக இணங்களுக்குக் குடியிருப்பாக இருந்து இயற்கைக்கு உதவுகிறது. இயற்கையின் பொக்கிசமாக விளங்கும் அமேசான் காடுகளை உரிய வகையில் பாதுகாத்து, மற்ற உயிரினங்களுக்கு பாதிப்பில்லாமல் நடந்து கொள்ள வேண்டியது மனிதரின் கடமை.

மழைக்காடுகள் இற்கையின் பொக்கிஷம்...
கங்கை நதி

  பாரத மக்கள் தெய்வமாகக் கருதும் கங்கை, வற்றாத நீரும், குதறையாத வளமும் வழங்கும் ஜீவநதி. கங்கை மீதிருக்கும் மரியாதை குறைந்து விடலாகாது என்று அதன் பிறப்புக்கு, கடவுளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு புராணக் கதையும் வழங்கப்படுகிறது.
  கைலாயத்தில் பார்வதி சிவனின் கண்களைப் பொத்தினதினார். இருண்ட அகிலத்துக்கு ஒளியூட்ட சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதந் வெப்பம் தாக்கியதால் பார்வதியின் கைகளில் வியர்வை முத்துக்கள் அரும்பின. அன்னை கைகளை உதறினாள். உதிர்ந்த துளிகள் வெளளமாகத் திரண்டன. சிவன் அந்த வெள்ளத்துக்கு  கங்கை எனப் பெயரிட்டு, அள்ளி எடுத்து தலையில் முடிந்து கொண்டார். கங்கை புனிதமடைந்தது. மக்களின் பாவங்களைக் கரைக்கும் சக்கியும் பெற்றது.
  கங்கையைப் பூமிக்கு வரவழைத்தால் மக்களின் பாவங்களைப் போக்கிவிடலாம் என்று எண்ணிய பகீரதன் என்னும் அரசகுமாரன் சிவனைக் குறித்துத் தவம் புரிந்தான்.
  அவனுக்கும், மக்களுக்கும் அருள் புரிய, மஹாவிஷ்ணு கங்கையிடம் பூமிக்கச் செல்லுமாறு கூறியதாகவும், கங்கையும் பூமி நோக்கிப் பாய்ந்தாள் என்றும் அந்தக் கதை சொல்லப்படுகிறது.
  இமயமலையின் இருபத்து இரண்டாயிரமாவது அடி உயரத்தல் படர்ந்திருக்கும் பனி உருகி நதியாகப் பாயத் தொடங்குகிறது. சற்று தூரம் ஓடி மலைப் பிளவுக்குள் மறைந்து நிலமட்டத்தில் இருந்து பத்தாயிரத்த முன்னூறு அடி உயரத்தில் வெளிப்படுகிறது. பகீரதனின் தவத்தால் பூமிக்கு வந்தது என்று நம்பப்படுவதால் நதிக்கு இங்கு பாகீரதி என்று பெயர்
  கங்கை இந்தியாவின் முக்கிய ஆறாகும். இமய மலையில் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதியானது, தேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது. பிறகு உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று, ஹூக்லி, பத்மா என இரு ஆறுகளாக பிரிந்து முறையே மேற்கு வங்காளம், வங்கதேசம் வழியாகச் சென்று மிகப்பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கங்கை ஆறு மொத்தம் 2507கிமீ ஓடுகிறது. ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பட்னா, கொல்கத்தா ஆகியவை இவ்வாற்றின் கரையில் அமைந்த முக்கிய நகரங்களாகும்.
  வங்கதேசத்தில் கங்கையானது பத்மா என அழைக்கப்படுகிறது.

  கங்கை பிறப்பெடுக்கும் இடத்திலிருந்து பதினாறு கி.மி. தொலைவில் அதன் கரையில் முதல் கோயில் அமைந்துள்ளது. அதன் பெயர் கங்கோத்ரி. 250 கி.மி. பயணம் செய்தபின் கங்கை ஹரித்வாரைத் தொடுகிறது. இங்கு கங்கையுடன், யமுனையும் கலக்கிறது.
  பயணத் துவகத்திலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் கங்கை, அலஹாபாதைக் கடந்தவுடன் காசியைத் தொடுவதற்காக வடக்கு நோக்கிப் பாய்வது ஓர் ஆச்சரியம்!
   கங்கையில் ஏராளமான மீன்கள் உள்ளன. அவற்றைப் பிடித்து மீனவர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள். இமயத்தில் படர்ந்திருக்கும் பனி உருகிக் கொண்டே இருப்பதால் கங்கையில் நீர் வற்றுவதே இல்லை. நீர் பாசனத்துக்கு பயன்பட்டு ஏராளமான விவசாயிகளின் வாழ்வாதாரமாக கங்கை விளங்குகிறது.
  தூய்மையான கங்கையில் ஆலைக் கழிவுகள் கலக்கப்பட்டு நீர் மாசடைந்து கொண்டே போவதால் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் விரைவிலேயே கங்கை எதற்கும் பயன்படாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளதாகக் கவலைப்படுகிறார்கள்.
  காசியின் விளிம்பைத் தொட்டுச் செல்லும் கங்கையின் கரையெங்கும் கடவுளர்களின் கோயில்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட படித்துறைகள். மக்கள் நதியில் நீராடுகிறார்கள், புஷ்பாஞ்சலி செய்கிறர்கள், தீபங்களை ஏற்றி, தெப்பங்களாக மிதக்க விடுகிறார்கள். இவ்வளவு மரியாதைகளையும் ஏற்றுக் கொள்ளும் கடவுள்காம்தான் கங்கையை காப்பாற்ற வேண்டும்!

இயற்கையின் கொடை நதிகளை மாசுபடாமல் இருக்க உதவுவோம்.

Thursday, January 20, 2011

 ஏலகிரி பச்சை மலை

  வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்திருக்கும் ஏலகிரி மலை, பிற கோடை வாசஸ்தலங்களோடு ஒப்பிடுகையில், இயற்கைச் சூழலிலும், தட்பவெப்ப நிலையிலும் ஓரளவு மாறுபட்டிருக்கிறது.
  கடல் மட்டத்திலிருந்து 1045 மீட்டர், அதாவது 3,400 அடி உயரத்தில் இந்த ஏலகிரி அமைந்திருக்கிறது. இதனால், கோடை காலத்திலும் சில்லென வீசும் காற்று, இரவில் எப்போதும் குளிர் என மனதுக்கு இதமளிக்கும் சூழல். குளிர்காலத்தில் இங்குள்ள குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்ஷியஸ், கோடை காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்ஷியஸ். கோடை காலத்தில் வெயில் நிலவினாலும், குளிர்ந்த காற்று வீசுவதை உணர முடியும்.
  இதுமட்டுமன்றி, மொத்தம் இருக்கும் 14 கொண்டை ஊசி வளைவுகளுக்கும், காரி, பாரி, ஓரி, ஒüவையார், கபிலர், கம்பர், இளங்கோ, திருவள்ளுவர், பாரதியார், பாவேந்தர் எனத் தமிழ் வளர்த்த புலவர்கள், கவிஞர்களின் பெயர்கள். சாலைகள் அனைத்தும் பளிச்சென, புத்துயிர் பெற்று, பள்ளம் மேடின்றி, அழகாகப் பராமரிக்கப்பட்டிருந்தன.
  வேலூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஒசூர், பெங்களூர் பகுதி மக்களுக்கும் ஏற்ற இடமாக இருக்கிறது. பெங்களூரில் கணினி மென்பொருள் துறையில், கணினியோடு போராடும் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் வார இறுதி நாள்களைக் கொண்டாட ஏற்ற இடமாக இன்றைக்கு ஏலகிரி மாறியிருக்கிறது. பெங்களூரிலிருந்து காரில் சுமார் 4 மணி நேர பயணத்தில் ஏலகிரியை அடைய முடியும் என்ற சூழல் இருக்கிறது. அதிலும் சிலர், இரு சக்கர வாகனங்களிலேயே நேராக ஏலகிரி மலைக்கு வந்து விடுகின்றனர்.
  ஏலகிரி மலை மீது முதலில் வரவேற்பது, 13-வது வளைவில் இருக்கும் டெலஸ்கோப்
மையம். வனத்துறை பராமரிப்பில், இலவசமாகவே மலை அடிவாரத்தில் இருக்கும்  பொன்னேரி கிராமத்தின் அழகை ரசிக்க முடியும்.
  அடுத்ததாக, புங்கனூர் கிராமத்தில் இருக்கும் ஏரி. ஏலகிரியில் படகு சவாரி செய்வதற்கான மிகப் பெரிய ஏரி இது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் எனப் பலர் ஒரே நேரத்தில் சவாரி செய்வதற்கான வகை, வகையான படகுகள் உள்ளன. சுற்றுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கிறார்கள்.
  படகுத் துறைக்கு எதிரேயே இயற்கைப் பூங்கா அமைத்திருக்கின்றனர் சுற்றுலாதுறையினர். இதை தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது. புல்வெளிப் பூங்கா இது. இதன் நடைபாதையின் இரு பக்கமும் பச்சைப் பசேலெனப் புல் தரைகள், அழகான செடிகள், 5 செயற்கை நீரூற்றுகள், இசைக்கு ஏற்ப நடனமாடும் செயற்கை நீரூற்று, செயற்கையாகவே உருவாக்கப்பட்ட சிற்றருவி, தொட்டிகளில் பார்வைக்கு வைக்கப்பட்ட மீன்கள், ரோஜாப் பூந்தோட்டம் என அழகின் அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கிறது.
  புங்கனூருக்கு மிக அருகே இருக்கும் அத்தனாவூர். அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் பாராகிளைடிங் திருவிழா நடைபெறும் இடம் இருக்கிறது. திருவிழா நாட்களில் மட்டுமே இங்கு கூட்டம் அதிகம் காணப்படும்.
  அங்கிருந்து 8 கி.மீ. தூரத்தில் நிலாவூர் இருக்கிறது. அங்கு அம்மன் கோயிலும், அதையொட்டிய சிறு பூங்காவும் உண்டு. மலைகளில் இருந்து பெருகி, வழிந்தோடி வரும் ஓடை நீரைச் சேமித்து, சிறு படகு நிலையம் அமைத்திருக்கின்றனர்.
  காட்டு வழிப் பயணமாக, அங்கிருந்து மலைப் பாதையில் 8 கி.மீ. தூரம் நடந்து சென்றால் ஜலகாம்பாறை செல்ல முடியும். அங்கு முருகன் கோயில் இருக்கிறது. காட்டு வழியில், மூலிகைச் செடிகள், புதர் மண்டிய இடங்கள், உயர்ந்து வளர்ந்த பல வகை மரங்கள், வன விலங்குகளைக் காண முடியும். அருகேயிருக்கும் மங்கலம் கிராமத்துக்குச் சென்றால், சுவாமி மலை கோயிலுக்குச் செல்ல 4 கி.மீ. தூரத்துக்கு காட்டுவழிப் பாதை இருக்கிறது.
  ஆண்டுக்கு ஒரு முறை அரசால் நடத்தப்படும் கோடை விழா தவிர்த்து, இங்கு வாகனப் பெருக்கம் அவ்வளவாகக் கிடையாது. பேருந்து நிலையம் இல்லை.
  ஆட்டோக்களின் நெரிசல் இல்லை. அமைதியான சூழல்; கோடையில் அளவுக்கு ஏற்ற குளிர், மழைக்காலத்தில் உறையவைக்கும் குளிர் எனச் சூழலுக்கு ஏற்றவாறு, தன்னை மாற்றிக்கொண்டு, இன்றும் இயற்கையின் இன்னிசையை வெளிப்படுத்துகிறது ஏலகிரி.

கட்டுரையாளர் - ஜெய்சங்கர்:
நன்றி தினமணி தீபாவளி மலர்...

இயற்கை நமக்கு கொடுத்த கொடை மலை.
 பச்சைகுமாச்சி மலை
                      ஹைவேவிஸின் தோற்றம்
  தேனி மாவட்டத்தில், சின்னமனூர் அருகில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரத்தில் உள்ளது பச்சைகுமாச்சி மலை.
இந்த மலையில் ஹைவேவிஸ், மேகமலை, மணலாறு, மேல்மணலாறு, வெண்ணியாறு, மகாராஜாமெட்டு, இரவங்கலார் ஆகிய மலைக் கிராமங்கள் உள்ளன.
   கொஞ்சி விளையாடும் மேகக் கூட்டங்கள், அருவிகள், அணைக்கட்டுகள், பச்சைப் பட்டு உடுத்தியது போல பரவிக் கிடக்கும் தேயிலை, காபித் தோட்டங்கள், புல்வெளிகள், யானைக் கூட்டம் ஆகியவை இங்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்கின்றன. இதனால் தற்போது ஹைவேவிஸிற்கு வந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
   தேனியிலிருந்து 23 கி.மீ. தூரம் உள்ள சின்னமனூருக்குச் சென்று அங்கிருந்து 40 கி.மீ. தூரம் ஹைவேவிஸ்ஸிற்குச் செல்ல வேண்டும். ஹைவேவிஸ் சாலையைப் பராமரிக்க முடியாமல், எஸ்டேட் நிர்வாகங்கள் தற்போது அரசிடம் ஒப்படைக்க முன்வந்துள்ளன. ஹைவேவிஸ் மலையை சுற்றுலாத்தலமாக்கும் முயற்சியில் கரடு முரடான நிலையில் உள்ள சாலைக்கான இடத்தை கையகப்படுத்தி சீரமைக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
    சின்னமனூரில் இருந்து காலை, மாலை நேரங்களில் ஹைவேவிஸிற்கு 3 பஸ்கள் இயக்கப்பட்டாலும், அங்கிருந்து பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கு வாய்ப்பாகவும், காலதாமதம் மற்றும் போக்குவரத்து சிரமங்களை தவிர்ப்பதற்கும் சுற்றுலாப் பயணிகள் தனியார் வாகனங்களில் சென்று வருவது வசதியாக இருக்கும்.
சின்னமனூர்-ஹைவேவிஸ் சாலையில் 13 கி.மீ. தொலைவில் மலை அடிவாரத்தில் தென்பழனி முருகன் கோயில் உள்ளது. மாலை நேரங்களில் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியின் இயற்கைச் சூழலும், உலாவரும் மயில்களின் கூட்டமும் பார்வையாளர்களுக்கு பரவசத்தைத் தரும். ஹைவேவிஸ் சாலையில் 22 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் இருந்து கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை கிராமங்கள், சின்னச்சுருளி அருவி, பள்ளத்தாக்குகள், மலைமுகடுகள் ஆகியவற்றின் எழில்மிகு தோற்றங்களைக் காணலாம்.
    ஹைவேவிஸ்ஸில் பசுமை பரவிக்கிடக்கும் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கிருந்து மணலாறு ஏரியின் தோற்றத்தைக் கண்டு ரசிக்கலாம். மலை முகடுகளுக்கு மத்தியில் ஹைவேவிஸ் அணை உள்ளது. இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர் மேல்மணலாறு வழியாக இரவங்கலாறு அணைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. ஹைவேவிஸ்ஸில் இருந்து 6 கி.மீ. தொலைவில் மேல்மணலாறு பகுதியில் வட்டப்பாறை என்ற இடம் உள்ளது. இங்கிருந்து வன விலங்கு கூட்டங்களை கண்டு களிக்கலாம். இதற்கு அருகில் வெண்ணியாறு அணை, எக்கோ பாயின்ட் ஆகிய இடங்கள் உள்ளன.
     ஹைவேவிஸ்ஸில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள இரவங்கலாறு அணையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கியிருக்கும். ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு அணைகளில் இருந்து இரவங்கலாறு அணைக்குத் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, சுருளி மின் உற்பத்தித் திட்டத்திற்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இரவங்கலாறு அணை அருகில் இரவங்கலாறு அருவி உள்ளது. இந்த அருவியில் ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நீர்வரத்து இருக்கும்.
  இரவங்கலாறு பகுதியில் உள்ள ஏரியில் யானை, காட்டெருமை, பல வகையான மான் இனக் கூட்டம் தண்ணீர் அருந்திச் செல்லும் அழகைக் கண்டு ரசிக்கலாம். இந்த இடம் முல்லையாறு வன விலங்குகளின் புகலிடமாகத் திகழ்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலை முகடுகளின் கண்கவர் தோற்றம், கேரள வனப்பகுதிகள் ஆகியவற்றையும் இங்கிருந்து காணலாம்.
ஹைவேவிஸ் பகுதியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள முல்லையாற்றுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள்தாழி மூலம் இந்த இடத்தின் தொன்மைச் சிறப்பு தெரியவருகிறது. "மதிகெட்டான் சோலை' என்று அழைக்கப்படும் வனப்பகுதியும் இங்குதான் உள்ளது.
மகாராஜாமெட்டு என்னும் இடத்தில் அமைந்துள்ள மகராசியம்மன் கோயில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. மதுரையிலிருந்து கேரளத்துக்குச் செல்லும் வழியில் கண்ணகி வந்து தங்கியிருந்த இடமே தற்போது கண்ணகி கோட்டம் என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் இருந்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியின் இயற்கை எழில் தோற்றத்தைக் காணலாம்.
  ஹைவேவிஸ்ஸில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பயணியர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 18 அறைகள் உள்ளன. தனியார் விடுதிகள் எதுவும் இல்லை. சிறிய அளவிலான உணவகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகள் ஹைவேவிஸ் பேரூராட்சி அலுவலகம் தொலைபேசி எண்: 04554- 232225, கொடைக்கானல் சுற்றுலா அலுவலகம் தொலைபேசி எண்: 04542- 241675ஆகியவற்றில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

கட்டுரையாளர் - ஜி.ராஜன்:
நன்றி தினமணி தீபாவளி மலர்...

இயற்கையை இயற்கையாக இருக்க உதவுங்கள்.

Monday, December 6, 2010

சந்நியாசி நண்டு

சந்நியாசி நண்டு



  சொந்த,பந்தங்களை மறந்து துறவிகளாக வாழும் சந்நியாசிகளுக்கு சொந்த வீடு என்று எதுவும் இல்லாததைப் போல மன்னார் வளைகுடா கடலில் மிக அதிகமாக வாழும் இந்த அரியவகை உயிரினமும் சொந்தவீடு இல்லாமல் சங்குகளின் கூடுகளுக்குள் தங்கி உயிர் வாழ்கின்றன இவ்வகை நண்டுகளை சந்நியாசி நண்டுகள் என்று அழைக்கிறார்கள்.
   இவை எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் விதம் மற்றும் இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..
   ""பாகுராய்டே என்ற விலங்கியல் பெயருடைய இச்சிற்றினங்களில் மொத்தம் 1100 வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிக்காமல் பிறப்பிலிருந்து இறப்பு வரை தன் வளர்ச்சிக்கேற்றவாறு, இறந்து வெறும் கூடுகளாக மட்டுமே இருக்கக் கூடிய சங்குகளின் ஓடுகளுக்குள் தன் உடலை நுழைத்துக்கொண்டு தலையை மட்டும் வெளியில் நீட்டியவாறு இருக்கும். எதிரிகள் வருவது தெரிந்தால் தலையை உள்ளிழுத்துக் கொள்ளும். தன் உருவத்துக்கேற்றவாறு சங்குகளின் ஓடுகள் அமையாதபோது எதிரிகளிடம் மாட்டிக் கொள்கின்றன.
   புத்திசாலியாக இருக்கும் சில சந்நியாசி நண்டுகளோ சின்னஞ்சிறு கடல் தாமரைகளை சங்கு ஓடுகளின் மேற்புறத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளும். எதிரிகள் இந்த நண்டுகளைப் பிடிக்க வரும்போது கடல் தாமரைகள் ஆடுவதைப் பார்த்து பயந்தோடிவிடும். சந்நியாசி நண்டுகள் சாப்பிட்டுவிட்ட போட்ட புழுக்கள், பூச்சிகளின் மிச்சத்தை கடல் தாமரைகள் சாப்பிட்டுக் கொள்கின்றன. நண்டின் மேற்புற ஓடுகளில் ஓட்டிக் கொண்டு அதற்கு பாதுகாப்பாகவும் கடல் தாமரைகள் இருக்கின்றன. இப்படியாக இரண்டும் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொண்டு கடலுக்குள் உயிர் வாழ்கின்றன.
   இந்நண்டுகளின் உடலானது நீண்டு வளைந்த வயிற்றுப்பாகத்தையும் அதன் அடியில் கொக்கி போன்ற உடலமைப்பையும் உடையது. இந்தக் கொக்கியே சங்கின் கூடுகளை நன்றாக பற்றிக் கொள்ள பெரிதும் உதவுகிறது. நீண்டதும், வளைந்ததுமான வயிறானது சங்கின் ஓடான கூடுகளுக்குள் இருக்கும் வளைவுகளுக்குள் உருண்டு, திரண்டு இருக்கும்.பொதுவாக சந்நியாசிகள் தங்கள் இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதைப் போலவே இந்த நண்டும் அவை வாழும் வீட்டை(சங்கின் கூடுகளை) மாற்றிக் கொண்டே இருப்பதால் இதற்கு துறவி நண்டு என்றும் சந்நியாசி நண்டுகள் என்றும் அழைக்கிறார்கள்.
  புண்ணிய ஸ்தலங்களில் கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது கடற்கரையோரங்களில் இவ்வகை நண்டுகளைச் சாதாரணமாகப் பார்க்க முடியும். கடலுக்கு அடியில் கூட்டம், கூட்டமாக ஒன்று சேர்ந்தும் வாழும் இவை தங்களுக்குள் ஒரு குழுவையும் ஏற்படுத்திக் கொள்கின்றன.
  இக்குழுவில் பல்வேறு வயதிலும் உருவத்திலுமான நண்டுகளும் இடம் பெற்றிருப்பதால் இவை தங்களுக்குள் ஒரு வரிசையை ஏற்படுத்திக் கொண்டு ஒவ்வொன்றும் அதனது உடல் உருவத்திற்கேற்றவாறு சங்கின் கூடுகளை மாற்றிக் கொள்கின்றன. அதாவது சிறிய நண்டு ஓரளவு வளர்ந்த பிறகு தன் வளர்ச்சிக்கு தக்கவாறு பெரிய சங்கின் கூட்டிற்குள் போய் நுழைந்து கொள்ளும்.
   ஒற்றுமை இல்லாத கூட்டமாக இருந்தால் சில நேரங்களின் வெற்று சங்குகளின் கூடுகளுக்காக சண்டை நடந்து அதில் வெற்றி பெறும் நண்டு அந்த சங்கின் கூட்டை தன் சொந்த வீடாக ஆக்கிக் கொள்ளும். கரிபியின் துறவி நண்டு, இக்குடேரியன் துறவி நண்டு, ஆஸ்திரேலியன் துறவி நண்டு போன்றவற்றை மேலைநாடுகளில் வீடுகளில் வைத்து பராமரித்தும் பாதுகாத்தும் வருகின்றனர்.
   இவ்வகை நண்டுகள் 32 ஆண்டுகள் வரையும் உயிர்வாழ்வதாகவும் தெரிய வந்துள்ளது. நீண்ட கொம்புகளும் நீண்டு வளர்ந்த வயிறும் உடைய இந்த உயிரினத்தின் கண்களில் ஆயிரக்கணக்கான லென்சுகள் இருந்தாலும் நிரந்தர வீடில்லாமல் சங்கின் கூடுகளை சார்ந்து வாழும் வித்தியாசமான உயிரினமாக இது இருக்கிறது'' என்றார்.

நன்றி தினமணி...

Thursday, November 18, 2010

பூமி மிகப்பெரிய அதிசயம்

நாம் வாழ்ந்து கொணடிருக்கின்ற இந்தப்பூமி மிகப்பெரிய அதிசயம்.

பூமியில் மட்டுமே
   சூரியக்குடும்பத்தில் உள்ள கிரகங்களில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன. மற்றக் கிரகங்களில் இதுவரை எந்த உயிரினங்களும் இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். காரணம், உயிர் வாழ்வதற்கு அவசியமானவை காற்றும், நீரும். மற்ற கிரகங்களில் இல்லை. இரும்பினும், எதிர்காலத்தில் பிற கிரகங்களில் வாழ்வது குறித்து ஆராய்ச்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமைப்பு
   பூமி, உருண்டை வடிவத்தில் அமைந்துள்ளது. இது தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வகையில் சுழன்று கொண்டிருக்கிறது. அத்துடன் சூரியனையும் சுற்றி வருகிறது. இரவு, பகல் என்ற வேறுபாடு தோன்றுகிறது. நம்முடைய பூமி, மிகப்பெரிய காந்தமாகத் திகழ்கிறது. அதன் மையப்பகுதியானது நிக்கல், இரும்பு மூலகத்தைக் கொண்டதாக இருக்கிறது. பூமியின் காந்த சக்திக்கு இதுதான் காரணம்.
நிலவினால் ஆபத்து
  நிலவினால் பூமிக்கு ஆபத்து ஏற்படும் என்று சிலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். காரணம் நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியின் சுழற்சி வேகம் குறைந்துவிடும் என்று சொல்கிறார்கள். ஆனால் இதில் ஓரளவுக்கு மட்டுமே உண்மை இருக்கிறது. அதாவது நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியின் சுழற்சி வேகம் குறையும் என்பது உண்மை. ஆனால், பூமியின் சுழற்சி வேகம் இரண்டு மில்லியன் விநாடிகள் (ஏறத்தாழ 20 லட்சம் வினாடிகள்) மட்டுமே குறையுமாம். அதுவும் நூறு வருடங்களுக்கு ஒருமுறை. எனவே, பயப்படத் தேவையில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அப்படியானால் இப்போது உள்ளதைவிட ஏற்கனவே அதிக வேகத்தில் பூமி சுற்றியிருக்கும் அல்லவா? அப்போது ஒருநாளைக்கு 18 மணி நேரம்மட்டும் தானாம். அதேபோல் ஒரு வருடத்திற்கு 481 நாட்கள் இருந்ததாம்.
பூமியின் வாயுமண்டலம்
  பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு வாயு மண்டலம் தான் காரணம். இதிலிருந்து தான் நாம் சுவாசிப்பதற்கான பிராணவாயு என்று சொல்லக்கூடிய ஆக்சிஜன் கிடைக்கிறது. வாயுமண்டலத்தில் அதிகமாக இருப்பது நைட்ரஜன் வாயுதான் 70 சதவீதத்திற்கு அதன் பங்கு இருக்ககிறது. ஆக்சிஜன் 21சதவீதமும், மற்ற வாயுக்கள் அனைத்தும் சேர்ந்து 2சதவீதமும் உள்ளன. காற்றின் அழுத்தமும், அடர்த்தியும் பூமியிலிருந்து மேலே செல்லச் செல்ல குறைந்து கொண்டே வரும்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில்
   பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் சுமார் 14 கோடியே 96 லட்சம் கிலோமீட்டர்கள். சூரிய ஒளி பூமியை வந்தடைய தோராயமாக 8 நிமிடங்கள் ஆகிறதாம்.
பூமி எங்கே இருக்கிறது
   பூமி எங்கே இருக்கிறது என்று கேட்டால் நம் காலடில் இருக்கிறது என்று எளிதாகச் சொல்லிவிட முடியும். ஆனல், சூரியக்குடும்பத்தில் பூமி எங்கு இருக்கிறது சூரியனில் இருந்து மூன்றவதாக பூமி இருக்கிறது. இதுமட்டும் தற்போது சனிக்கிரகம் இருக்கும் 6-வது இடத்தில் இருக்குமானால், சூரிய ஒளி கிடைக்காமல் பூமியில் உயிரினங்களே தோன்றி இருக்காது. அல்லது சூரியனிலிருந்து மிக அருகில் இருந்திருந்தால், கடும் வெப்பத்தின் காரணமாகவும் உயிர்கள் தோன்றியிருக்காது. நாம் எவ்வளவு பெரிய அதிசயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது புரிந்ததா?

சோ.ஞானசேகர்.

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...

Thursday, November 4, 2010

தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

உலகத் தமிழ் வலைப்பதிவு நன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Saturday, October 30, 2010

புதிய விலங்கினங்கள்

புதிய விலங்கினங்கள்
  உலகில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத அறிய விலங்கினங்கள் இருக்கின்றது அவற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சில புதிய உயிரினங்கள் பசிப்பிக் பெருங்கடலில் அமைந்துள்ள பாப்புவா நியூகினியா தீவில் 200-க்கும் மேற்பட்ட புதிய தாவர, விலங்கினங்களை வி்ஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் வெள்ளை வால் எலி, நீண்ட மூக்கு கொண்ட தவளை போன்ற விந்தை உயிரினங்களும் அடக்கம்.
   இந்த பாலூட்டிகள், இருவாழ்விகள், பூச்சிகள், தாவரங்கள் இதுவரை உலகம் அறியாதவை.
   இதுபற்றி ஆய்வாளர் ஸ்டீவ் ரிச்சர்ட்ஸ் கூறும்போது, "இன்று, முற்றிலும் புதுவகையான பாலூட்டிகளைக் கண்டுபிடித்திருப்பது மிகவும் அதிசயமானது. மரம் ஏறும் கங்காரு போன்ற உயிரினங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் இதுமாதிரியான விந்தையான சின்னச்சின்ன உயிரினங்களைக் காணும்போது நமது ஆச்சரியம் கூடுகிறது" என்கிறார்.
  இன்று உலகில் எஞ்சியிருக்கும் இரண்டு செழுமையான மழைக் காடுகளான அமேசான் காங்கோ வடிநிலப்பகுதி ஆகியவற்றுக்கு இணையானது பாப்புவா நியூகினியா மழைக்காடு.
  "பல்லுயிரினங்களின் கிடங்காகத் திகழும் பாப்புவா நியூகினியாவில் எண்ணற்ற புதிய உயிரினங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள்" ரிச்சர்ட்ஸ் குழுவினர்.
   இவர்கள் கண்டுபிடித்திருக்கும் புதிய உயிரினங்களில் 'மிகவும் அழகான' வெளளை வால் எலி, இரண்டு சென்டி மீட்டர் அளவுக்கு நீளமான மூக்குக் கொண்ட தவளை, பளிச்சென்ற மஞ்சள் நிறப் புள்ளிகள் கொண்ட தவளை ஆகியவை குறிபிடத்தக்கவை. மேலும் பூச்சியினங்கள், சிலந்திகளில் மட்டும் தலா 100 புதிய வகைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
   தவளைகள், ஊர்வனவற்றில் நிபுணரான ரிச்சர்ட்ஸ் கூறுகையில், ''பாப்புவா நியூகினியாவில் புதிய உயிரினங்களைக் கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. நீங்கள் சாதாரணமாக ஓர் உலா சென்றாலே ஒரு புதிய உயிரினத்தையோ, அதிகம் அறியப்படத அதிசயமான ஒன்றையோ காணலாம்'' என்கிறார்.
  பாப்புவா நியூகினியாவின் கரடு முரடான, மலைப்பாங்கான நிலப்பரப்பு காரணமாக அங்கு அதிகமாக உயிரியல் ஆய்வாளர்கள் செல்லவில்லை. தற்போது புதிய உயிரினங்களைக் கண்டுபிடித்திருக்கும் ஆய்வாளர்கள், இன்னும் இங்கு பெரும்பாலன பகுதிகள் ஆய்வு செய்யப்படவில்லை என்று கூறுகின்றனர்.


சோ.ஞானசேகர்...

செழுமையான மழைக் காடுகள் இயற்கையின் அழகு.....

Wednesday, October 13, 2010

பறவைகள்

   பறவைகள் தன் இருப்பை மற்றவர்களுக்குத் தெரிவிக்கவும், தன் இணைப் பறவைக்குத் தெரிவித்து அவற்றை கவர்ந்திழுக்கவும் பறவைகள் ஏற்படுத்துகின்ற இனிய ஓசைதான் பறவைகளின் பாட்டு என்று வழங்கப்படுகிறது.தங்கள் தொண்டையில் இருகின்ற ஸைரின்க்ஸ் (syrinx) எனும் உறுப்பின் உதவியுடன்தான் பறவைகள் பாடுகின்றன.தனித்துவமான இந்த உறுப்பு பறவைகளுக்கு மட்டும்தான் உள்ளது.
   பறவைகள் சில சமயம் வித்தியாசமான குரல் எழுப்பும். உணவு வேண்டி பறவைக் குஞ்சுகள் கொடுக்கும் குரலும், அபாய எச்சரிக்கை செய்வதற்காக எழுப்புகின்ற குரலும் வழக்கமான குரலைவிட வித்தியாசமாக இருக்கும்.
  பறவைகளில் ஆண், பெண் வித்தியாசத்தை மிகப் பொதுவாகவும், வெளிப்படையாகவும் பார்க்கலாம். தன் வண்ணத்தோகையை விரித்து அழகாக நடனமாடுபவை ஆண் மயில்கள். பல நிறங்களுடைய இறகுகளும் கொண்டையுமுடைய சேவல்தான் பெட்டைக் கோழியைவிட அழகாக இருககிறது.
   பறவை முட்டைகளை பொதுவாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். சிலவகைப் பறவைகளின் முட்டைகள் வெண்ணிறமாகவோ, அல்லது இளம் நிறமுடையதாகவோ இருக்கும். புறாக்கள், ஆந்தைகள், மரம் கொத்திகள், மீன் கொத்திகள் ஆகியவற்றின் முட்டைகள் இவ்வகையைச் சேர்ந்தவை. இப்பறவைகள், பொந்துகளிலோ மரக் கிளைகளிலோ கூடு கட்டி முட்டையிடுகின்றன. எனவே எதிரிகளால் அவ்வளவு விரைவாக கூட்டில் உள்ள முட்டைகளைக் கவர்ந்துவிட முடியாது.
  எனவே, இப்பறவைகளின் முட்டைகளின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில் நிறம் அவ்வளவு முக்கியமானதல்ல என்று சொல்லலாம். வேறு சில பறவைகளின் முட்டைகள் அடர்ந்த நிறமுடையதாகவோ,புள்ளிகளுடையதாகவோ இருக்கும்.இவ்வகையான முட்டைகள் தரையிலோ, திறந்த வெளிகளிலோ பொரிய வேண்டியவையாக இருக்கும். எனவேதான் இவை சுற்றுச்சூழலிருந்து எளிதில் பிரித்தறிய முடியாதபடி அடர்ந்த நிறங்களுடனோ, புள்ளிகளுடனோ இருக்கின்றன. எதிரிகளின் பார்வையிலிருந்து தப்புவதற்குதான் இந்த ஏற்பாடு.
  விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சிலவகைப் பறவைகள் மட்டுமே முட்டைகளின்மீது அமர்ந்து அடைகாப்பதில்லை. கருவளர்கிற சமயத்தில் வெப்பநிலையை சீராக வைத்திருக்கும் நோக்கில்தான் பறவைகள் தங்கள் முட்டைகளின் மீது அமர்ந்து அடைகாக்கின்றன. ஆனால் சில இடங்களில் பறவைகள் அடைகாக்காமலேயே தங்கள் முட்டைகளின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கின்றன.
  ஆஸ்திரேலியா, நியூகினி தீவுகள் ஆகிய இடங்களில் உள்ள 'Scrub fowl' எனும் ஒருவகைப் பறவைகள் புற்களையும், இளைகளையும், சிறிய செடிகளையும், மண் துகள்களையும் ஒன்று சேர்த்து பதினைந்தடி உயரமும் முப்பத்தைந்தடி பரப்பளவும் உள்ள ஒரு வகையான குவியலை உருவாக்குகின்றன. சில சமயம் பல் பறவைகள் சேர்ந்து தங்களுக்கான ஒரே குவியலை உருவாக்கின்றன. பிறகு குவியலில் மூன்றடி நீளமுள்ள சிறு சுரங்கங்களை உருவாக்கி அதனுள் முட்டையிடுகின்றன. அந்த தாவரக் குவியலிலிருந்து கிடைக்கிற வெப்பத்தால் முட்டைகள் பொரிகின்றன. வேறொரு வகை பறவையான 'mallee fowl' இலைகளுக்குப் பதிலாக மண்ணைப் பயன்படுத்தி குவியல் அமைக்கின்றன.
  தங்கள் முட்டைகளின் மீது அமர்ந்து அடைகாக்காத சில பறவைகள் உள்ளன. மற்ற பறவைகளின் கூட்டில் முட்டையிட்டுவிட்டு அவை பறந்துவிடும். அந்தக்கூட்டில் வசிக்கும் பறவை அது தன் முட்டைதான் என்று தவறாகக் கருதிக்கொண்டு அந்த முட்டையையும் அடைகாத்து குஞ்சு பொரிக்கும். வெளிவந்த குஞ்சை தன் சொந்தக் குஞ்சுபோல வளர்க்கும். காக்கையின் கூட்டில் முட்டையிடும் குயில் (indian cucoo) இதற்கு ஒரு உதரணம்.
   தங்கள் இறகுகளைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்கும், ஒரு அளவு வரை இறகுகளின் ஈரம் சேராதிருக்கவும் பறவைகள் தங்கள் இறகுகளைக் கோதிக்கொள்கின்றன. இப்படி இறகுகளைத் தூய்மையாக வைத்திருப்பதனால் அவற்றின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. இறகுகள் வளரத் தொடங்கும்போதே பறவைக் குஞ்சுகள் கோதிக்கொள்ள ஆரம்பிக்கின்றன. சிறுவயதில் இதற்காக நிறைய நேரம் செலவிடுகின்றன பறவைகள்.
   முதிர்ந்த பறவைகள் இந்தப் பழக்கத்தை கடைசிவரை தொடர்கின்றன. அவற்றின் உடலின் பின் முனையில் வாலுக்குச் சற்று மேலுள்ள எண்ணெய்ச் சுரப்பியிலிருந்து எண்ணெயை அலகால் கொத்தியெடுத்து இறகுகளில் தடவிக் கொள்கின்றன. இந்த எண்ணெய்ப் பிசுபிசுப்பு இறகுகளில் திடிரென்று நீர் சேராமலும், இறகுகளின் மென்மையையும் காக்கிறது. இறகுகளின் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்தவும் இந்த எண்ணெய் உதவுகிறது.
   இறகுகளைக் கோதிக்கொள்வதுடன் இவை மண்ணில் புரளவோ அல்லது தண்ணீரில் குளிக்கவோ செய்கின்றன. வாத்துக்கள் தலையைத் தண்ணீரில் முக்குகின்றன. பிறகு சிறகு விரித்து உடம்பை உதரிக் கொள்கின்றன,
   முதுகைச் சொறிந்து கொள்ளவேண்டும் என்று தோன்றும் போது, நமக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறதல்லவா. அதைப் போல பரவைகளுக்கும் தங்கள் உடலில் அலகு எட்டாத இடத்தில் எண்ணெய்த் தேய்ப்பதற்கு இணைப் பறவையின் உதவியை நாடுகின்றன.

சோ.ஞானசேகர்.

இயற்கை வளங்களை காப்போம் பறவைகளை வாழவிடுவோம்

Wednesday, October 6, 2010

பூச்சிகளும், வண்டுகளும்

பூச்சிகளுக்கும் பெர்சனாலிட்டி உண்டு
   நமது கண்களுக்கு எல்லா பூச்சிகளும், வண்டுகளும் ஒரே மாதிரிதான் தெரிகின்றன. ஆனால் அவற்றுக்கும் தனித்தனியான ஆளுமை (பெர்சனாலிட்டி) உண்டு. நம்பமுடியவில்லை அல்லவா? ஆனால் விஞ்ஞானிகள் அப்படித்தான் கூறுகின்றனர்.
   சில பூச்சிகள் மணிதர்களைப் போலவே 'கூச்ச சுபாவம்' உள்ளவையாக இருக்கின்றன, சில பூச்சிகளோ அதிரடிப் பார்ட்டிகளாக இருக்கின்றன என்று டெப்ரிசென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  "உறுதி, தடாலடியாகச் செயல்படுவது, சுறுசுறுப்பு, மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறுவது போன்றவை பூச்சியினங்களில் கணக்கிடப்பட்ட பொதுவான ஆளுமைப் பண்புகள். இவை, ஒவ்வொரு பூச்சி, வண்சுகளுக்கும் வேறுபடுவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பூச்சி, கூச்சமானதா அல்லது துணிவானதா என்பதை, அவை அபாயகரமான சூழலில் எப்படி செயல்படுகின்றன அல்லது தங்களின் இருப்பிடங்களில் இருந்து எவ்வளவு நேரத்தல் வெளியே வருகின்றன என்பதை கொண்டு அறியலாம்" என்கிறார், இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரன எனிககோ கையரிஸ்.
   இந்த ஆய்வின்போது, ஒரு குறிப்பிட்ட பூச்சியின் வசிப்பிடத்தின் அருகே சில பொருட்களை விஞ்ஞானிகள் வைத்தர்கள். அப்போது எவ்வளவு வேகமாகப் பூச்சகள் அந்தப் பொருட்களை அடைகின்றன, ஆராய்கின்றன, எந்த வேகத்தில் அவை நகர்கின்றன என்று கவனமாகக் கண்கணித்தார்கள். அந்த ஆய்வில், ஒவ்வொரு பூச்சியும் ஒவ்வொரு விதமாக நடநது கொண்டது. ஒரு பூச்சி தயக்கம் கொண்டது அல்லது துணிச்சலானது என்று கண்டபிடிக்கப்பட்டல், அது எல்லா சூழ்நிலைகளிலும் அப்படியே நடந்து கொண்டது.
  'கிரிக்கெட்' பூச்சிகளில் ஆதிக்கம் செலத்தும், தலைவர்களைப் போல நடந்துகொள்ளும் ஆண் பூச்சிகள், பெண் பூச்சிகளை எளிதில் கவர்ந்து விடுவது தெரிய வந்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

படித்தது...

சோ.ஞானசேகர்.

இயற்கையை இயற்கையாக இருக்க உதவுங்கள்.

Tuesday, October 5, 2010

கரையான் புற்றுகள்

பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்
   கிராமப்புறங்களில், கரையான்கள் உயரமாகக் கட்டியிருக்கும் கரையான் புற்றுகளைக் காணலாம். அந்தக் கரையான் புற்றுகளைக் கொண்டு பருவ மாற்றம்,சுற்றுச்சூழல் மாற்றத்தை கணிக்கலாம் என்ற புதிய தகவலைக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.
   கார்னகி நிறுவனத்தின் உலக சுற்றுச்சூழலியல் துறை ஆய்வாளர்கள், இது தொடர்பான ஆய்வை ஆப்பிர்க்காவின் சவான்னா புல்வெளிகளில் மேற்கொண்டனர். அவர்கள் இதற்கென்று வானில் இருந்து படமெடுப்பது, வரைபடங்களை அலசுவது போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தினர். அவற்றின் மூலம், 192 சதுர மைல் பரப்பளவில் அமைந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரையான் புற்றுகள் ஆய்வு செய்யப்பட்டன.
   கரையான் புற்றுகளின் அளவு, அவை ஒரு பகுதியில் அதிகமாக அல்லது குறைவக அமைந்திருக்கும் விதம் ஆகியவற்றுக்கும், வருடாந்திர மழையளவுடன் இணைநத தாவரவியல், நில அமைபபு ஆகியவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
  கரையான்கள் அதிக ஈரபபதமாகவும், அதிக உலர்வாகவம் இல்லாத, எளிதாக தண்ணீர் வடியக்கூடிய பகுதியை தேர்ந்தெடுத்துத் தங்களின் புற்றுகளை அமைக்கின்றன. அப்படி சவான்னா நிலபபகுதியில் சீப்லைன்ஸ் எனப்படும் சரிவுகளில் கரயான்கள் அதிகமாகப் புற்றுகளை அமைத்திருந்தன.
  கரயான் புற்றுக்கும், இயற்கைச் சூழலுக்கும் நல்ல உறவு உள்ளது. மணணியல், நீரியல் போன்றவற்றில் மாற்றங்களைச் சுடடிக்காட்டுபவையாக புற்றுகளை மாற்றியுள்ளது. கரையான் புற்று உள்ள இடத்தில் எந்த மாதிரியன தாவரம் வளரும், சுற்றுச்சூழலில் என்ன மாற்றம் ஏற்படக்கூடும் என்பதை எலலாம் புற்றுகள் மூலமே அறியமுடிகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

படத்தது..

சோ.ஞானசேகர்.

சுற்றுச்சூழலைப் பதுகாப்போம்.


Tuesday, September 14, 2010

இளநீர்

இளநீரால் ஏற்படும் உடல் ஆரோக்கிய பலன்கள்.

     இயற்கையன்னை நமக்கு கொடுத்த சிறந்த குடி நீர் இளநீர். இது நமக்கு இயற்க்கையின் வரப்பிரசாதம் என்று கூட சொல்லலாம். இளநீரை சுவைக்காக உபயோகப்படுத்தும் பானம் என்று சொல்லமுடியாது. உலகில் சிறந்த இயற்கை மூலிகை பானமாக கூறப்படுகிறது.
இளநீரின் பலன்களைப்பற்றி சில குறிப்புகள்.
     இளரநீர் நம் உடலை குளுமையாகவும், சரியான தட்பவெப்ப நிலையிலும் வைக்கிறது. இளரநீர் ஒரு நோய் தடுப்பாற்றல் பானமாகும் இளநீரில் "மோனோலாரின்" என்னும் நோய் தடுக்கும் மருந்து உள்ளது. இதனால் நோய்தடுக்கும்சக்தி இதை குடித்தவுடன் நம் உடலில் பரவுகிறது. மேலும் ஒரு செல் உயிரினங்களினால் ஏற்படும் நோய்கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
    மேலும் கொடுமையான நோயாகிய ஹெச்ஐவி, ப்ளு போன்ற நோய்களில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி இளநீரில் உள்ளது. சிறு நீரகத்தில் ஏற்படும் அனைத்து நோய்களிலிருந்து இளநீர் நம்மை பாதுகாக்கிறது. சிறு நீரகத்தில் உண்டாகும் கற்களை கரைப்பதற்கு இது சிறந்த மருந்து.
  குழந்தை பருவத்தில் அதாவது 1முதல் 3வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அனைத்து விதமான வயிறு சம்பந்தப்பட்ட நோய், புழுக்கள் பரவுதல் ஆகியவற்றைத் தடுக்கிறது. சிறு நீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீரை உட்கொள்வதால் சிறந்த பயன் அடையலாம்.மலேரியா, டைபாய்டு, வாந்தி போன்றவற்றை கட்டுப்படுத்தும்.
உடம்பு எடை அதிகாமா உள்ளவர்கள் இளநீரை உட்கொள்வதன் மூலம் எடையைக் குறைக்கலாம். இளநீரில் ஆக்கசக்கிகள் அதிகம்க உள்ளது.

இளநீரில் உள்ள வேதிப் பொருட்களின் அளவு
மொத்த திடப்பொருள் கி  % 6.5
குளுக்கோஸ், பிராக்டோஸ் மி.கி % 4.4
தாதுப்பொருட்கள் மி.கி  % 0.6
புரதச்சத்து  மி.கி % 0.01
கொழுப்புச்சத்து மி.கி % 0.01
அமிலத்தன்மை மி.கி 4.5
பொட்டாசியம் மி.கி % 290.0
சோடியம் மி.கி % 42.0
கால்சியம் மி.கி % 44.0
மக்னீசியம் மி.கி % 10.0
பாஸ்பரஸ் மி.கி % 9.2
இரும்புச்சத்து மி.கி % 106.0
காப்பர் மி.கி % 26.0

100 கிராம் இளநீரில் கொடுக்கும் கலோரி
அளவு 17.4
இளநீரின் இயல்புகள்
· இனிப்புச் சுவை நிறைந்தது.
· குளுமை தரக்கூடியது.
· எளிதில் ஜீரணமாகக்கூடியது.
· பித்த வாதத்தை குணப்படுத்தும் தன்மையுடையது.
· பசியைத் தூண்டக்கூடியது
· நீர்ப்பெருக்கியாக செயல்படக்கூடியது.
· புத்துணர்வு தரக்கூடியது.
· உடல் வெப்பத்தைத் தணிக்கக்கூடியது.
· உடலில் உள்ள நீர்ச்சத்துக் குறையைப் போக்கும் தன்மை கொண்டது

இவ்வளவு பயன் உள்ள இளநீரை உட்கொண்டு நோயற்றவாழ்வு வாழ்வோமாக!

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள்.

படித்ததை பகிர்கிறேன்.

சோ.ஞானசேகர்..



Monday, September 13, 2010

காட்விட் பறவை.

உணவில்லாமல் 11 ஆயிரம் கி.மீ. தூரம் பறக்கும் பறவை

      ஓய்வே எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து 11 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பறப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். தலை கிறுகிறுத்துவிடும். ஆனால் அந்தச் 'சாதனையைப்' புரிகிறது, 'காட்விட்' என்ற பறவை, தொடர்ந்து எட்டு நாள் பறக்கும் இப்பறவை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தனது உடல் எடையில் 0.41 சதவீதம் அளவு உணவைக் கிரகித்துக் கொண்டு புயல் வேகத்தில் பயணத்தை மேற்கொள்கிறது.
  ஒவ்வொரு இலையுதிர்க் காலத்திலும் அலாஸ்காவில் இருந்து நியூசிலாந்துக்கு இந்த எட்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறது காட்விட்.
  இந்தப் பறவையானது இடைவிடாது தொடர்ந்து பறக்கிறது. ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ ஒருமுறை கூட பயணத்தை முறிப்பதில்லை. வசந்த காலம் வந்ததும் மறுபடி நியூசிலாந்தில் இருந்து அலாஸ்காவுக்கு 11 ஆயிரம் கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்கிறது.
  ஸ்வீடனின்லண்ட் பல்கலைக்கழகம் சுற்றுச்சூழலியல் பேராசிரியர் ஆண்டர்ஸ் ஹெடன்ஸ்ட்ராம், எப்படி இந்தப் பறவை இனத்தால் இவ்வளவு தூரம் இடைவிடாமல் பறக்க முடிகிறது என்று வியந்தார், அதுகுறித்து ஆராய்ந்தார்.
  தொடர்ச்சியாக நீண்ட துரத்துக்குப் பறப்பதில், மனிதனால் உருவாக்கப்பட்ட விமானங்களை விட மிகச் சிறந்தது இந்தப் பறவை என்கிறார் ஆண்டர்ஸ்.
    தொடர்ந்து நீண்ட தூரம் பறந்த விமானத்துக்கான சாதனைக்குரிய கின்டிக் ஸெபர். அது ஓர் ஆளில்லாத சூரியசக்கி விமானம். அது தொடர்ந்து 82 மணி நேரம் காற்றில் பறக்கும். அதவது தொடர்ந்து மூன்றரை நாட்களுக்குப் பறந்து கொண்டே இருக்கும். ஆனால் காட்விக் பறப்பதோ தொடர்ச்சியாக எட்டு நாளைக்கு.
  ஆனால் இந்தப் பறவையை இடைநிற்காமல் தொடர்ந்து 11 ஆயிரம் கிலோமீட்டர் பறக்க வைப்பது எது? எப்படி 8 முழு நாட்களும் இவை உறக்கம் உணவின்றிச் சமாளிக்கின்றன?
    அதற்கான ஒரு விளக்கம், மற்ற பறவைகளுடன் ஒப்பிடும்போது இவை பறப்பதற்க்குக் குறைவான சக்தியையே பயன்படுத்துகின்றன என்பது. இப்பறவைகள் தாம் பறக்கும் ஒவ்வெரு மணி நேரத்துக்கும் ஒரு முறை தனது உடல் எடையில் 0.41 சதவீத அளவை உணவாகக் கிரகித்துக் கொள்கின்றன என்கிறார் ஆன்டர்ஸ்.
   "மற்ற பறவைகளுடன் ஒப்பிடும்போது இது மிக மிகக் குறைவான அளவு" என்று விளக்குகிறார் ஆண்டர்ஸ். இது தவிர வேறு சில காரணங்களும் இருக்கின்றன. முழுப் பயணத்துக்கும் சக்தியை எடுத்துச் செல்லும் வகையில் பறவையின் உடல் எடையும் அளவும் சரியான விகிதத்தில் இருப்பது முக்கியாமான ஒன்று.
  'காட்விட்' பறவைக்குச் சக்தியை அளிப்பது கொழுப்பும், புரதமும்தான். காற்றின் எதிர்ப்பைக் குறைக்கும் 'ஏரோடைனமிக்' உடல் அமைப்பும் உதவுகிறது என்று தெரியவந்திருகிறது.
  மற்று ஒருபறவை ஆராய்ச்சியாளராகிய ராபர்ட், "காட்விட்ச்' பறவையின் உடலில், "சேட்டிலைட் டிரான்ஸ் மிட்டர்'களை அமைத்தார். அந்த, "டிரான்ஸ் மிட்டர்' ராபர்ட் டின் கம்ப்யூட்டருக்கு, பறவை பறக்கும் திசையிலிருந்து சிக்னல்களைக் கொடுத்தபடி இருந் தது. அந்த பறவை பறக்கத் துவங்கியது. அப்பறவை, ஒன்பது நாட் களில் 11 ஆயிரம் கி.மீ., பறந்தது. "இந்த பறவைகளின் நீண்ட தூர பயணம் மிகப்பெரிய சாதனை, இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை' என, ராபர்ட் தெரிவித்துள்ளார்.

படித்தது..

சோ.ஞானசேகர்..

Wednesday, September 8, 2010

தேனீக்கள் குறைவதால் உணவு உற்பத்தி பாதிப்பு


  தேனீக்கள் குறைந்து வருவதால் செடிகளில் மகரந்த சேர்க்கையும் குறைந்து உலக அளவில் இது உணவு தானியங்கள் உற்பத்தியில் பாதிப்பை எற்படுத்தும் என்று கனடாவை சேர்ந்த விஞ்ஞானி வருத்தம் தெரிவித்துள்ளார். கனடாவில்டோரண்டோ பல்கலை ஆராய்ச்சியாளர் ஜெம்ஸ் தாமஸ். இவர் கொலராடோவின் பாறைகள் நிறைந்த மலைப்பகுதியில் கடந்த 17 ஆண்டுகளாக தேனீகள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார்.

    இவரது ஆராய்ச்சியில், பிரிட்டனில் தேனீக்கள் பெரிய அளவில் குறைந்து செடிகளில் மகரந்தசேர்க்கை 50 சதவீதம் குறைந்துள்ளது. இது பெரிய அளவில் உணவு தானியங்கள் உற்பத்தியில் பாதிப்பை எற்படுத்தும். பிரிட்டனில் இந்த பாதிப்பு அதிகளவில் உள்ளது. மற்ற நாடுகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை.

  பிரிட்டனில் தான் தேனீக்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. பட்டாம்பூச்சி மற்றும் சில பூச்சிகள் இருப்பிட பற்றாக்குறை, சீதோஷண மாற்றம் போன்ற காரணங்களால் குறைந்து வருகின்றன என்று தெதிவித்துள்ளார்.

நன்றி தினகரன்..

இற்கையுடன் உயிரினங்களை வாழவிடுவோம்.


சோ.ஞானசேகர்.

Saturday, September 4, 2010

இயறக்கை நமக்கு என்ன தருகிறது?

    இயற்கைதான் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், பூமி தோன்றியது முதல் தாய் போல அனைத்து உயிரினங்களையும் காலங்காலமாக சந்தோஷமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பொழுதைக் கழிப்பதற்ககு பணம் சேர்ப்பதற்கு இற்கைதான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது.

   காடுகள், புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், கடற்கரையோர கழிமுகப் பகுதிகள், மீன்வளம் மிகுந்த ஆழ்கடல் பகுதிகள் உள்பட இற்கையின் பல்வேறு அம்சங்கள், நாம் உயிர் வாழத்தேவையான காற்று, நீர், உயிர்சத்து, ஊட்டச்சத்து போன்ற வற்றை உற்பத்தி செய்து வருகின்றன. நம்மிடம் எந்தப் பிரதிபலனும் எதிர்பாரமல் இவ்வளவையும் செய்து கொண்டிருகின்றன. இவை அனைத்தின் உற்பத்தியும் அதிவேகமாகக் குறைந்து வருவதைப் பற்றித்தான் விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

  உலகிலுள்ள 650 கோடி பேரும் இயற்கையைச் சார்ந்தே வாழ்க்கை நடத்தினாலும் அதிலிருந்து நாம் வெகுதுரம் விலகி வந்துவிட்டோம். இற்கை வளங்களின்றி நம்மால் வாழ முடியாது என்பதை இந்த நிலையிலும் உணர மறுக்கிறோமா? ''இற்கை இன்றி நம்மால் வாழ முடியுமா?'' இந்தக் கேள்வியை மீண்டும் ஒரு முறை நமக்குள்ளேயே சிந்தித்துப் பார்ப்போம்.இயற்கையைப் பாதுகாப்போம்.

இயற்கையோடு ஒத்து வாழுங்கள்.


நன்றி தினமணி, சிறுவர்மணி.

சோ.ஞானசேகர்.

Friday, August 6, 2010


கேள்விக்குறி
  "?' - இந்தக் கேள்விக்குறி, புராதன கிரேக்க-லத்தீன் மொழிகளிலிருந்து வந்தது. தொடக்க காலத்தில் நிறுத்தற் குறிகள் (Punctuation), வாசகங்களின் அர்த்தத்தை சரியாகப் புரிந்துகொள்வதற்காக பயன்படுத்தப்படவில்லை. அக்காலத்தில் உரக்க வாசிப்பதுதான் வழக்கமாக இருந்தது. வாசிக்கும்போது, வாக்கியத்தின் அம்சங்களுக்கு அழுத்தம் கொடுப்பது எப்படி, தற்காலிகமாக எங்கே இடைநிறுத்தி மூச்சுவிட்டுக் கொள்ள வேண்டும் போன்றவற்றை குறிப்பிடத்தான் நிறுத்தற் குறிகள் பயன்படுத்தப்பட்டன.

  லத்தீன் மொழியில் ஒரு வாக்கியத்தின் முடிவில் கேள்வியைக் குறிப்பிடுவதற்காக "கொஸ்டியோ' (Questio)  என்று எழுதுவார்கள். அச்சு இயந்திரங்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு, புத்தகங்களை கையால் பிரதி எடுப்பதுதான் வழக்கமாக இருந்தது. எழுதும் வேலையைக் குறைப்பதற்காக பல வார்த்தைகளுக்கு சுருக்கெழுத்துகளை ஏற்படுத்தினார்கள். அப்படி Questio என்பது முதலில் Qo என்றானது. ஆனால் இது மற்ற சில சுருக்கெழுத்துகளுடன் சேர்த்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்பு இருந்ததால்  O வின் மேலே Q என்றெழுதத் தொடங்கினார்கள். விரைவிலேயே Q வரையப்பட்டதைப் போன்ற ஒரு அடையாளம் ஏற்பட்டது. அதன் கீழுள்ள O ஒரு புள்ளியாக மாறியது. ஒன்பதாம் நூற்றாண்டில் கிரிகோரியன் ஸ்துதி கீதங்கள் பாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட நிறுத்தற் குறிகளில் இன்றைய கேள்விக் குறியும் இருந்தது. ஆனால், அது சற்று வலது பக்கம் சரிந்திருந்தது. அதுமட்டுமல்ல, அது அன்றைய முற்றுப் புள்ளியைக் குறித்தது. பதினைந்தாம் நூற்றாண்டில் அச்சிடுவது தொடங்கப்பட்டதோடு முற்றுப்புள்ளி, ஆச்சரியக்குறி போன்ற நிறுத்தற் குறிகளைத் தொகுக்க வேண்டி வந்தது. 1566-இல் ஆல்டொமனுஸியோ என்பவர் முதலாவது நிறுத்தற் குறி நூலைப் பிரசுரித்தார். அதில் இன்றைய கேள்விக்குறி இருந்தது.


சோ.ஞானசேகர்.







Monday, August 2, 2010

தேனீ
      தேனீ அதன் மூக்காலோ,​​ வாயாலோதான் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.​ அது உண்மையில்லை.​ தேனீயிடமிருந்து வரும் ரீங்கார ஓசை, அதன் இறகுகளின் மிக விரைவான துடிப்பால்தான் ஏற்படுகிறது.​ அப்படி இறகுகள் துடிப்பதன் மூலம்தான் தேனீ பறக்கிறது.​ அதன் இறகுகள் நொடிக்கு நானூறு முறை துடிக்கின்றன.​ அதிவிரைவான இந்த அசைவு காற்றில் உண்டாக்குகிற அதிர்வு நம் காதை அடையும் போது நாம் அதை ரீங்காரமாக உணர்கிறோம்.
     சமூக வாழ்க்கை நடத்தும் தேனீக்களின் கூட்டில் ஒரே ஒரு ராணித்தேனீதான் இருக்கும்.​ அந்தக் கூட்டில் அதுதான் சர்வாதிகாரி.​ கூட்டில் இன்னும் இரண்டு வகை தேனீக்களும் இருக்கும்.​ கூட்டை நிலைக்கச் செய்வதற்காகப் பாடுபடும் பெண் தேனீக்கள் ஒரு வகை.​ இவை இனப்பெருக்க திறனற்றவை.​ இன்னொரு வகை தேனீக்கள்,​​ சோம்பேறியான ஆண் தேனீக்கள்.
       ராணித் தேனீ,​​ மற்ற தேனீக்களைவிட உருவத்தில் பெரியதாக இருக்கும்.​ வேலைக்காரிகளான பெண் தேனீக்கள்தான் தேனும்,​​ மகரந்தப் பொடியும் சேகரிக்கும்.​ மெழுகால் கூடு கட்டுவது,​​ கூட்டைச் சுத்தப்படுத்துவது,​​ குஞ்சுத் தேனீக்களுக்கும்,​​ ராணித் தேனீக்கும் உணவு கொடுப்பது முதலான பல வேலைகளையும் பெண் தேனீக்கள்தான் செய்கின்றன.​ ​
   வேலைக்காரத் தேனீக்கள் சேகரித்து வைத்த தேனைக் குடிக்கின்ற வேலையைத்தான் சோம்பேறிகளான ஆண் தேனீக்கள் செய்யும்.​ ஆண் தேனீக்களின் உடல் அமைப்பும்,​ தேனோ மகரந்தமோ சேகரிப்பதற்கு ஏற்ற விதத்தில் இருக்காது.​ இவை எண்ணிக்கையில் குறைவாக இருக்கும்.​ இவை குறிப்பிட்ட காலங்களில் ராணித் தேனீயுடன் இணை சேர்கின்றன.​ தேனீக்களின் சமூக வாழ்க்கை நிலைப்பதற்கு ஆண் தேனீக்கள் மிகவும் அவசியம்.​ ராணித் தேனீக்கள் கூட்டின் அதிபதிகள் என்பதில் சந்தேகம் இல்லை.​ ஆனால் இவை அத்தனை வேலைக்காரத் தேனீக்களையும் சார்ந்து வாழ்கின்ற "முட்டையிடும் இயந்திரங்கள்" மட்டுமே.
   ராணித் தேனீக்களின் மூளை,​ வேலைக்காரத் தேனீக்களின் மூளையைவிட சிறியதாக இருக்கும்.​ ஆனால்,​​ ராணித் தேனீ மட்டும்தான் முட்டையிடும் திறன் பெற்றிருக்கிறது.​ கூட்டில் ஒன்றிற்கும் அதிகமான ராணிகள் இருப்பதற்கு,​​ ஏற்கனவே கூட்டில் இருக்கும் ராணி அனுமதிப்பதில்லை.​ ராணித்தேனீ முட்டையிடும்.​ முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் ராணியாக வேண்டுமா அல்லது வேலைக்காரர்கள் ஆகவேண்டுமா என்று முடிவு செய்வது வேலைக்காரிகளான பெண் தேனீக்கள்தான்.
      வேலைக்காரத் தேனீக்கள் குறிப்பிட்ட காலங்களில் சில முட்டைகளை கூட்டின் கீழ் முனையில் அமைத்திருக்கிற "ராணியறை'களுக்கு மாற்றுகின்றன.​ ஒவ்வொரு தேன் கூட்டிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் ராணியறைகள் இருக்கும்.​ ஆனால் அவை மற்ற அறைகளைவிட மிகப் பெரிதாக இருக்கும்.​ ராணியறைகளில் பிறக்கின்ற குஞ்சுகளுக்கு வேலைக்காரத் தேனீக்கள் பிரத்தியேகமான உணவை ஊட்டுகின்றன.​ இங்கே வளர்ந்து வருகிற பெண் தேனீக்கள்தான் எதிர்காலத்தில் ராணித் தேனீக்களாக இருக்கும்.​ ராணித் தேனீக்களின் பிரத்தியேகத் தன்மைகளுக்கு முக்கியக் காரணம்,​​ அவற்றின் உணவு முறையில் உள்ள மாற்றம்தான்.
     புதிய ராணி வெளியே வரும்போது,​​ ஏற்கனவே இருக்கும் ராணி கூட்டமான வேலைக்காரத் தேனீக்களுடன் இடத்தை விட்டுச் சென்றிருக்கும்.​ அவை வேறொரு இடத்தில் புதிய கூடமைத்து வாழத் தொடங்குகின்றன.​ சில சமயம் அறைகளின் மேல் படலத்தைத் திறந்து வெளிவரும் புதிய ராணிகள் இதுபோன்று வேலைக்காரத் தேனீக்களுடன் இடம் விட்டுச் செல்கின்றன.​ ஒன்றிற்கு மேற்பட்ட ராணிகள் ஒரே நேரத்தில் வெளியே வரும்போது,​​ அவர்களுக்கிடையே மிகக் கடுமையான சண்டை நடக்கும்.​ ஒரு ராணி மட்டுமே மிஞ்சும்வரை இந்தப் பலப்பரீட்சை தொடரும்.​ புதிதாக வெளியே வந்த ராணிக்கும்,​​ கூட்டில் ஏற்கனவே இருந்துகொண்டிருந்த ராணிக்கும் இடையே யாராவது ஒருவர் வெற்றி பெறுவதுவரை போட்டி நடக்கிறது.​ அதனால் ஒரு தேன் கூட்டில் ஒன்றிற்கும் மேற்பட்ட ராணிகள் இருக்கும் நிலை ஏற்படுவதில்லை.
   தேனீக்கள் நிறைய தேன் உள்ள பூக்களுடைய ஒரு இடத்தைக் கண்டுபிடித்த பிறகு, திரும்பி வந்து அந்தச் செய்தியை மற்ற தேனீக்களிடம் தெரிவிக்கின்றன.​ இத்தகைய கருத்துப் பரிமாற்றத்திற்காக,​​ அவை குறிப்பிட்ட விதமான நடன முறையைக் கையாள்கின்றன.​ ஒன்று,​​ வட்டத்திற்குள் வட்டமாகப் பறப்பது.​ இந்த நடன முறைக்கு,​​ தேனுள்ள இடம் கூட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் உள்ளது என்று அர்த்தம்.​ இந்தச் செய்தியைத் தெரிவிக்கும் நடனத்தை ஆடிக்கொண்டே அந்தத் தேனீக்கள்,​​ தான் சேகரித்த உணவை கூட்டினுள்ளே இருக்கும் மற்ற தேனீக்களுக்குக் கொடுக்கும்.​ இதன்மூலம்,​​ நூறு மீட்டர் தொலைவில் அது கண்டுபிடித்த உணவின் சுவையையும்,​​ மணத்தையும் மற்ற தேனீக்கள் புரிந்துகொள்ளும்.​ உடனே அனைத்துத் தேனீக்களும் நாற்புறமும் பறந்து அந்த பூக்களைத் தேடிப் போகும்.​ இந்த "வட்ட நடன'த்திலிருந்து,​​ நூறு மீட்டர் தொலைவில் பூக்கள் இருக்கின்றன என்று அறிந்துகொள்ளலாமே தவிர,​​ பூக்கள் இருக்கும் சரியான இடத்தை ​ புரிந்துகொள்ள முடியாது.​ அதனால்தான் அவை குறிப்பிட்ட இலக்கு நோக்கிச் செல்லாமல் நாற்புறமும் பறந்து தேடப் போகின்றன.
   தேனுடைய பூக்கள் இருக்கும் இடத்தைச் சரியாகத் தெரிவிக்கும் நடனமுறை ஒன்றும் தேனீக்களிடம் உண்டு.​ இந்த முறைக்கு "வேகல்' (waggle)​​ நடனம் என்று பெயர்.​ முதலில் தேனீ நேர்க் கோடாக பலமாக நடுங்கிச் செல்லும்.​ சற்று மேலாகச் சென்ற பிறகு ஒரு புறமாகத் திரும்பி கீழே வந்து மீண்டும் முதலாவது நேர்க்கோடு வழியே மேலே செல்கிறது.​ பிறகு முதலில் திரும்பியதற்கு எதிர்த்திசையில் திரும்பி ​ கீழே வந்து மீண்டும் நேர்க்கோட்டில் திரும்பி மேலே செல்கிறது .​ நடனமாடும் தேனீ,​​ இந்த நடனத்தின் மூலமாக மற்ற தேனீக்களுக்கு இரண்டு விஷயங்களைத் துல்லியமாக அறிவிக்கிறது.​ ஒன்று,​​ புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட உணவு கிடைக்கும் இடம்,​​ கூட்டிலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்ற விஷயம்.​ இரண்டு,​​ சூரியனையும்,​​ கூட்டையும் தொடர்புபடுத்துகிற நேர்க்கோட்டிலிருந்து எத்திசையில் எவ்வளவு சரிவான கோணத்தில் அந்த இடம் அமைந்திருக்கிறது என்பது.
நடனத்தின் வேகத்திலிருந்தும்,​​ அதே நடனத்தை திரும்பத்திரும்பச் செய்வதிலிருந்தும் உணவு இருக்கும் இடம் எத்தனை தொலைவில் இருக்கிறது என்று மற்ற தேனீக்களுக்குத் தெரிந்துவிடும்.​ அது மட்டுமல்ல,​​ போகவேண்டிய இடம் கூட்டிலிருந்து சூரியனுக்கு நேராக இருக்கிறதா?​ அல்லது எதிர்திசையில் இருக்கிறதா?​ பக்கவாட்டில் இருக்கிறதா என்பதுபோன்ற விவரங்களும் சரியாகப் புரிந்துவிடும்.​ நடனம் அதிக நேரம் நீடித்தால் உணவு மிக நிறைய இருக்கிறது என்று அர்த்தம்.
   ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கால்வோன்ப்ரிஷ் எனும் உயிரியல் விஞ்ஞானிதான் ஆய்வு செய்து,​​ தேனீக்களின் இந்த செய்திப் பரிமாற்றத்தைக் கண்டுபிடித்தார்.​ ​ ​ ​
  தேனீக்களின்,​​ அவற்றின் முட்டைகளிலிருந்து வெளிவருகிற லார்வாக்களின் முக்கிய உணவு தேன்தான்.​ பூவிலுள்ள தேனும்,​​ தேன் கூட்டிலுள்ள தேனும் வித்தியாசமானவை.​ தேனீ,​​ பூவிலிருந்து தேனெடுத்த பிறகு அந்தத் தேன் நேராக,தேனீயின் வயிற்றிலுள்ள இரண்டு அறைகளில் முதலாம் அறைக்குச் செல்லும்.​ ஒரு சிறிய "வால்வி 'ன் செயல்பாட்டினால் இந்தத் தேன் இரண்டாவது அறைக்குக் கடப்பதில்லை.​ பூவிலிருந்து சேகரித்த தேனுடன் கூட்டை அடைகிற தேனீ,​​ இந்தத் தேனை கூட்டில் உள்ள சில பிரத்தியேக தேனீக்களுக்குக் கொடுக்கிறது.​ அவை ஒன்றுக் கொன்று இந்தத் தேனை "கை'மாற்றிக் கொள்கின்றன.​ இந்த செயல்களுக்கிடையில் அதில் சில நொதிகள் (enzyme)​ சேரும்.
  அதன்பிறகு இந்தத் தேன்,​​ கூட்டின் பிரத்தியேக அறைகளில் பாதுகாக்கப்படுகிறது.​ சில பிரத்தியேக தேனீக்கள்,​​ அவற்றின் சிறகுகளை விசிறியாகப் பயன்படுத்தி தேனில் உள்ள நீர்மையின் அளவைக் குறைக்கின்றன.​ இப்போது தேன் கூட்டில் தேன் தயாராகிறது.​ ஒரு சாதாரண தேன் கூட்டில் 45 கிலோகிராம் வரை தேன் சேகரிக்கலாம்.​ ஒரு கிலோகிராம் தேனுண்டாக்க ஒரு தேனீ ஒரு கோடி பூக்களிலிருந்து தேன் சேகரிக்கவேண்டும்.​ ஒரு பயணத்தில் ஒரு தேனீ 600 பூக்களைச் சந்திக்கும்.​ பூக்களிலிருந்து மட்டுமல்ல,​​ தேன் உண்கிற சில உயிரினங்களின் எச்சங்களிலிருந்தும் தேனீ தேன் சேகரிப்பதுண்டு.​ தேனீக்களுக்கு தேன்தான் முக்கியமான உணவு.​ எனவேதான் அவை தேன் சேகரித்து கூட்டில் பாதுகாக்கின்றன

நன்றி - தினமணி....

சோ.ஞானசேகர்.